Pages

Tuesday, February 22, 2011

மரணங்கள் மூன்று...


1. பாடகர் மலேசியா வாசுதேவன்

தமது வசீகரக்குரலால், தமிழகத்தை கட்டிப்போட்ட, அருமை பாடகர்  வாசுதேவன் அவர்களின் மறைவு.    அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் மறைந்துவிட்டார் என்றாலும், அவர்தம் குரல் என்றென்றும் ஒலித்துக்கொண்டிருக்கும்.








2. பார்வதி அம்மையார்.

சிகிச்சைக்கு வந்த மூதாட்டியை,
அரசியல் எனும் போர்வை போர்த்தி,
மனசாட்சியை கொன்றெரிந்து,
நா-தளுக்க அறிக்கைவிட்டு,
தமிழன்க்காவலர் முடியின்கீழ் ,
உம்மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்க
நா கூசுகிறது தாயே.!!






3. மனச்சாட்சி..

போன பதிவின் தொடர்சி.
ஸ்பெக்ட்ரம் ஊழலில், அன்பர் சிவக்குமார் தொகுத்த பதிவினை பார்த்து, ”முட்டாள்கள்” எனக்
முகமறியாமல் கூறிய , கழகப்பாசறையின் அடிமட்ட அன்பர் நண்பர் பாலா+ வின் மனசசாட்சிக்கு...

//அந்த சிவக்குமாரை வரச்சொல்லுங்க.இவன் முட்டாளா இருந்துகிட்டு ஊரையும் முட்டாள் ஆக்கப்பாக்கிறான்...அவன் முட்டாள் என்பதற்கு மேற்கண்ட இந்த கணக்கே சாட்சி! அந்தக்கணக்கில் என்ன முட்டாள்தனம் இருக்குதுன்னு கூட்டிக்கழிச்சுப்பாருங்க...புரியலன்னா கேளுங்க...!//

சரிண்ணே..
முட்டாளாவே இருந்துட்டுப்போறோம். ஆமாண்ணே.. ஒரு நீங்களாவது கழக ரத்ததை புறம்தள்ளிவிட்டு, நேராச்சொல்லுங்க. ராசாவின் கரம் கறைபட்டதா?.. இல்லை உத்தமரை பழிவாங்கும் நடவடிக்கையா?.
உத்தமர் எனில், நமது தானைத்தலைவர் ஏன் சோனியாவிடம் இன்னமும் மடிப்பிச்சை ஏந்திக்கொண்டுள்ளார்?.

ஆமாம் முட்டாள் என்பதற்கு கழகஅடிப்படை விதி ஒன்று இருக்குமே. அதை இந்த முட்டாளுக்களுக்கு விளக்குவீர்களா?. ( முக்கிய குறிப்பு : 1 ரூ அரிசியில் சமைத்து சாப்பிடுபவர்கள் எல்லாரும் முட்டாள்கள் எனக்கூறினால் செல்லாது..ஹி..ஹி)


//ந்த வருமானமெல்லாம் அரசுக்கு சென்றிருக்க வேண்டும் என்று சொல்லும் அடிப்படை ஞானமற்ற அவருக்கு அடுத்த கேள்வி....பி.எஸ்.என்.எல் வருமானம் மட்டுமே அரசுக்கு செல்ல முடியும்..பிற தனியார் நிறுவனங்களின் லாபம் எப்படி அரசுக்கு செல்ல முடியும்???//

ஞானம்.. மெய்ஞானம். அட..அறிவுண்ணே நீங்க..
ஆமான்ணே.. இந்த டெண்டர் விட்டிருந்தால், அந்தப்பணம் அரசுக்குச்செல்லாமல், அல்லக்கைகளுக்கா செல்லும்?
முட்டாப்பசங்க.. சரி.. அதவிடுங்க. ராசாத்தி அம்மாள் பேர்ல இருந்த நிறுவனம், பல கைகள் மாறி, உள்ளே நுழைந்ததே. ஆமாண்ணே.. அந்தம்மா  Telecommunication-ல பயங்கர அனுபவம் கொண்டவர்கள்னு இந்த முட்டாள் நாய்களுக்கு தெரியாம போச்சு.


//
அட முட்டாள்களே கருணாநிதியின் மீதான / திமுகவின் மீதான வெறுப்பை இப்படியா கண்ணை மூடிக்கொண்டு துப்புவது.....???
மல்லாக்கப்படுத்துக்கொண்டு எச்சில் துப்பிவிட்டு தன் முகத்தில் விழுவதாக குறைபட்டுக்கொண்டானானாம் ஒரு முட்டாள்....அதுபோலல்லவா உங்கள் வாதங்கள் இருக்கின்றன???
//

கழக ரத்தம் கொதிக்குதா பாஸ்?...  லூஸ்ல விடுங்க.. ஆமாண்ணே.. இதில் பிரச்சனை இல்லையென்றால், ஏண்ணே ராசாவின் நுங்கை  பிதுக்குராங்க.?.. பழைய பாக்கியா?. இல்லை, குடும்ப உறு(றி)ப்பினரா இல்லாமல் இருப்பதா?


//வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று நாம் தமிழ்த்தவளைகளாய் இருந்து கொண்டு இப்படியே பேசினால் வேறு எதிரி நமக்கு எங்கிருந்து வேண்டும்?//

ஆமாண்ணே.. வேற ந்ங்கிருந்து வரவேண்டும்?.  வரும் தேர்தலுக்கு எங்கே நிற்க உத்தேசம்?.. கள்ள , மற்றும் நல்ல ஓட்டை போட்டு உங்களை கெலிக்கவைக்கனுமுனு , வேண்டுதல் இருக்கு..


//நாகராஜசோழன் MA said... 123

    @பாலா, ஒரே ஒரு சந்தேகம், ஊழல் நடக்கவில்லை என்றால் ஏன் அவர்களே ஆட்சியில் இருக்கும் போது ஒரு மத்திய காபினட் அமைச்சரை கைது செய்து திகார் ஜெயிலில் அடைக்கின்றனர்?
//

அது பங்காளி தகறாரு பாஸ்..
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று , மக்களுக்காக, உயிரை பணயம் வைத்து, உள்ளே இருக்கிறார்..



/////ஊழல் நடந்திருக்கலாம்.....அல்லது நடக்காமலிருக்கமலாம். அதுபற்றீ நான் பேசவே இல்லை.அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சொல்லாதீர்கள் என்பதே என் கருத்து....//

ஆகா.. இது அருமை.. தலைவாழை இலை போட்டு, உப்புக்கு பக்கத்தில், கொஞ்சம் ”மலம்” வைத்ததுபோல...  பேசாம, மக்களை அடிமுட்டாப்பு^$$%$கனு சொல்லிடுங்க பாஸ்.. புண்ணியமா போகும்.


கடைசியா:
சே.. இவ்வளவு விளக்கங்கள் கொடுத்தும், ஊழல் இல்லாத ஆட்சி என்று ,உற்சாகமாக  தமிழின மக்களுக்கு பாடுபடும், நம் தலைவர்களைப்பார்த்து, அடி முட்டாப்பய சங்கம், இரு கரம் தூக்கி வணக்கம் வைக்கிறது


தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரட்டும் உங்க பணி.. சிந்தட்டும் முட்டாள்களின் ரத்தம். ஹி..ஹி..

.
.
.

Saturday, February 19, 2011

கலைஞர் கெலிச்சுட்டாரு..!! வெற்றி..வெற்றி



என் இனிய வலையுலக மக்களே ..

ஹி.ஹி  மூளையுள்ள , சுயசிந்தனையுடைய, முதுகெலும்பு வளையாத, பொதுநலம் என்பதை குறைந்தபட்சம் மதிக்கும் நண்பர்களே...( இந்த லிஸ்ட்ல கண்டிப்பா, கழக அல்லக்கைகள் வரமாட்டார்கள். அதுவுமில்லாம், இதை பதிவிட்டுவிட்டு நீக்கும் பன்னாடை, நான் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.)


தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம்.அதில் 1.76 லட்சம்கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் கழககண்மணிகள் , ஊர்ஊருக்கு மேடை போட்டு மக்களை, மாடுகள் போல ஆக்க அரும்பாடுபடுவது நமக்கு புதிதல்ல...

ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை,
(ஹி..ஹி அது நான் சொல்லவில்லை. நம்மை ஆளும் மன்னர், அதிகாலையில் மக்களுக்கு எழுதியது.)

தினமும் மின்சாரம் வருகிறதோ இல்லையோ, கழக உடன்பிறப்புகளின் வாயில், புழுத்துப்போன அறிக்கை மட்டும், தினசரி மலம்கழிப்பதைப்போல வந்துவிடுகிறது.  நிருபர்களைத்தவிர மற்ற மானமுள்ள மனிதர்கள், சிந்தித்துப்பாருங்கள். உங்க வீட்டுப்பணமா?.  இல்லை அவர்கள் அப்பன் வீட்டுப்பணமா? என்பதை.


நடந்தது என்ன?
ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே  நடந்தது என்ன?! என்பதை துபாயில் பணிபுரியும் ’சிவக்குமார் என்னும் பொறியாளர்’ அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார், இது இப்போது மெயிலில் உலா வரத்தொடங்கிவிட்டது.  ஆனால் அல்லக்கைகளின் பார்வையில், ”இணையதள கோமாளிகள் வேலையற்று விளையாடுகின்றனர்” என்ற விமர்சனம்.  இருக்கட்டும். தோழரே... எல்லா மக்களுக்கும், மூளையில் உம்மைப்போல ”உறைந்த ரத்தம்” இல்லை என்பதை, தேர்தலில் நிருபிப்போம். ( ஒரு காலத்தில் திமுகவிற்க்கு  ஓட்டுப்போட்ட ஜந்து நான் என்பதையும் நினைவுபடுத்திக்கொள்கிறேன். ”எனக்கு, நானே திட்டம்” )

”இணையத்தில் கோமாளித்தனமாக, எழுதுவதை விடுத்து, மீனவர்கள் பிரச்சனையில், தலைவரை நேரில் சென்று முறையிட்டால் தீர்வு கிடைக்கும்” என்று வாயில் முத்துக்களாக விழுகிறது. அதுவுமில்லாமல், இணையத்தில் எழுதி , என்ன ம%$^#யிரா பிடுங்கமுடியும் என்ற ஆணவக்கேள்வி வேறு?..

ஆம்.. ஊழல் இல்லையென்று பத்திரிக்கைகளிலும் எழுதி , ம^%#$#யிரை பிடுங்கியிருந்தால், நாங்கள் இணையத்தின் வாயிலாக, ஊழல் எப்படி நடந்தது என்று எழுதிப்பிடுங்கமுடியும்.. ( ஹா.ஹா. ஏன்?. தலைமை என்பது, மக்கள் தேர்தெடுத்துக் கொடுத்த பதவியா?.. இல்லை அவர், மக்களுக்குத்தெரியாமல், மன்னராக முடிசூட்டிக்கொண்டாரா?.   தெரியப்படுத்துங்கள் கழக கனவான்களே. )

இனி.. 

மெயிலில் வந்த விளக்கங்கள்
நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல் சிந்தித்து வாக்களித்து நாட்டைக்காக்கவேண்டும். அவசியம் இதைப்படித்துவிட்டு ஃபேஸ்புக், ஆர்குட், ட்விட்டர் தளங்களில் ஃபார்வர்டும் செய்யவும்.
 
க்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார்கள். அதற்காகத்தான், தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது? ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.
 
1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வசதி படைத்தவர்களாயிற்றே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.
 
நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல்.
 
தற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.
 
நியாயக் கணக்கு
ந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம்.
 
ப்போது 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ து குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்.
 
தோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா?
 
க்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள்.
 
னநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.
 
துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.
 
துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.
 
துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை.
 
இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.
 
துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.
துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.
 
துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.
 
துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.
துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.
 
துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.
 
துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.
 
ப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.
 
ரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர்.
 
வர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
 
ன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.
 
ங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.
 
னது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். 


####################

நன்றி. சிவக்குமார் அவர்களே.. எதற்கா?..  உங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு, இதைப்பற்றி விளக்கமாக சொன்னதற்கு...

ஆங்.. பணம்..பணம்.. இதை மட்டும் வைத்து என்ன பண்ணமுடியும் என்பவர்களுக்கு... 






வீடு நல்லாயிருக்கா பாஸ்.. பாவம் கஷ்டப்பட்டா இதுமாறி வீட்டை நாமும் கட்டலாம்.  தமிழ்நாடே இருளில் மூழ்கியிருந்தாலும், இங்கு 24 மணி நேரமும் மின்சாரம் உண்டு.. அட... யாரு வீடா?..  ஓனர் திகார்-ல இருக்கார். வந்ததும் கேட்டுச்சொல்றேன்..
.
.
.
அதுவரை பொறுத்திருப்போம்... 

பெரியவன் ஆனதும், உனக்கு ஓட்டுக்கு ரூ 3000..   Ok



Wednesday, February 16, 2011

கனிமொழி கைது.. பட்டாபட்டி ஸ்பெஷல் நியூஸ்

.
.
.
சென்னை: தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை கடற்படையினரைக் கண்டித்து சென்னையில்  உள்ள அந்நாட்டு தூதரகத்தை திமுகவினர் முற்றுகையிட முயன்றனர். அப்போது திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட  ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
***

யார் இந்த கனிமொழி?
இவர், திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஒரு தூண்.   சமீபத்தில்தான், அவரது உழைப்புக்குத்தகுந்த பதவி அவரை  நாடிவந்தது.   ’குடும்பம், குட்டி’ என்பதை புறந்தள்ளிவிட்டு, நாடே வீடு, மக்களே சொத்து’ என்று பொன்னான  வாழ்க்கையை, இடக்கையால் புறந்தள்ளிவிட்டு,  பூகம்ப வாழக்கைக்கு தேர்ந்தெடுத்த தியாகச்செம்மல்.

மேலும், நாட்டு மக்களுக்காக, அவரது மூன்று தலைமுறையும் அணிதிரண்டு அரசியல் இருப்பது இளைய  வாக்காளர்களுக்கு புதுச்செய்தி.   இவரது தந்தையும், நாட்டை நிர்வகுக்கும் முக்கிய பொறுப்பில் உள்ளதாக ஏஜன்சி  செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏன் இந்த கைது?.
சமீபகாலமாக, தமிழக மீனவர்கள் , இலங்கை கடற்படையினரால், சுடப்பட்டு இறப்பது தினசரி  வழக்கமாகிக்கொண்டுள்ளது.   அவரது தந்தையும், இந்த தள்ளாத வயதிலும், அதற்காக பாடுபட்டுக்கொண்டுள்ளார்.   நேற்று 106 மீனவர்கள், இலங்கை அரசால் கைது செய்யப்படுள்ள விசயம் பத்திரிக்கைகளில் வந்ததே.   அதை  கண்ணுற்ற தந்தையார்,  ‘இறப்புக்கு மட்டுமே நான் பொறுப்பு , கைதுகளுக்கு தன் மகள் பொறுப்பு’ என்று  பணிச்சுமையை பகிர்தளித்து, மக்களுக்குக்காக பாடுபட, மனதை இரும்பாக்கி,  மகளை போர்களம் அனுப்பியுள்ளார்.

எப்படி கைது?
இவர் தமிழக எம்பி என்று தெரிந்தும், போலீசார் அத்துமீறி கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்.   அதைக்கண்ட  தமிழகமே கொத்தளித்து கண்ணீர் கடலில் மூழ்கியது.   இதற்காகவா சுதந்திரம் வாங்கினோம் என்று முதிய  தலைமுறையினர் கதற,     பெண் என்றும் பாராமல், கைது செய்வதா? என இளைய தலைமுறை பரிதவிக்க,    தமிழ்நாடே கண்ணீர் கோலம் பூண்டது..  உஷ்..  இருங்க பாஸ் சோடா குடிச்சுட்டு எழுதறேன்...

க்ளக்..
க்ளக்..க்ளக்..
க்ளக்..
க்ளக்..க்ளக்..
க்ளக்..
க்ளக்..க்ளக்..

இதை கண்ணுற்ற பின்னும், ’சாதத்தில் கை வைப்பது மலத்தில் கை வைப்பது போல’ என்பதால், பேனா மற்றும்  பென்சிலை எடுத்துக்கொண்டு பேட்டி காண புறப்பட்டுவிட்டேன்..

இப்போது பேட்டி.

கலைஞர் :
வெயில்படாமல் வளர்த்த இந்த கிளி, மீனவர் பிரச்ச்னைக்கு கருவாடாக வாடியதை கண்ணுற்ற எனக்கு, மருந்து  மாத்திரைகள் சாப்பிடக்கூட தோன்றவில்லை.
துணைவியர்கள் வன்புறுத்தல், என் செவிகளில் ஏறவில்லை. இந்த நிகழ்வு, வருங்கால சந்ததிகளுக்கு ஒரு பாடம்.
நாளைய சரித்திரம், இதை பொன் எழுத்தில் பொறிக்கும் காலம்  வெகு அருகில் இருப்பதை தமிழகமே அறியும். . அதை கண்டபின்தான் , எனக்கு ஓய்வு..


து.முருகன்:
இதற்கெல்லாம் காரணம் சு.சாமி தலைவரே....   அவரை உள்ள  தூக்கிப்போடனும்..   நீங்க மட்டும் உம்-னு சொல்லுங்க, நானே  களத்தில்  இறங்கி முடிக்கிறேன்.


ஆ,வீராசாமி :
நல்லவேளை , தலைவர் என்னை கை காமிக்காம விட்டாரு.  ’கரண்ட் இருந்திருந்தா, மீனவர்கள் மானாட மயிலாட பார்த்துக்கிட்டு கடலுக்கு போகாம இருந்திருப்பாங்க’.   இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது.  கடவுள் என் பக்கமும் இருக்கார். அப்பாடா..


ஜெ.லலிதா:
’பெண் புலியுடன் மோத பெண்புலியை அனுப்பிவைத்த’, மைனாரிட்டி அரசை கண்டித்து, திருநெல்வேலியில், கழக ரத்தத்தின் ரத்தங்கள் ஆர்ப்பாட்டம் செய்யப்போகிறார்கள்.   இடம் மற்றும் நேரத்தை, கொடைநாட்டில் பொதுக்குழுவில் முடிவெடுப்போம்.   அதற்குள் மைனாரிட்டி அரசு ராஜினமா செய்யவேண்டும்.


வி.காந்த்:
இது பாகிஸ்தானின் சதி.  என்னை முதல்வராக்கினால், ஒரே வாரத்தில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என உறுதிமொழி அளிக்கிறேன்.


யுவராஜ்:
கனிமொழியை கைது செய்து போலீஸ்வேனில் ஏற்றும் காட்சியை பார்த்ததும் , மனம் சுக்குநூறாகிவிட்டது.   பின்ன என்ன சார்?.   எங்கள் தலைவர் ராகுல்காந்தியை ஈன்றெடுத்த  அன்னை,  தாயுள்ளத்தோடு வழங்கிய வேன் அது.   அதில் எங்கள் தலைவர் ராஜீவ் போட்டோ எங்கே?.   இது ஒவ்வொரு தமிழனக்கும் தலைகுனிவு.
அதைப்போக்க, ’சென்னை - திருப்பதி நடைப்பயணம்’ செல்லப்போகிறோம். அப்படி போகும் வழியில் உள்ள கிராமத்தில், “ தலைவர் ராஜீவ் போட்டோ” வைக்காத அரசாங்கத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டம் செய்வோம்.


தங்கபாலு
:
எங்கள் அன்புத்தலைவர் ராஜீவ்காந்தி. அவரது அன்பு மனைவி, எங்கள் அன்னை சோனியா. அவர், எங்களை மண்டியிடச்சொன்னால், தலை தரையில்படும் அளவுக்கு, மண்டியிடவும் தயங்கமாட்டோம்.   அவர்தான் எங்கள் தெய்வம். தமிழகத்தில் உட்கட்சி பூசல் இல்லை.   அப்படி இருந்தால், எங்கள் தலைவியின் சொல்லுக்கு கட்டுப்படுவோம். வாழ்க காங்கிரஸ்.


உ.தமிழன் :
இதெல்லாம் முருகன் செயல். ஏதோ இப்பொழுதாவது முருகன் அருளால், நல்ல புத்தி வந்ததே என்று சந்தோசப்படுங்க என் இனிய வலை உலகமக்களே..!!


டோமர் :
நான் சமீபத்தில் அதாவது 1928-ல், ஜெர்மானிய மொழியில்  இருந்து  தமிழில், திருக்குறளை மொழிபெயர்த்துக்கொண்டிருந்தேன்.   அப்போது, கதவைத் தட்டாமல் உள்ளே நுழைந்த ஜெர்மானிய பெண்ணின், கன்னத்தில் இருந்த மரு, என்னை அதிரவைத்தது.  அதற்கு என்ன பரிகாரம்? என்று முன்னோர்கள் அருளிய சமஸ்கிருத புத்தகத்தை , ஆராய்ந்தபோது, திடுக்கிடும் உண்மை விளங்கியது.
அதை நான் சொன்னால், வால்பையன் போன்றவர்கள், வசைபாடுவர்கள் என்றெண்ணி, கையது பொத்தி வாய-து மூடி, சந்தர்ப்பம் வரும்வரை காத்திருந்தேன்.  ஆரியர்கள் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள்.  திராவிடம் சுடப்பட்டே அழியும் நிலையில் இருப்பதை பார்க்கும்போது நகைப்பதா, அல்ல நடிப்பதா என்று தெரியவில்லை.  இதனுடைய மேல்விபரங்களுக்கு, ’சோ’வின் இந்த சுட்டியை சொடுக்கவும்.





மக்கள்:
ங்கொய்யாலே ... என்னாய்யா நடக்குது?.    அவரு தந்திய டாய்லெட் பேப்பர் கணக்கா யூஸ் பண்றாரு.   இந்தம்மா, நீராநாடியாவோட ஆங்கிலத்தில இழுத்து இழுத்து பேசினப்பவே, எங்க உயிர் இழுத்துக்குச்சு.

இப்ப எங்ககிட்ட, இன்னா ம^%&$யிரு இருக்குனு, ஆளாக்கு சீன் போடறானுக?. இதை பார்ததற்கு பரிகாரமா, எலெக்‌ஷ்ன் டைம்ல 10 ஆயிரம் ரூபாய் வரலே, ங்க்கொய்யா.   ஊரே குடி பெயந்து, இத்தாலில போய் செட்டில் ஆயிடுவோம்..  அப்புறம்,ஆளே  இல்லாத கடையில,  அவனுகளே அடிச்சுக்கிட்டு சாகட்டும். தூத்தேறிக....
.
.
.
கனிமொழி யார் என்று தெரியாத பன்னாடை தமிழர்களுக்காக..



இவர்தான் கனிமொழி.










.
.
.
--------------------------------------------------------------------------------


கடை'சீசீ' செய்தி..




போய் வா நதிஅலையே..

Friday, February 11, 2011

கூகுள் ஆண்டவருக்கு வயிற்றுப்பேதியா?

ஹி..ஹி

என்னாங்கய்யா நடக்குது தமிழ்நாட்டுலே.
ரொம்ப பேர் ப்ளாக் ஓப்பன் பண்ணமுடியலேனு சொல்லி கதறிக்கிட்டு  இருக்காங்க...

ஹி..ஹி.. கூகுளை ஆண்டவரையும் விலைக்கு வாங்கிட்டாங்களா?

எதுக்கும் இருக்கட்டும்...ஹி..ஹி

நிகழ்கால முதல்வர் வாழ்க,
பாரத அன்னை வாழ்க,
முன்னால் முதல்வர் அம்மா வாழ்க,
வருங்கால முதல்வர் கேப்டன்,
வருங்கால வருங்கால முதல்வர் இளங்கோவன்,
வருங்கால வருங்கால வருங்கால முதல்வர் தங்கபாலு,
வருங்கால வருங்கால வருங்கால முதல்வர் கார்த்திக்,
தயாநிதி வாழ்க,
உதயநிதி வாழ்க,
அய்யா வாழ்க,
அழகிரி வாழ்க,
கனிமொழி வாழ்க,
அன்புமணி வாழ்க,
ப.சிதம்பரம் வாழ்க,

ப்ரியங்கா வாழ்க,
ராகுல் வாழ்க..

ராஜீவ் வாழ்க..
நரசிம்மராவ் வாழ்க
ஆங்.. காங்கிரஸ் சின்ன தெய்வம் யுவராஜா வாழ்க...


ம்..ம்..

விடுபட்ட வருங்கால, பெரும்பான்மை ஓட்டுகளை தக்கவைத்துள்ள , தமிழகத்தின், ’காவல் தெய்வங்கள்’, எல்லாரும்  வாழ்க...வாழ்க.
இப்படிக்கு
பட்டாபட்டி.

( யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி.. எனக்கு டோமரை மட்டும் ’இண்ரோ’ பண்ணிவிட்டா போதும்..ஜெர்மன் படிச்சு வெள்ளக்காரன் ஆயிடுவேன்.... ஈஈஈஈஈஈ)

 முக்கிய குறிப்பு.
வெங்காயம் ,தமிழகத்தில் காலவரையின்றி தடைசெய்யப்பட்டுகிறது
மக்கள் இதனால் ஏற்படும் அசொளரியத்துக்கு மன்னிக்கவும். கண்டிப்பாக தேர்தல் அன்றுமட்டும் விதிவிலக்கு உண்டு..


Thursday, February 10, 2011

பஞ்ச நாதாரிகள்...

.
.
.
ரெண்டுநாளா மனசை அரிச்சுக்கிட்டு இருந்த விசயம், வாந்தியெடுக்கலேனா, வயிறு வலிக்கும் பிரதர். ஹி..ஹி  அதாம்பா, நம்ம கலைஞரின், “தமிழ்நாட்டில் அரசியல் நாகரிகம் இல்லை” என்ற பொ(க)ன்மொழி பற்றி.

தலைவர் மனசு வருத்தப்படும்படி எவ்வளவு கொட்டம் அடிச்சிருக்கோமே!. சே.. மனசு கஷ்டமாயிருக்கு பாஸ்..  ( யாராவது, இந்த பொழப்புக்கு, பேசாமா சாரு மாறி பின்னாடி காட்டிக்கிட்டு நின்று இருக்கலாம்னு  சொன்னீங்க...திரும்பவும் கஷ்டமாயிடும். சொல்லிட்டேன்...) 

அரசியல் நாகரீகம்னா என்னானு தெரியுமா?. போங்கய்யா போங்க.. போய் தெரிஞ்சுக்கிட்டு வந்து அரசியல்  சாக்கடையில, மூழ்கி முத்து எடுங்க. பாவம். எவ்வளவு வருட அரசியல் அனுபவம். இதுவரை வாய் மேல பல்  போட்டு யாராவது மனசு நோகும்படி பண்ணியிருக்காரா?.  சேர நாட்டுக்கு ஒரு இளவரசி, பாண்டியநாட்டுக்கு  ஒரு இளவரசன் என்று பட்டம் சூட்டிவிட்டு, சோழநாட்டுக்கு யார்? என மண்டை உடைத்துக்கொண்டிருக்கும்  பெரியவரை நக்கல், கேலி, எகத்தாளம், எள்ளிநகை.. தாங்கலையயா.. அதனாலே..அவரு காலம் வரை , யாரும் அவரை கிண்டல்  செய்யவேண்டாம். ப்ளீஸ்.. நாம கேடுகெட்டுப்போவது இது என்ன முதல்முறையா?..


அடுத்து. இவரு ஒரு பிரபலபதிவர். அன்னைக்கே ஸ்பெக்ரம் ஊழலைப்பற்றி ஒரு பதிவை போட்டார். யாரும் கேட்கலையே. ’ராசா எவ்வளவு நல்லவரு. ஊழல்னா என்னானே தெரியாத உத்தமபுருசரு. கனியிருக்க, காயை யாராவது எடுப்பாங்களா?’னு..

நானும்கூட, ‘என்னடா இந்த மனுஷன் , வெட்கமேயில்லாம Diaper போட்டுக்கிட்டு பதிவெழுதராரோ?’னு நினைச்சேன்.   நான் அப்படி நினைச்சது நாகரீகமில்லதான்.    என்ன செய்ய பாஸு?.    பாவி புத்தி பரிதவிக்குதே!. எப்ப ராசாவை தூக்கி உள்ளபோட்டாங்களோ, அன்னைக்கே மனசு ஒடஞ்சிடுச்சு சார்.

எவ்வளவு நல்ல மனுஷன்.. ஹி..ஹி.. இப்ப ’நல்ல மனுஷ’னு நான் சொன்னது அந்த பதிவரை..  ஹி..ஹி எப்படியும் நாகரீகமா, அந்த பதிவை(எப்பவும்போல) டெலிட் பண்ணிக்கிட்டு, அடுத்த மேட்டர் எழுத ஆரப்பிச்சுடுவாரு..வெட்கமா?.. சே.. விடுங்க பாஸ்..இதுக்கு இன்னொரு பேரு ’தன்னம்பிக்கை’.

ஆங். அவரோட அடுத்த மேட்டர், ’குஸ்பு, தும்மினால் மூக்கிலிருந்து வருவது சளியா இல்லை சனியனா?’.   எனக்கு எப்படி தெரியும்னு கேட்கிறீங்களா?.. இது நேயர் விருப்பமா அவருகிட்ட நான் கேட்டிருப்பது.... பார்ப்போம்.. எழுதினா, நாகரீகம்னா என்னானு தெரிஞ்சுக்க முயற்சிப்பேன்.

அவரு யாரு? பேரு என்னவா?.. ஹி..ஹி ..லொக்..லக்..லொக்..(சே.. இருமலா இருக்கு பாஸ்..) பாருங்க.. பேனா வெச்சு நோண்டிக்கிட்டிருப்பாரே. அவரேதான் (’கழக அல்லக்கை’னு யாராவது நாகரீகம் தெரியாம சொன்னீங்க.. நாகரீகமா, பன்னிக்குட்டிய வெச்சு கடிக்கவெச்சுடுவேன். கபர்தார்..)


அடுத்து, பிராப்(ள)ல பதிவர். அதாம்பா.. நாலு கால் அப்பிராணி.. ஆங்.. நன்றியுள்ள ஜென்மம்.  அந்த பீஸு என்னடானா,  திடீர்னு வெஜிடேரியன் மீல்ஸா, ’ஹிட், பேண்ட், சர்ட் , மயிறு, மசிரு...உம்.. ஒரு எழவும் வேண்டாம். இதுவரை நான் கிழிச்சதே பெருசு. இனிமேல, கேள்வி கேட்டா  அதுக்கு பதில் மட்டும் சொல்லப்போறேன்’னு ’படார்’னு ஒரு பிட்டை போட்டாரு.

சரி..பெரிசு சொல்லிடுச்சேனு, நானும், ’குஸ்புவின் பரிணாம வளர்ச்சி(?)பற்றி 10 வரிகளில் விளக்கவும்’னு கேட்டேன். இன்னைக்கு வரை பதிலும் வரவில்லை. உம்.. பார்ப்போம்.

அன்னைக்கே வெளியூரான் சொன்னான். அந்தாளு,  “பின்னாடி நோண்டி,அதையும் மோந்து பார்ப்பான்”னு.  நான் நம்பவில்லை.  இப்ப நிருப்பிச்சுட்டார்.   ’சாதியாம், சந்தனமாம்’.  கஷ்டமய்யா சாமீ.. ’உமக்கும் எல்லோரையும் போல கழிவுதான் வரும்னு சொன்னா,  ‘இல்லை..இல்லை.. சமீபத்தில், அதாவது 1934-ல் இருந்து ஒரு சாமியாரின் ஆசியால்,  எனக்கு சந்தனமா வருது’னு உளரிக்கிட்டு இருக்குது.   விடுங்க...  என்னமோ பண்ணட்டும்..


ஆங்.. சொல்லமறந்துட்டேனே. என்னிடம் யாராவது வந்து , ’நித்தியும், ரஞ்சிதாவும் உடன்பிறப்புக்கள்’னு சொன்னா,  ’இருக்கும்போல’னு ,அப்பாவியா தலையாட்டும் நல்ல பையன்.

அதனால இந்த அரசியல் நாகரீகம் பற்றி  தெரிஞ்சவங்க, முக்கியமா அதில் டாக்டர் பட்டம் வாங்கியவர்கள்,தயவு செய்து ஒரு மெயிலை தட்டிவிடுங்க ’100ரூபாய்(?) வெச்சு’, உங்களிடம் சீடனாகி விடுகிறேன்.

வரட்டா...
.
.
.

Saturday, February 5, 2011

ரா..ரா.. சரசுக்கு ரா..ரா...

.
.
.
ங்கொய்யா.. இனிமேல அரசியல் பற்றியே எழுதக்கூடாது என்ற, என்னுடைய உயரிய(?) கொள்கையை, தவிடுபொடியாக்கிய அரசியல் வித்தகர்களுக்கு என் வணக்கத்தை போட்டுக்கிறேன்.

அய்யா சாமிகளா.. நிசமாவே என்னால முடியலையா. உங்கள் வெறி, அதாங்க நாட்டை முன்னேற்றி, வல்லரசாக்கும் உங்கள் வெறி, கண்களில் மின்ன, ஊர் ஊராக நீங்கள் போடும் விளக்ககூட்டம். ங்கொ$%#%@த்தா.. விளங்கி, விளங்கி வீங்கிப்போனதுதான் மிச்சம்.

வாழைப்பழம். இது ஒரு மருத்துவ நிவாரணி. காலை மாலை இருவேளையும் சாப்பிட்டால், நிற்காமல் போகும் தலைவரின் பேச்சைப்போல. ஆகவே பெரியோர்களே,
அட......!!!


தாய்மார்களே....ராசா குற்றமற்றவர்.. ராணி பரிசுத்தமானவர். இயற்கை(?) புனிதமானது... ஹி..ஹி. ஒன்று, இரண்டு, மூன்று.. அதற்குமேல முடியாமல் போனதுக்கு!!...

ஆகவே வாழைப்பழம் சாப்பிடுங்கள்.

---------------------------------------






ச்சீ.. வெக்கமாயிருக்கு..
தேர்தல்.. அன்றாடங்காய்சிகளை, அரசனாக்கி, மீண்டும் ஆண்டியாக்கும் ஒரு விழா, விரைவில் வரப்போகிறது. அதற்குள் எவ்வளவு தாவல்கள், குழிபறிப்புக்கள். தகிடுதத்தங்கள்.. உம்.. மூட்டு வழி வராம என்ன பண்ணும்?. பற்றாததற்க்கு, மீனவர்கள் கொலை. உழைத்து களைத்த மானுடத்தை, ஓய்வுகூட எடுக்கவிடாமல், வீதிக்கு இழுத்துவரும் சம்பவங்கள். பாவம். உடன்பிறவாவின் கைபற்றி, எதிர்நீச்சல் போடும் டான்சி ராணி. எவ்வளவுதான் தாங்குவார்கள் அரசியல் தெய்வங்கள்.


---------------------------------------




ஹி..ஹி.
கலைஞரின் காலடி, அல்லது அன்னையின் காலடி.. சாரி பாஸ். தப்பா சொல்லிட்டேன். அன்னையின் பொற்பாதங்கள். தாங்கித்தாங்கி தரிசானதுதான் மிச்சம். நம்பிக்’கை’. அதுதான் எங்களின் ஒரே நம்பிக்’கை’.

:-)

உம்.. மக்களும், மாக்களும் இருக்கும் வரை, ஒன்றே தேவி.. ஒருவனே குலம். அன்னை வாழ்க.. அவர்தம் ஈன்றெடுத்த புதல்வன் வாழ்க. நாடு வாழ்க.

இளங்கோவன் ஒழிக.


---------------------------------------


@நமக்கு..

ஹி..ஹி.. எல்லாப்பயலும், நாட்டை முன்னேற்றுவோம், ஊழலை ஒழிப்போம்னு கூவிக்கிட்டே வருவானுக. பாவம் அவங்க, கொசு மாறி ஊழல்னு நினச்சுக்கிட்டு இருக்கும் அப்பாவி அரசியல்வியாதிகள். ஒரே ஒரு நிமிசம். அவர்களின் சூழ்நிலையில் நின்று யோசனைபண்ணிப்பாருங்க. உங்களுக்கு கைவசம் தொழில் இருக்கு. இல்லை சொந்த பிஸ்னஸ் இருக்கு. குடும்பம் இருக்கு, குட்டி இருக்கு . ஆனா இதையெல்லாம் விட அதிகமா இருப்பது சுயநலம். சரிதானே பாஸ்.


உங்கள் குடும்பம்,
உங்கள் குழந்தைகள்,
உங்கள் ஊர்,
உங்கள் நிலம்.

இப்படி ’உங்க உங்க’ இருந்தால், நாட்டை முன்னேறிச்செல்வது யார்?. அங்கதான் வரும் இந்த அரசியல் கேரக்டர்கள். ஆகவே, உங்கள் பிஸியான சூழ்நிலையிலும், நாட்டை காக்க போராடிவரும், அரசியல் நல்லுளங்களுக்கு, உங்கள் ஆதரவை தெரிவித்து
அவர்கள், நம் நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்ல உறுதுணையாக இருங்கள்..

வாழ்க இந்தியா,
வளர்க இத்தாலி..

-----------------------------------------



டிஸ்கி 1.
எங்களை வெற்றிபெறச்செய்தால்,
அதை கட்டுவோம்,
இதை கட்டுவோம்,
இப்படி செய்வோம்,
அப்படி செய்வோம் என கூவி வருபவர்களை பார்த்திருப்பீர்கள்.
வெற்றி பெற்றதும், கொடுத்த வாக்குறுதி, காலை மலத்துடம் கழிந்துவிடும்.

ஆகவே, அது அப்படி கழியாமல் இருக்க, முதலில் சம்பாரித்த காசை வைத்து கட்டச்சொல்லுங்கள். வெற்றிபெற்றதும், சம்பாரித்துக்கொள்ளட்டும். ( ங்க்கொய்யா..பேங்க லோனுக்கே, பத்திரத்தை அடமானம் வெச்சாத்தான் கொடுக்கிறாங்க. ஆனா, இவனுக வாய் வார்த்தையா சொல்வதை மட்டும் நம்பி, நாம் ஏன் குத்தனும்?.   செய்யி.. அப்பால சம்பாரிச்சுக்க. சரிதானே...)




டிஸ்கி 2.
உங்கள் தொகுதியில், சுயேட்சையாக நிற்கும் நல்லமனிதர்கள்.. நல்லா கேளுங்க.. நல்லமனிதர்கள் யாராவது இருந்தால், உங்கள் வாக்கை அவர்களுக்கு குத்தி, அந்த பீஸை வெற்றிபெறச்செய்யுங்கள்.
அப்போதுதான், ’இவர்களுடன் அவர்கள் கூட்டணி’ , ’அவர்களுடன் இவர்கள் கூட்டணி’ என்று மார்கழி மாதத்து டோமர்கள்போல அடித்துக்கொள்ளும்  பன்னாடைகளுக்கு..... நாம் இருப்பது தெரியும்.
.
.
.



கடைசியா.....ஹி..ஹி.. காலை மாலை, மதியம்.... வாழைப்பழங்களாக சாப்பிடுங்கள்....
பழையன கழியும்..புதியன புகும்...
.
.
.

Wednesday, February 2, 2011

கல்யாண வாரம்...ம்ம்ம்..

ஏலேய் சின்ராசு, பார்த்து பலவருஷம் ஆயிடுச்சு...

ஆமாய்யா பட்டா. சே.. விலைவாசி கன்னாபின்னானு ஏறினதால, ஓவர்டைம் செய்யவேண்டியதா போச்சு. சரி... ஒரு வாரமா, கடைக்கு ஷட்டர் போட்டுட்டு
எங்கேயோ போயிட்டு வந்திருக்க போல!!.. மூஞ்சியெல்லாம் கறுத்திருக்கு..

ஹி..ஹி. நம்ம பயலுக்கு தஞ்சாவூர்ல கண்ணாலம். அதான் தலைய காட்டிட்டு, ஊர் நிலவரம் தெரிஞ்சுக்கலாமேனு போயிருந்தேன்.

யாரு.. இந்த சிகப்பு தொப்பி போட்டுக்கிட்டு, “நான் எங்ஙேஙேஙேஙேகே இருக்கேன்?-னு அடிக்கடி கேப்பானே.. அந்த  தம்பியா?..”

யோவ். வெண்ணே.. தம்பியெல்லாம் அந்த காலம். இப்ப அது பெரிய குடும்பி..அதாவது குடும்பஸ்தன். போன் பண்ணினா, ரெண்டு நாள் கழிச்சுதான் பதிலே  வருதுனா பார்த்துக்கோயேன்.

ஓ.. ரொம்ப பிஸி ஆகிட்டாரா!.. கல்யாணம் பண்ணினா, அப்படிஇப்படித்தான் இருக்கும். சரி விடு..கல்யாணத்துக்குப்போயிட்டு நல்லபடியா வந்து சேரனுமுனு,  செராங்கூன் பெருமாள் கோயில்ல உண்டகட்டி வாங்கி சாப்பிட்டேன். ஆனா ஒண்ணு நிச்சயமய்யா... கடவுள் இருந்திருப்பார் போல..

யோவ்.. ஸ்டாப்.. ஸ்டாப்.. என்ன திடீர்னு கடவுள், பெருமாளுனு பேச ஆரம்பிச்சுட்ட?

அடப்போய்யா.. நான் பட்ட கவலை எனக்குத்தானே தெரியும். அப்பப்பா.. சொன்னாலே உடம்பு சிலிர்த்துக்கும்போல...’ - சின்ராசு

அப்படி என்னாய்யா உடம்ப்பு சிலிர்க்கும் அளவுக்கு,  பெரிய கவலை?

இல்லப்பா.. புபழுத்தபழமே , Visa extension-க்கு , அவுங்க வீட்டுக்கார அம்மாக்களை(!),  கோயில் கோயிலா போகச்சொல்லி  அனுப்பிக்கிட்டு இருக்காம்.  எத்தனை கோடிவெச்சிருந்தாலும், என்ன பிரயோசனம்?. சரி விடு. நம்க்கு அரசியல் ஆகாது. நீ பெரிய இவனாட்டம், கலைஞரை விமர்சனம் பண்ணும் ஜாதி.
அந்த பயலோ, பக்கா கரைவேட்டி. அதான் பத்திரிக்கை வெச்சு, அங்க கூப்பிட்டு, வெச்சு  கும்முவானோனு நினைச்சேன்.  ஹி..ஹி எப்படியோ தப்பிச்சு வந்துட்ட.

யோவ்.. உன்னொட வாயில, கொள்ளிக்கட்டையை வைக்க. ஒரு நண்பனை இப்படியெல்லாம் பேசக்கூடாது.. ஹி..ஹி    நானும் கொஞ்சம் பயந்துபோயிதான் போனேன். அதான் நாலு பயலுகளை துணைக்கு கூப்பிட்டுக்கிட்டு, நெப்போலியன் தயவுல  போயிட்டு ஓடிவந்துட்டோமில்ல.. சிங்கம்லே நாங்க..  ஆமா பெருமாள் கோயில் உண்டக்கட்டில நெய் சேர்ப்பதை நிறுத்திட்டாங்களா?.     ஆள் மெலிஞ்சு போயி, ஆஆஆஆஆ ராசாமாறி ஆயிட்டே.

நீ வேற வெறுப்பேத்தாதே பட்டா. போனவாரம் கல்யாணம் நிச்சயம் பண்ணும் அளவுக்கு விசயம் கைமீறி போயிடுச்சு.

அய்.. தக்காளி, நீயும் மாட்டினியா?. ஆமா பொண்ணு யாரு.... அந்த பிலிப்பினோகாரியா?.

ஹி..ஹி  அதேதான். ’எஸ்’ ஆகி, ஊருப்பக்கம் போகலாமுனு பார்த்தேன்,  முடியாது போல...போனவாரம், ’வீட்டுக்கு வாங்க, வந்து எங்கப்பாகூட  பேசுங்க’னு  ஒரே குடைச்சல். சரி போய் பார்ப்போனு போனேனா.. உஸ்.. முடியலைடா இவனுக அலம்பறைய..

ஏன் என்னாச்சு... பொண்ணு தரமுடியாதுனு மூஞ்சிய சாணிய பீபூசிட்டாங்களா?..

இருடா..  சொல்வதற்குள், ஏன் இப்படி குதிக்கிறே?. வாழ்க்கையில் நல்லவனா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?. அப்பதான் விதிமேல நம்பிக்கை வந்துச்சு.

ஏண்டா இப்படியெல்லாம் பேசுறே.. நான் வேணா, உங்க வருங்கால மாமனார்கிட்ட பேசிப்பார்க்கட்டுமா?..

ப்ளீஸ்.. குட்டைய குழப்பாமா,  கொஞ்சம் மூடிக்கிட்டு இருக்கியா?.
பிகர் சொல்லுச்சேனு அவங்க வீட்டுக்கு போனேன். எல்லாம் ஒரு நம்பிக்கைதான். எப்படியும் அவங்கப்பன் பொண்ணை கொடுக்கமாட்டான். நாமளும் கழண்டுக்க சரியான சான்ஸ்னு நினைச்சுக்கிட்டு, உள்ள போனேன்.
மாடில உட்காரவெச்சுட்டு, எல்லாரும் காணாம போயிட்டானுக. நானும் பேக்கு மாறி, முழிச்சுக்கிட்டு, டெலிபோன் டைரக்ட்ரிய புரட்டு பார்த்துக்கிட்டு இருந்தேன்.
அப்ப திடீர்னு ரூம் பூரா ஒரே நறுமணம். ச்..ச்.ச்ச்...சரியான செம பிகர்.. ரூம்-ல கிழக்க மேற்கே நடந்துக்கிட்டு, ஓரக்கண்ணுல என்னைய லுக்கு விடுது.
அப்பவே முடிவு பண்ணீட்டேன்.. பிலிப்பினோகாரி கேன்ஷல்.. இவதான் என வருங்கால பொண்டாட்டினு. மனசு பூரா பட்டாம்பூச்சி பறக்குது. என்னோட கால், தரையில படாம, ’மிதக்கறனா?.. பறக்கிறேனா?’.. ஒண்ணுமே தெரியலே.. அப்படியே ..... எந்திருச்சு..பறந்து....ம்..ம்.. 
பீலிங் மச்சி.... இந்த காந்தர்வ கல்யாணம்னு சொல்றாங்களே. அதை அங்கேயே பண்ணிப்பார்க்க மனசு துடிக்குது.  ...அந்த ஒரு செகண்ட். ங்கொய்யா...எங்கப்பன் மீசை கண்ணுக்கு முன்னாடி வந்து போச்சு.
அப்புறம், ’அம்மாவை பார்த்த எம்.எல்.ஏ மாறி’, ப்யூஸ் புடிங்கிருச்சு.

உனக்கு லொள்ளுயா.. போனமா, அவங்கப்பனை பார்த்தமா?. பொண்ணு கேட்டமா?னு இல்லாம, அங்கேயும் போய், வேற பொண்ணைப்பார்த்து வடிஞ்சா?..  சரி .. கடைசியா,  உன்னைய செருப்படிலடிச்சதா அந்த பிகரு?

நீ வேற.. இது கண்ணுலேயே என்னை கற்பழிக்குது. இதுக்கு மேல சும்மா இருந்தா, நான் மனுஷனே இல்லேனு விடுவிடுனு கீழ வந்துட்டேன்.

என்ன இருந்தாலும், மனசுக்குள்ள ஒரு ’நல்லவன் சின்ராசு’ இருந்திருப்பான் போல.. விடு .  நீ ஊருக்கு போய் நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம்  பண்ணிக்கிட்டு,  வாரிசை பெத்துக்கிட்டு, எலெக்‌ஷன் டைம்ல கலெக்‌ஷன்  பண்ணி பொழச்சுக்க..  ஆமா.. அந்த பிகர் போன் நம்பர் இருக்கா?..

அய்யோ..பட்டாபட்டி.. நீயும் மற்றவன் மாறி யோசிக்க ஆரம்பிச்சுட்டையே... எனக்கு பீலிங் ஆகி, முடியாம, கார் கிட்ட போயிட்டேன்.
அவங்கப்பன் ஓடி வந்து என்னோட கை புடிச்சுக்கிட்டு, ஒரே அழுகை.
மாமியார்காரி, ஓரமா நின்னுக்கிட்டு, கைய மேல காட்டி, கடவுளுக்கு தந்தி அடிக்குது.  இதுக்கு நடுவுல,  நம்ம சப்ப பிகர்..அதாம்பா , அந்த பிலிப்பினோகாரி, ஓடி வந்து கட்டி பிடிச்சுகிட்டு கேவி கேவி அழுது.   என்னாங்கோ%$##த்தா... குடும்பமே, மெண்டல் போல-னு நான் தப்பிக்க பார்க்க....ஹி..ஹி
கடைசியா பார்த்தா... சீ.. விடுய்யா.. நான் நல்லவனா இருப்பதுதான் நாட்டுக்கு பிடிக்கும்னு தலைவிதி இருந்தா, நான் நல்லவனாவே இருக்கேன்..

இரு..இரு.. சின்ராசு.. கடைசியா என்ன ம^$%#யிரு சொல்லவரே.. ஒரு எழுவும் புரியலே..

அட..’பாதுகாப்பு உறை’ய கார்ல வெச்சிருந்தேன். அதை எடுத்துக்கிட்டு, திரும்பவும் மேல போகலாம்னு நான் வெளிய வர, குடும்பமே, ’ஆகா..இவன் ரொம்ப   உத்தமன்டா.. எந்த பொண்ணையும் ஏறிட்டுபார்க்காத நல்லவனு’னு , என்னை பார்த்து நெஞ்சை நக்க... உண்மையில கலிகாலம்தாண்டா.....ஹி..ஹி
.
.
.
டிஸ்கி..
கதையா நிசமா?.. ப்ளீஸ் யாராவது சொல்லுங்களேன்....
.
.
.