Pages

Friday, October 28, 2011

ஏழாம் அறிவு- பட்டாப்பட்டியின் பார்வையில்

.
.
.


வணக்கம். இம்ப்பூட்டி நாளா, என்ன பன்ணிகிட்டு இருந்தேன். இனிமேல என்ன பன்ணுவேனு யாரும் கேட்கக்கூடாது. வேலை விசயமா, கழுதையோட சைனா வரை  போயிருந்தேன்.  கோடிகள், கேடிகளால் சரியான வங்கியில்  பூட்டி வைக்கப்பட்டுவிட்டது.

இப்ப விசயத்துக்குப்போவோம்..
ஓசில பாலிடால் கிடைத்தாலும், பல்லு படாம குடிக்கும் திறமைகொண்ட என்னை, ஒரு நலம்விரும்பி, சிலபல காரணங்களால் சினிமாவுக்கு  அழைத்துகொண்டு போனால் என்ன  நடக்கும்?. ( ஓசி சப்பாடு.. ஓசி டிக்கெட்டு.. ஓசி பீரு... எஞசாய் சார்..)....

அதேதான் சார் நடந்தது..
ஒன் லைன்ல சொல்லனுமுனா...   படம் சூப்ப்ப்ப்ப்பரு. 




ஒவ்வொருவரும் தந்த விமர்சனத்தைப்பார்த்தால், அவர்களுக்குள்  ஒளிந்திருக்கும் தொழில் திறமை, லைட்டா முட்டிக்கிட்டு வருவதை  மறைக்கமுடியவில்லை.
கரெக்ட்தானே நைனா?...

சினிமா துறையை நாடிப்பிழைப்பவர்களைக் கேளுங்கள். ’படம் ஆகா.. வாழ்க்கையில, இதுமாறி படம் எடுக்க, முருகதாஸு மகன்வந்தாத்தான் உண்டு’னு  சப்புக்கொட்டுவாங்க.

டாக்டரா இருந்தா... ‘படத்தை... கொன்னுட்டானுக சார்’னு சொல்லுவாங்க..

சமையற்காரன், ’படத்தில் கொஞ்சம் காரம் சேர்த்திருந்தா.. தூக்கலா இருக்கும்’னு சொல்றானுக.

உபி-க்கள். பேரனுக்காகவே காவடி தூக்கி, அலகு குத்திட்டு, ’படம் ஹிட்’னு சொல்லப்போறாங்க.

சரி.. நாம!!!... அதான் எவனைப்பார்த்தாலும்,கழுவி ஊத்தலாம்னு சுத்திக்கிட்டு இருக்கும் பொட்டி தட்டும் ஆசாமிகள் ஆச்சே.     ஆங்.. அதுவுமில்லாம, அப்பப்ப,  ”நட்டு நடுநிலை”னு போர்ட் வைத்து, காலை இருதரம், மாலை ஒருதரம்னு ’கொக்கரி’க்கும்   இப்படிப்பட்ட நாதாரியிடம்,  விமர்சனம் பண்ணச்சொன்னா.. விடு சார்... விமர்சனத்துக்குப்போவோம்..

படம் எப்பவும் போல ஆரம்பிக்குது. குதிரையில் ஏறி, சீனா.... வழியில குளிச்சு, குடிச்சு.. களிச்சு..உஷ்..யம்மாம்மா...     போதி தர்மரு...சீனா போனாரு. மக்களை காப்பாற்றுனாரு.. அப்பால..ஆங்.. கடைசியா .. செத்துப்போயிட்டாரு...

படத்தில ஹைலைட் காட்சினு சொன்னா, நம்ம கமலு பொண்ணு வருகின்ற சீன்கள்தான்..   கமலு ஜீன் -ல உருவான உடம்பு.. எப்படி இருக்கும் அந்த நடிப்பு என்பதை, உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.

வசனம்.. சோகமாயிருந்தாலும் சரி.. சந்தோசமா இருந்தாலும் சரி.. இழுத்து இழுத்து.. இப்படித்தான் பேசுவேனு பொண்ணு,  கண்டிசனா சொல்லிடுச்சு போல.  நம்ம முருகதாசு அண்ணனும், என்னவோ பண்ணித்தொலை. என்னோட கடமை, தமிழனை தலை நிமிர்ந்து நிற்கச்செய்வதும்,  கல்லாபொட்டியை ரொப்புவதுதான் என எண்ணி ஆப் ஆயிட்டாரு. பாசக்கார பய...

பாதிப்படதிலேயே, தமிழன்னா யாரு?.. அவனோட பெருமை என்ன?. சீனாக்காரனுக எப்படி இருப்பானுக?  டி.ன்.ஏ-னா இன்னா.. மண்டைக்குள்ள ஏத்திட்டானுக சார்...

ஸ்ருதி,குரலை இழுத்துவெச்சு.. ”வாயிலையே கொடுப்பேனு ” சொல்லும்போது தியேட்டர்ல விசில் சத்தம் அடங்க ரொம்ப நேரம் ஆச்சு.    மப்புடன், திரும்பி அருகில அமர்ந்திருந்த, ’லோக்கல் டமிழ் பொண்ணைப்’பார்த்தேன்.    

அவிங்க கொள்ளுத்தாத்தா..... ”மரப்பணுப்படி”   , ’தில்லானா மோகனாம்பால்ல கடம் வாசிச்ச கோஷ்டி போல.’.    தலை இன்னும்,  விண்ணு விண்ணுனு வலிக்குதுங்க .


படத்தில  பிடிச்ச காட்சினு சொன்னா.. ஆங்.. வில்லன் கண்களாலேயே, பொதுமக்களைப்பார்த்து மந்திரிச்சுவிடும் காட்சிகள்தான். பார்வைபட்டதும், பொதுமக்கள், அவரவர் வண்டியின் முதல் கியரை போட்டு,  சிவக்குமாரு பையன் கொல்லப்போவது..  நல்லவேளை.. வீல்சேர் அம்பூட்டு வேகமாபோகாதுனு அதைமட்டும் காட்டல.

இதை எழுத்தில் படித்தால் அனுபவிக்கமுடியாது சாரே..தியேட்டருக்குப்போய்.. நீங்களும் ப்ப்ப்ப்ப்ப்பாருங்க பாஸ்.. புல்லரிக்கும்..

முக்கியமா.. கடைசிக்கட்டக்காட்சிகள்..
இதுவரை எந்தபடத்திலும் வந்திராத க்ளைமேகஸ். சூர்யாவும் , சீனனும் அனல் பறக்க சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.   நம்ம கமலு மக வஜனம் பேசுது.. எப்படி?.. அடிக்கடி வலதுபக்கம் திரும்பி..    ஒருவேளை, சூட்டிங் நடக்கும்போது, பேரப்புள்ள  அந்தப்பக்கமா நின்றிருக்குமோ என்ற சந்தேகம் லைட்டா வந்துபோகுது.  அது கெடக்கட்டும் கழுதை..

அம்மணி.. இன்னும் கொஞ்சம் குஷ்பூ மாறி ’வளந்தா’, உங்களை அடுத்த முதலமைச்சர் ஆக்க, டமிழனுக தலை நிமிர்ந்து பொறுப்பா உழைப்பானுக. மைண்ட்-ல வெச்சுக்க  தாயி.   டமிழனுக்கு கண்ணுக்குமுன் தெரியும் வளச்சி முக்கியம்.. ஆங்காங்..


கடைசியா, எல்லோரும் ஒன்றை மட்டும் மனதில் அழுத்தமா வைத்துக்கொள்ளுங்கள்.   உங்களுடைய முன்னோர்களின் மரப்பணுவைத் தூண்ட,   பொம்பளைபுள்ளைகளை கூட்டிக்கொண்டு, மூடியிருக்கும் காலேசு பக்கம் ஒதுங்காதீங்க.. மரப்பணு தவறான வழியில் வெளிவந்துவிடும்


அதற்காக மனம் தளரக்கூடாது...
கை கொள்ளுமளவு அருகம்புல்லை எடுத்து, இதை இடது பக்கம் அக்குளில் செருக்கிக்கொண்டு, ஐந்து கிலோமீட்டர் ஜாக்கிங் போகலாம்.  உடம்பு நன்றாக வேர்த்ததும், அந்த அருகம்புல்லை, நல்லெண்ணெயில் முக்கி, முக்கி..முக்கி.. அப்படியே சாப்பிடுங்க.. மரப்பணு பிச்சிக்கிட்டு வந்துவிடும்.


படம் பார்க்கலாமா வேண்டாமானு முடிவு செய்யமுடியாதவர்களுக்கு, நக்கீரன் மாறி, நானே பதிலை போட்டுவிடலாம்னு நினைக்கிறேன்.

அதாவது , உபிக்கள், சொந்தகாசுல, ப்ளாக்-ல டிக்கெட் வாங்கிப்பார்க்கலாம். இந்த உதவி, ’கரும்’ நிதியை, வெள்ளையாக்கிட உதவும்.  இன்னும் ரெண்டு படம் எடுத்துவிட்டு, அந்த 1.7xxxxxxx-க்கை வெள்ளையாக்க , உயிர் கொடுங்கள் திராவிடர்களே.

இந்த நடுநிலை, செண்டருனு கூவும் பயலுக, எப்பவும்போல, ஹிஹி.. ஓசியிலே அடுத்தவன் காசில, வீட்டிலோ இல்லை தியேட்டர்லோ போய் பாருங்க.   ஆனா.. போகும்போது.. தலைகீழா நின்னு, பாக்கெட்டில் இருக்கும் சில்லறைகாசு முதற்க்கொண்டு, வீட்டில் பாதுகாப்பாக, வைத்துவிட்டுச்செல்லவும்.. இல்லாட்டி அதையும்  உருவிடுவானுகோ...


மீண்டும் சந்திப்போம்..
சே..சே.. ரெண்டு  மாசம் கழிச்சு இல்லை பாஸ்.. அடிக்கடினு  சொன்னேன்.


வராமவிட்டா,  பொறம்போக்கு நிலம்னு கொடிய நட்டிக்கிட்டு போனாலும் போயிடுவானுக ... எனக்கு தெர்யாதா..!!!!!

எப்படியும் இந்த ஏழாம் அறிவு, முக்கிமுக்கி, சன் டீவியின் தரவரிசையில், முதலாம் அறிவுக்கு.. சே...வரிசைக்கு வந்துவிடும்... வரணும்.. தமிழன் வரணும்..



வர்ர்ர்ர்ரட்டா...


Wednesday, August 24, 2011

பேட்டி- நரியுடன்

நரி-சிறுகுறிப்பு:

நல்லவர். வல்லவர். அநியாத்தைக் கண்டால் ஓடும் Buzz  என்பதைக் கூடப்பாராமல்,  ஓங்காரமாய் ஏறுபவர்.    இவரிடம் பேட்டி எடுப்பது என்பது, ’கனிமொழியை வைத்து சென்னை சங்கமம் நிகழச்சிக்கு  ரிப்பன் வெட்டுவது’ போல..  (எல்லாம் காலம் கொடுமை பாஸ்.. விடுங்க...விடுங்க..)

மேலும், மக்களுக்காக களப்பணி ஆற்ற துடித்துக்கொண்டு இருக்கும் இந்த இளைஞர். திடீரென  காணமல் போனதுக்கு காரணம்?..
.
.
.
வேறு ஒன்றுமில்லை பாஸ்..
ஒரு திருட்டுக்கல்யாணம் பண்ணி வைக்க திருட்டுத்தனமா  போயிருந்தார். இவரைப்பற்றி மேலும் சொல்லிக்கொண்டு இருந்தால், வயோதிகர்கள்  வாலிபர்களாகும் சங்கடங்களும் நேரலாம் என்பதாலும்.....  இத்துடன்  இவரைப் பற்றிய  அறிமுகத்தை முடித்துக்கொண்டு பேட்டிக்குச் செல்லலாம்.  ( திருட்டுக்கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என வேண்டுதல் கொண்டவர்கள்,  உடனடியாக அவரை அணுகி துண்டைப் போட்டுக்கொள்வது நல்லது.)

===============

வணக்கம் நரி அவர்களே.. உங்களுடைய பேட்டி வேண்டும் என அறிக்கை விட்டதும், கட்டிய  துணியுடன் கடல்கடந்து போய்விட்டீர்கள் போல!!..

இல்லை..இல்லை.. நானும் லோக்கல்தான். என் தலைவன் மீது ஆணையாக, சத்தியமாக,   அவர் சொல்படி, ஒரு திருட்டுத் திருமணம் நடத்தி வைக்கச் சென்றிருந்தேன். இதில்   உள்நோக்கம் கற்பிக்கவேண்டாம்.
"யாதும் ஊரே..யாவரும் கேளீர்.."



சரி..சரி..தெற்கிலிருந்து வடக்கு வரை கை-கள் நீளும்போது, யாதும் ஊரேதான்...

உம்..( ”கோபம்” எனக்கொளக, வாசகர்களே!!.. )



கடந்த தேர்தலில் விழுந்த அடி பலமோ?.

நீங்கள் யாரை மனதில் வைத்துக்கேட்கிறீர்கள் என தெரியவில்லை. ஆனாலும் அடித்த அடியில்,   முழங்கால்வரை வந்து.. அப்பால பழையநிலைக்கு சென்றுவிட்டது.. 



சார்..சார். இந்த ஏரியாவுல பல படிச்ச பன்னாடைகள் புழங்குவாங்க. அசிங்கமா பதில்   சொன்னா மூஞ்சிய சுளிப்பாங்க சார்.


யோவ்.. இங்க நான் சொல்லவருவது “வலி”.. அதுகூடப்தெரியாமல்  இருப்பவர்களைப் பார்த்து, எதில்கொண்டு சிரிப்பதென  எனக்குத் தெரியவில்லை.
நெக்ஸ்ட்..



===============


ஓகே.. ஓகே.. சில பதிவர்கள், நாங்கள் ’நடுநிலைமாறா நற்பண்பு கொண்டவர்கள்’  எனக்கூவிக்கொண்டு  இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது.. அதாவது..அவர்களின்  பஸ் படிக்கும்போது... தாங்கிய தாங்குதலால்தான்.. அது இரும்புக்கொட்டை  ஆகியிருக்குமோ என்ற எண்ணம் வருவதை மறுக்கமுடியவில்லை. அதைப்பற்றி தங்கள்  கருத்து?..

What is that iron ball?..



இல்லை அய்யா.. அது எழுத்துப்பிழை. அதாவது நான் சொல்லவருவது
“இரும்புக்கோட்டை”..


ஓ.. you funny... ”கோழி கூவியா”, எங்கள் தலைவி வெளியவரப்போறாங்க...
ஒன்றும் தெரியாத அப்பாவிகளை சிறைக்கு அனுப்பி, சிரித்துக்கொண்டிருக்கும் சிங்காரிகளுக்கு,    காலம் பதில் சொல்லட்டும். மேலும் நீங்கள் சொன்ன பதிவர்கள், நடுநிலைவாதிகள் என்ற  கருத்துக்கு மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

சிலவிசயங்களில் , மக்களின் புரிதலுக்கும்,  மன்னர்களின் புரிதலுக்கும்  வித்தியாசங்கள்  இருக்ககூடும். எங்கள் மன்னர்கள் மூக்கு சொறிய கை துக்கினாலே, சாணக்கியத்தனம் என  புளங்காகிதம் அடையும், ’ஓட்டு வைத்திருக்கும் மக்கள்’ இருக்கும்வரை, எங்களை யாரும்  அசைக்கமுடியாது.. (வெண்ண.. கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கியே தவிர, குடிக்க தண்ணி
கொடுக்கிறானா..இந்த நாதாரி..)



ஓ.கே சார்.. நடுநிலை-னா, ரெண்டு கால் இடுக்கில், இறுக்கப்பற்றியபடி, நேர்பார்வை  கொண்டு, விவாதம் புரிவது எனக் எடுத்துக்கொள்ளலாமா?..

எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இது ஜனநாயக நாடு..



===============


ராஜீவ் சமாதியில் ரூ40 லட்சம் செலவில் மின்விளக்கு வைக்கப்போறாங்களாம். அதுவும்,  மூன்று விளக்கில் இருந்து வரும் வெளிச்சம், ஒரு புள்ளியில் குவிந்து, அந்த பிராந்தியமே  ஒளிவெள்ளத்தில் மூழ்கப்போவதாகவும்,  அதற்காக மத்திய அரசாங்க ஊழியர்கள், ஊண்  உறக்கமின்றி வேலை செய்துகொண்டிருப்பதாக செய்திகள் கூறுகிறதே.. அதைப்பற்றி உங்கள்  கருத்து?..

மத்தியமாநில அரசுகளின் திட்டங்களை குறைகூறிக்கொண்டே திரிபவர்களை, உள்ளே வைத்து  நொங்கெடுக்கனும் சார். ராஜீவ் காந்தி யார். அவர் இந்தமண்ணில் பிறக்க மக்கள் புண்ணியம்  பண்ணியிருக்கனும் சார்..
மேலும், அவர் சமாதியின் அருகிலதான்.. இன்னொருவர் சமாதியும்  இருக்கிறது.. அவரு பேரு..பேரு..... ஆங்.. காந்தி...



இந்திராகாந்தியா சார்?..

இல்லப்பா.. இது அவரோட கொள்ளுத்தாத்தா..காந்தி..என்னமோ பெருசா வருமே..   சந்த்.ஆங்..கரம்சந்து காந்தி..தனிமனிதனாய் போராடி, வெள்ளையனிடமிருந்து சுதந்திரத்தை  வாங்கிக்கொடுத்தாரே. இப்படி கோவணம் கட்டியவரின் சமாதியும், சூட் போட்டவரின்  சமாதியும் ஒரே இடத்தில் இருப்பதைப்பார்த்து, வெள்ளையர்களே,  மூக்கில் விரலை
வைத்துக்கொள்வார்கள். பொறுத்திருந்து பாருங்கள்..



ரொம்ப நல்லது. அம்மா ஆடு கொடுத்ததும், அதை விற்று காசாக்கி, திருட்டு ரயில்  ஏறியாவது ,அங்கு சென்று விளக்கு வெளிச்சதில் எங்கள் பின்புறத்தை பார்க்க நாங்கள் ஆவலாக  இருக்கிறோம் சார்..

சீக்கிரம் அடுத்த கேள்விய வீசுப்பா..  வேலை இருக்கு..


===============


ஓ.. உங்கள் பேரில் அது என்ன சார்.. பால்.. மாறாத மணம்னு.. அது என்ன இழவு-னு  ஒரு மண்ணும் புரியலே...

தம்பி.. சங்க இலக்கியத்தை படிச்சிருந்தா, என்னைப்பார்த்து இந்த கேள்வி வந்திருக்காது..   அது ஒருவகையான பால். இதைப்பற்றி மேலும் விவரம் வேண்டும் என்றால், திருச்சிக்கு  வா.. சொல்கிறேன்..




ஏன் சார் .. அங்கே பொதுக்குழு ஏதாவது..

இல்லப்பா.. என்னுடைய நண்பனுக்கு திருமணம்.. நான் தாலி எடுத்துக்கொடுத்தாதான்  கட்டுவேனு கூவறான். சரி.. திருட்டுக்கல்யாணம் பண்ணி வைக்க என்னைவிட்டா,     அவனுகளுக்கு யார் இருக்கா?. அதான்..

சரி.. பேட்டி போட்டும்போது, என்னோட போட்டோவை, கலர்ல போடு,,
கடைசிக்கு ஈஸ்ட்மென் கலராயிருந்தாலும் பரவாயில்ல....



சே..சே.. போட்டோ போட்டு , அதற்கு பொட்டு வெச்சு, மாலை சாத்தாம நாங்க ஓயமாட்டோம சார்.....  கவலைப்படாம, கல்யாணம் பண்ணி வைக்க கிளம்புங்க பாஸ்..  
உங்க பேட்டிக்கு எங்களால் முடிந்த சிறு உதவி...ஹி..ஹி    “நன்றி”....


(மேலும் அண்ணன் மனம் நோகாதவாறு ”நரியின் பெயர், கலர் செய்யப்பட்டுள்ளது,,,,)
.
.
.


Thursday, August 18, 2011

வருக..வருக...


பீடு நடை போட்டு வரும்.. 
பிரபலமாம் எங்கள் தங்கம்...

நெஞ்சை உயர்த்தி..
காலை அகற்றி..
”ஒற்றைக்கால் கோழியை ”
ஓங்காரமாக பிளப்பவரும்..

ஆளப்பிறந்தவர்களை...”ஆழப் பிளப்பதற்க்கு.....”
வருகை தரும் எங்கள் அண்ணன்
”பால்” என்னும் மாறா நரியை
வருக .. வருக என வரவேற்க்கும்..
-சிங்கை பட்டாபட்டி...


அண்ணன் நரியின் பேட்டி இன்னும் சில தினங்களில்.. இங்கு வெளியாகும்...


மேல் விபரங்களுக்கு..
தொடப்பு கொள்ள .. 1800-ங்கொய்யாலே...

Tuesday, July 5, 2011

வனவாசம்

.
.
.
வணக்கம் என் தமிழ் நெஞ்சங்களே. ( வார்த்தை உதவி-உனா தானா )
வலைப்பக்கம் வரலாம் என்றால், சுற்றியுள்ள ஆணிகள் பயமுறுத்துகின்றன.

ஆணியா..இல்லை வலைப்பூவா..?

அங்க பாரு ஒரு நாதாரி என்னமோ முணுமுணுக்கிறான்...என்னாது..?.. வலைப்பூவில என்னாத்தை புடிங்கினியா?..            விடு பிரதர்.. கலைஞரை பார்த்து கடுப்பா இருப்பவங்ககிட்ட.. நான் என்ன மயிறை பேசினாலும்.. மண்டைக்கு ஏறாது.    அதுவுமில்லாம், உருவாக்கபட்ட(?)வர்களிடம் உண்மை பேசிவது, கனிமொழி ஒரு தியாகினு முச்சந்தியில் நின்று  கூவுவதற்குச் சமம்.

====================


@சாணி..புத்தகம் விற்பனைபற்றி சொன்ன கருத்து....
“நான் என்ன பேண்டதை தினபதா?”

நீங்க ஏன் சார் பேண்டதை தின்னுக்கிட்டு.. பேசாம ’பேண்டாம’  இருந்துபாருங்க.. ரத்தக்கொதிப்பு கம்மியாகும்.. இது நான் சொல்லலே.. உங்க குரு நாயன் நித்தி சொன்னது...

மக்களே... வயசான எழுத்தாளனுககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. இந்த பீஸு அந்தகாலத்திலேயே.. ”முன்னும் பின்னும்”  உழைத்து எழுத்தாளனாகியதாம்.
முடிஞ்சா.. டயாப்பர் போட்டுக்கிட்டு அதோட புத்தகம் படிங்க. இழவு... சுத்தம் செய்யும் நேரம் மிச்சமாகும்.


====================

@சமச்சீர்..சமச்சீர்னு பலபேரு கூவிக்கிட்டு இருக்காங்க..
ஏய்யா... ஒரு ஆளு..கொளுத்தும் வெயிலில் வெட்கமே இல்லாம,  ஏழு போர்வைய சுருட்டிக்கிட்டு போட்டோ-வுக்கு போஸ் கொடுத்தா?
மற்றவனுக என்ன.. பேண்டதையா தின்பாங்க?..( வார்த்தை உதவி-சாணி --பிராப்பல எழுத்தாளர்..)



====================


@ஜாமீன்..
  • குழந்தை இருக்கு.. ஜாமீன் வேணும்..
  • குடும்பம் இருக்கு.. ஜாமீன் வேணும்..
  • வெயில் ஜாஸ்தி.. ஜாமீன் வேணும்..
  • ஸ்கூல் லீவு.. ஜாமீன் வேணும்..
  • அப்பாவால முடியாது.. ஜாமீன் வேணும்..
  • அம்மா பாவம்.. ஜாமீன் வேணும்..
  • எனக்கு ஒண்ணும் தெரியாது.. ஜாமீன் வேணும்..
  • கொசு ஜாஸ்தி.. ஜாமீன் வேணும்..

பேசாம..
.
..
...
....
.....
“செவ்வாய் தோஷம்”-னு சொல்லிப்பாருங்க.. கிடைத்தாலும் கிடைக்கும்....

இல்லை.. ”ஸ்பெக்ரம் ஊழலே இல்லைனு , பதிவெழுதி..எல்லோர் நெஞ்சையும்  நக்கி அறிவுக்கண்ண தொறந்துவிட்டிருக்காரு ஒருத்தரு..

அதை பிரதியெடுத்து வக்கீல்கிட்ட கொடுத்து .. பேசச்சொல்லுங்க.... கொடுப்பானுக...!!
====================


@புத்தகம்
போனவாரம், கண்ணதாசன் எழுத்திய , ’வனவாசம்’ என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது.    அடேங்கப்பா..      அந்த காலத்திலேயே, தலீவனுக, மக்களுக்கு உழைச்ச உழைப்பை விலாவாரியா சொல்லியிருக்காரு..   படிச்சுப்பாருங்க.. கண்டிப்பா முடி நட்டிக்கிடும்.


விலைமாதர்களின் துயர்துடைக்க, இடைவிடாத வேலைபணியிலும்.. இரவோடு இரவாக சென்று அரும்பணி ஆற்றியிருக்கிறார்கள் நம் தலைவர்கள். அதனாலதான் நாடு இன்னும் விளங்கிட்டு இருக்கு..

தலீவா... எப்படி தலீவா காசோ கொடுக்காம .. களிக்கிறது? ..இன்னா சொல்லு.. நீ கில்லாடிதான் வாத்யாரே!!


செல்வி அக்கா, பரிகாரம் பண்ணிட்டாங்கனு கேள்விப்பட்டேன். பேசாம, வட்டி போட்டு நான் முன்னாடி சொன்னேனே.. அவர்களுக்கோ..இல்ல அவர்தம் வாரிசுகளுக்கோ, பணம் அனுப்பி.. பழைய கடனை செட்டில் பண்ண முடியுமானு யோசனை பன்ணிப்பாருங்க...
இல்லாடி விடுங்க..பரவாயில்ல...


தலீவா.. கடைசியா.... கழக உடன்பிறப்பின் அன்பான, பணிவான வேண்டுகோள்..
அடுத்தமுறை திகார் செல்லும் போது.. ’ஸ்பைஸ் ஜெட்’ விமானம் மூலம் போங்க தல..
பாவம்.. உழைச்ச காச வெச்சு விமானம் வாங்கி பூசையெல்லாம் பண்ணியிருக்காங்க.. உங்கள் ஆதரவு இருந்தாத்தானே செ(ழி)க்கமுடியும்..






இரு..இரு.. நம்ம வண்டுமுருகன்கிட்ட சொல்லி.. சைபர் கிரைம்கிட்ட போகச்சொல்றேன்.  அட்ரெஸ் எல்லாம் ரெடியா வெச்சிருக்காரு..
அதுவுமில்லாம..... எனக்குனா உயிரையே(அடுத்தவன்) கொடுப்பான்.

நன்றி..
வணக்கம்..

.
.
.

Friday, June 17, 2011

போட்டோ காமெடி 17



நல்லா இழ்ழ்ழ்ழ்ழு தாயி...!!

என் வருங்கால ’வாரிசை’ வைத்து..

நாட்டை முடிக்க நானாச்சு...


Tuesday, May 31, 2011

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..


ஓசியில ’பினாயில்’ கொடுத்தாலே..
10கிமீ சலிக்காம, ஓடி வந்து பல்லைக்காமிப்போம்...

தொரை.. சோறெல்லாம் போட்டு.. கூட பரிசெல்லாம் கொடுத்திருக்கு...
அதுக்குப்பண்ணாம, யாருக்குய்யா பண்ணப்போறோம்.. !!

-( தன்மானத்தை அடகு வைத்தோர் சங்கம்...)



Friday, May 27, 2011

ஒரே உறையில்..9 ஓட்டைகள்

.
.
.

  • இவன் எனக்கு மைனஸ் ஓட்டு குத்தீட்டான்.
  • அவன், இவனுக்கு சப்போர்ட்..
  • இவன் என்னுடைய பதிவுக்கு வரவேமாட்டீங்கிறான்..
  • சார்.. கால்கழுவாம, பதிவை படிக்க வந்திருக்கான் சார்..
  • போன பதிவுக்கு 3000 பேர் வந்தாங்க.. இதுக்கு வெறும் 100 பேர்...
  • கட்டம் கட்டி பார்த்ததில், அவருக்கு அங்கங்கே கட்டி...
  • கட்டி உடைய, இன்னும் ரெண்டு வாரம் ஆகும்.
  • சுடச்சுடச்செய்தி..
  • சார்.. நான் ஓட்டுப்போட்டேன். அவன் போடலே..

அதுமட்டுமா?..
பத்திரிக்கையில் வரும் செய்திகளை, அப்படியே பதிவா
ஏற்றி... தாலிய அறுக்கிறானுக மை லார்ட்..!!!...

அடச்சே.. எங்க.. எப்ப பாரு.. ஒரே ஒப்பாரியா இருக்கு..

யோவ்.. வெளியூரு..
அன்னைக்கு நீ தண்ணிய போட்டுட்டு, வாயத்தொறந்தப்ப,   பயபுள்ள  ’வாமிட்’தான் எடுக்கப்போறேனு நினச்சேன்,அதாம்பா  தள்ளி நின்ன வேடிக்கை பார்த்தேன்...

ஆனா....இந்த ’கண்றாவியத்தான்’ சொல்லவந்தேனு இப்ப புரிஞ்சிடுச்சு பிரதர்..

தயவுச்செஞ்சூ.....என்னை மன்னிச்கப்பூ...

நீ மப்புல சொன்னாலும்.. சரியாத்தான் சொல்லியிருக்கே!!.. நீ ஒரு தீர்கதரிசியா..!!

இப்ப எதுக்கு இந்த பதிவா?..

உ.டமிழன்,  கனிமொழிய பற்றி ஒரு பெரீய்ய்ய்ய்ய்ய பதிவ போட்டிருந்தார்.  ஒருவழியா படிச்சு முடிச்சுட்டு.. என்ன சொல்லவராருனு மண்டைகுள்ள அசை போட்டுக்கிட்டே , நமது செந்திலாண்டவர் பதிவுக்குப்போனா...

”வார்த்தை மாறாம அதே பெரிய்ய்ய்ய்ய்ய்ய பதிவு..”
சரி.. நடுவால ஏதோ சொந்த சரக்க்கை போட்டு, கருத்தை சொல்லியிருப்பாருனு பார்த்தா... அரைபுள்ளி முக்காப்புள்ளியில் இருந்து அப்படியே இருக்கு..

அடச்சே-னு ”விகடன்” பக்கம் ஒதுங்கினா.  அந்த நாதாரிகளும் அதையே வார்த்தை பிசகாம எழுதிவெச்சிருக்கானுக...

தக்காளி.. 10ஆம் வகுப்பு படிச்சபோதே..பாடபுத்தகத்தை, ஒரு தடவைக்கு மேல படிக்காத ”மேதை” நான்..         என்னை... குனியக்குனிய உக்காரவெச்சு,  மூன்று முறை படிக்கவிட்ட, இவர்களை,. சோனியாவிடம் சொல்லி திகார் செயில்லுக்கு அனுப்பனுமய்யா..

அப்பா... முருகா..  எங்களுக்கும்  ஒரு நல்லவழி காட்டப்பா...

இனிமேல ”ஒண்ணுக்குபோனதில் இருந்து... மூக்கை நோண்டியவரை.. ” போன்ற பதிவுகளை... என் கண்ணில் காட்டாமல் இருந்தால்..  மஞ்சத்துண்டை கட்டிக்கிட்டு, வெள்ளத்துண்டை தலையில சுத்திக்கிட்டு.. மலை ஏறி வந்து ஒரு சலாம் வைக்கிறேன்.
..




டிஸ்கி..

இந்த கண்றாவிக்கு டிஸ்க்கி வேற சொல்லனுமா?..
விடுங்க பிரதர்... 

ஆனாலும்.....குனிய குனிய உயிரை எடுக்கரானுக...!!!

Tuesday, May 24, 2011

போட்டோ காமெடி 16






சூரியன் மறைந்தாலும் ...
”இன்னா வெயிலு..இன்னா வெயிலு..”

ஷ்..தலைவருகிட்ட சொல்லி ஏதானும் பண்ணனும்!!!......

.
.
.


டிஸ்கி..
சொறிஞ்சு விடும் யூரின் கிருஷ்னனுக்கு , இந்த பதிவு சமர்ப்பணம்.
கூகிள்-ல நாங்க தேடினாலும்,..படம் வரும்....பாஸ்...

Saturday, May 14, 2011

சந்தனம் மணக்குமோ?



ஒருவழியாக, தேர்தல்முடிவு வந்துவிட்டது. பாவம். பார்க்கத்தான் 'பார்வதியம்மாள்' இல்லை.   விடுங்கள்.  இது ஜெயலலிதா என்ற அம்மையாருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று நீங்கள் நினைத்தால்.. ம்.. வருத்தப்படுவதைவிட வேறு என்ன செய்யமுடியும்?

மக்களின் எண்ண ஓட்டத்தை உணர்ந்து,அதை சரியாக, வழிநடத்திக் கொண்டுசெல்பவனே தலைவன். இது யாரோ சொல்லலை. என் அகராதியில் எழுதியிருப்பது..

ஆனால் நடந்தது என்ன?. அவர்களின் குடும்பபிரச்சனையில் தமிழகத்தையே கூறுபோட்டுக்கொண்டு, வெட்கம் இல்லாம், மக்களை,  ’மா’க்களா நினத்ததால் வந்த பலன் இது. உடனே சில அல்லக்கைகள். அனானியாக என்னை திட்ட வரலாம்.. உங்களுக்கு என் பதில். “போங்கடா லூஸுகளா..”

சிலர் நினைக்கிறார்கள் நான் ஜெ-வின் கொ&^%ட்டைதாங்கி என்று!!.
நான் எதற்கடா தாங்கவேண்டும்   ”இல்லாததை”?..

கருத்துக்கணிப்புக்கள்
.
ஒரு பிரபலம் சொல்லியது. புக்கி என்று நீங்கள் நினைத்தால், என்னால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் அது ’மருத்தவரின் அடிவருடி அருள்’ என்றும் சிலர் நினைக்கலாம். எப்படியோ எடுத்துக்கொள்ளுங்கள்.அவர்களின் கணக்குப்படி
  • தலைவருக்கு 40% வாக்குவங்கி
  • அம்மாக்கு 30%.
  • அய்யாவுக்கு 20%
  • மீதி கொசுறு, மசிறுக்கு 10%..
இதையெல்லாம் கலந்துகட்டி,பிச்சைப்பாத்திரத்தில் போட்டு...  ”இப்படி வைத்து கூட்டினால், அல்லது  அப்படி வைத்து கழித்தால்”, என்று ராக்கெட் சயின்ஸ் படித்தவர்கள் போல, இவர்கள் கூறிய கணக்குக்கு.. ஹா.ஹா...நான் எப்பொழுதும்போல, பின்புறம் சிரித்துவைத்தேன்.

இதில் பெரிய காமெடி, ஒரு லூசு, “1 லட்சம் கொடுத்து சிங்கை போய் வேலை செய்யும் நாதாரிகளுக்கு, தமிழகத்தை பற்றி என்ன தெரியும்?. களம் இறங்கி பணியாற்ற தயாராக இல்லாத பன்னாடைகள். அவர்கள் தமிழகம் வந்தால், வார்ட் கவுன்சிலரைகூட எதிர்த்துப்பேச முடியாது. அடுத்த ஆட்சீ நம்முடையதுதான்” என்று திருவாய் மலர்ந்தது.

என்ன மயிறோ பேசிக்கொள் நண்பா.
ஏய்யா.. இப்படியெல்லாம் ”%”-க்குள் வைத்து வாக்குகளை அடைத்தீர்களே. அதில் முக்கியமா, ”மக்களின் %” எவ்வளவு என்பதை போடாமல் , கணக்குப்போட்டால் எப்படியா சரியான விடை வரும்.?

இப்பவும் சொல்கிறேன். கருத்துக்கணிப்பை, கழகங்களின் அல்லைக்களாக போடவேண்டாம். அப்புறம் எப்படி போடுவது?.

மீசை கோபால் மாறியா?.
நக்கீரனுக்கு மீசை தொங்கி பலவருடங்கள் ஆகிவிட்டது பிரதர். கடைசியாக மீசையை பிடிங்கி எறிந்த ”அண்ணன் காமராசன்” அவர்களுக்கு என் நன்றி.  (கனி கொடுத்த மணி பத்திரமா இருக்கா பாஸ்?)


கணக்கை, மக்கள் பக்கம் இருந்து போட்டுப்பாருங்கள். சரியாகவரும்.
இதே மக்கள், ஒரு காலத்தில், ஜெயலலிதாவை தூக்கி வீசிவிட்டு, உங்களுக்கு பெரும்பான்மை வாக்கை அளித்தினரே. எதற்க்காக?
நன்றாக வழிநடத்துவீர்கள் என்று எண்ணித்தானே. நீங்களும் நன்றாக நடத்தினீர்கள், ”காயை கனியாக்கும் அளவுக்கு..”

அதுபோல, ஜெ-க்கு கிடைத்த வாக்குக்கள், ரத்தத்தின் ரத்தம் அளித்தது என்று நீங்கள் நினைத்தால்.. ஹா.ஹா..     அண்ணே.. அது திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் அண்ணே... வேற எந்த.... வழி மயிறும்.. இப்போதைக்கு இல்லை.

நல்ல  மாற்றுக்கட்சி இல்லாததுதான் , இப்ப,... அந்த அம்மாவின் ’நல்லகாலம்’...
அதை தொடர வைப்பதும், முடித்துவைப்பதும் மக்களிடம்தான் உள்ளது. மீண்டும் சொல்கிறேன்..” மக்களுக்குத்தான் அந்த உரிமை. அரசியல் கட்சிகளுக்கு அல்ல..”.


”அந்தம்மா மீண்டும் ஆடினால்”.. அடுத்த தேர்தலில் அவர்களுக்கும் அடிக்கப்படும். இது மக்களாக இருந்து, எங்கள் எண்ணங்களைச் சொல்கிறோம்.
ஆகவே கனவுக்கோட்டை கட்டுவதை விட்டுவிட்டு, மக்கள் முன்னேற்றதுக்கு ஏதாவது பண்ணும் வழியை பாருங்கள் அரசியல்வியாதிகளே..

ஜனநாயகம்.
இந்த சுதந்திரத்தைத்தான் மக்களிடம்  எதிர்பார்க்கிறோம்.  ”தவறு செய்பவர்கள் தண்டனைக்கு உள்ளாகவேண்டும்”.

ஆட்சிக்கு ஏறீயதும், அவர்களை கடவுளாக நினைத்துக்கொண்டால், அடுத்தமுறை தயங்காமல் தூக்கியெறியும் மனப்பக்குவம் வரவேண்டும். அது யாராக இருந்தாலும் சரி.

அவர்கள் மக்களுக்காக உழைக்க, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சாதாரண குடிமக்கள் என்று நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

”தவறு செய்பவர்கள் , தண்டனை அனுபவிக்கவேண்டும். அய்யாவாவது.. அம்மாவாவது..”


டிஸ்கி
(  +2 கணிதப்பாடத்தை படிக்க தயாராகுங்கள் அன்பரே.. ஏன்னா?...
..அடுத்தமுறை கருத்துக்கணிப்பின் விடை சரியா வரவேண்டும் அல்லவா?..

இல்லை....  எனக்கு அதெல்லாம் சரியா வராது.  அடுத்தவன் பின்புறத்தை  “வரு”ட்டு.. ”வரு”ட்டு என்று நோண்டினால் தான்,  நிம்மதியான தூக்கம் வரும் என நீங்கள் நினைத்தால்..
”ஹி..ஹி......நானும் ரெடி..  வா மச்சி ”   )
.
.
.

Tuesday, May 10, 2011

ஒண்ணுமே புர்லே...

எல்லோருக்கும் வணக்கம்.

எழுத சரக்கு ஒன்றும் இல்லாததாலும்..ஆணிகள் அதிகம் பிடிங்கி எறியவேண்டியிருப்பதாலும்......ஹி..ஹி..
ஒன்றுமே எழுத தோணவில்லை.


இந்த இடைப்பட்ட காலத்தில் , எனக்கு ”பாடை கட்டி” பறை அடிக்கத் தயாராக இருக்கும் ’அமெரிக்க நெஞ்சக்களுக்கும்’.. ’தஞ்சை மூர்த்திகளுக்கும்’.. ஒரு வணக்கத்தை போட்டு..  மேலும்... எனக்கு, இரண்டு நாட்கள் விடுமுறை அளித்தால்.. உங்களுக்கு புஸுக்..புஸுக் என்று குஷ்பூ போல பிள்ளை பிறக்கும் எனக்கூறி.. ஆணி பிடிங்கச்செல்கிறேன்.

நன்னி .. வணக்கம்...

பட்டாப்பட்டி..

Tuesday, May 3, 2011

அன்னையை போல்..ஒரு அன்னை இல்லை,

.
.
.
அண்ணே. வணக்கம். நான் ஒரு கட்சியின் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறேன். நடந்து முடிந்த தேர்தலில், உள்ளடி பண்ணி, என்னை ஒழிக்க, பலர் சபதம் எடுத்துள்ளதாக அறிகிறேன். அதற்க்கு பயப்படுபவன் அல்ல இந்த பாலு.      நான் சிந்திய ரத்தத்தைப்பார்த்தால் உங்களுக்குப் புரியும்.


ஆனால சிலர் தூண்டுதலின் பேரில், என் உருவப்படத்தை எரிப்பதும், செருப்பில் அடிப்பதுமாக, அங்கொன்றும், இங்கொன்றுமாக, தமிழகத்தில நடந்துகொண்டுள்ளது.  அதனால், நான் தீராத மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அதற்க்கு தீர்வுதான் என்ன?.


-பெயர் சொல்ல விருப்பமில்லை.
.
.

================================



அன்பு நண்பா.. செருப்படி வாங்குவதும், சாணி கொண்டு முகத்தில் பூசுவதும், பொதுவாழ்க்கையில் சகஜம்தான். நீங்கள் உங்கள் பெயரை தெரிவிக்க விருப்பமில்லாதபோதும், அது பளீரென்று மக்களுக்கு தெரிவதுதான், உங்களை செருப்பில் அடிக்கக்காரணம்.

இதற்கு ஒரே ஒரு பரிகாரம் உண்டு.
உங்கள் அன்னையின் காலை மண் எடுத்து, 2 மாதங்கள் குளிக்காமல், யார் கண்ணிலும் படாமல் இருந்து, புட்டப்பர்தி சென்று தலைமுழுகினால், இன்னல் தீரும்..

உங்களுக்கல்ல..... ”மக்களுக்கு..”....

உங்கள் கட்சியின் தலைவியும், உடன் பணியாற்றும் பிரதமரும், சாப்பாபாவை இறுதிச்சடங்களில் கலந்துகொண்ட காட்சியை கண்டு, புளாக்கிதமடைந்தவன் நான். சாய்பாவை கடவுளாக்கியதில் பெரும்பங்கு, நாட்டை முன்னேற்றத் துடிக்கும், அரசியல்வாதிகளுக்கு உண்டு.

ஒரு நாட்டின் முதல்வர், அவரதம் மக்களை சுட்டுக்கொல்லும் கயவர்களுடன், உணவருந்துவது. மூடநம்பிக்கையை கொழுத்துவிட்டு எரியச்செய்ய அவர்தம் கட்சிக்தலைமையுடன் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு, மக்களை திசைதிருப்புவது.

ஏன்.. பல நூறு மீனவர்கள் கொள்ளப்பட்டபோது, எங்கு சென்றனர் இந்த கயவர்கள்?. ஒருவேளை மீனவர்கள்..காவியுடை அணியாமல், வாயில் லிங்கம் எடுக்கும் கலையை அறியாமல் இருப்பது அவர்தம் குற்றம்போல...

ஆக.. நாடு , நல்லவர்களின் துணையுடன், பீடு நடை போட்டு  சென்றுகொண்டுள்ளது. அழிவுக்கா..அல்லது ஆக்கத்துக்கா என்ற கேள்வியை புறந்தள்ளிப்பார்த்தால். இன்னும் 20 வருடங்களில், நமது சந்ததியனருக்கு, ”மனிதமாமிசம் உண்ணும் பழக்கத்தை” ஏற்படுத்திவிடுவோம் என் நினைக்கிறேன்.

வாழ்க உங்கள் கட்சியும்... கொள்கைகளும்.


பின்குறிப்பு.
நீங்கள் ரத்தம் சிந்திய வரலாற்றை நாடே அறியும். எதற்கும் நல்ல மருத்துவரைப்பார்க்கவும்..

” மூலம் இருந்தால், மலத்துடன் ரத்தம் வரலாம்.”

Tuesday, April 26, 2011

ஒட்டுண்ணிகள்.- பாகம் 1

சமூகத்தில், ஒருவர்.. மற்றொருவரை சார்ந்திருப்பது இயல்பான நிகழ்வு.  ஆனால் அது பீறிட்டு எழுந்து, நம் கட்டுப்பாட்டைமீறி, கன்னாபின்னா என  அலைபாயும்போது... பிரச்சனைகள் தலைதூக்குவதும் இயல்பே.   உதாரணத்துக்கு.. தமிழகத்தை பொருத்தவரை , கலைஞர் கட்சீ..அல்லது  எம்.ஜி.ஆர் ஆரம்பித்துவைத்து, இப்போது அம்மையாரால்  முடித்துவைத்துக்கொண்டிருக்கும்  அம்மா கட்சீ. மற்றும் சில சாதி மதக்கட்சிகள்.

மக்களுக்கு இந்த பெரிய கட்சிகளைவிட்டால் வேறு நாதியும் இல்லை. தேர்தல்  அன்று பட்டாடை போர்த்தி.. பாலூட்டி.. பாராட்டி... ஓட்டு வாங்க,  அரசியல்வாதிகள் செய்யும் சேஷ்டைகள், தேர்தல் முடிந்ததும்,  வாக்காளர்களை.. செருப்பில் அடித்து, சாணி பூசி ஆடம்பரமாக  முடித்துவைக்கப்பட்டுவிடும். நாமும் பழம்பெருமைகளை பேசி, பல்லிளித்து  சகஜ வாழ்க்கைக்கு திரும்பிவிடுவோம்.

சில வருடங்களுக்குமுன், ஈருடல் ஓருயிராய் உலாவந்த ஜான்ஸி அம்மையார்,  டான்ஸி என்ற சுனாமியால் அலைகழிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டார்.  அன்றையபொழுது தொலைகாட்சியில், அவரது செருப்பு முதல், சென்ட் பாட்டில்  வரை உள்ளாடைகள் தவிர்த்து, தமிழக மக்களுக்கு தெரியவைத்து,  தெளியவைத்தது தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்களே. 

அம்மா சென்றார். அய்யா வந்தார். கூடவே ராசா வநதார். கனியும் வந்தார்.  களை கட்டியது தமிழகம். 50 கோடி.. 60 கோடி.. ம்.. தலைமயிருக்கு  சமம என ஓங்கார நாதம் செய்து சுருட்டிய சுருட்டில் தப்பியது நம் பட்டாபட்டி  ஒன்றுதான் என்று பெருமையுடன் கூறிக்கொள்ளலாம்.

இந்த நிகழ்வும் ஊடக்கதின் வாயிலாக மக்களை சென்றடைந்தது. மக்களும்  எப்பொழுதும்போல டீக்கடை பெஞ்சுகளிலும், முடிவெட்டும் இடத்திலும்  விவாதித்து அடித்துக்கொண்டுள்ளனர். இலவச அரிசியுடன், பேச்சு சுதந்திரமும்  வழங்கிய ஆட்சியாளர்களுக்கு, ’ஒரு கோயில் கட்டுவோம்’ என்ற நினைப்பே  இல்லாத ஒரே இனம் மனித இனம்தான். விரைவில் அதுவும்  பூர்த்தியாக்கட்டும். 

இவ்வளவு சுருட்டினார்களே. அதனால் அடுத்த கட்சிக்கு ஆட்சியை கொடுத்து,  அவர்களுக்கு நாம் அடிமைகளாக உழைக்கலாம் என்றால்..... சில பதிவர்கள்  நசுங்கிய சொம்புடன், நாட்டாமை செய்ய வருகின்றனர்.

கலைஞர் சுருட்டியது தவறு என் சொன்னால்.. ஜெயாவின் அல்லக்கை.
ஜெயா ஒரு ஆணவக்காரினு சொன்னால், கலைஞரின் அல்லக்கை.
ஆக.. மக்கள் யாருக்காவது அல்லக்கையாகத்தான் இருக்கவேண்டும்.

சரி. குஜராத்தில் மோடி பொருளாதார வளர்சிக்கு, பல நல்ல திட்டங்கள் போட்டுக்கொண்டுள்ளனரே என சொல்லிவிட்டால்.. பொங்கிவந்து அழகிய தமிழில் “ங்கொய்யாலே.. நீ ஒரு பார்பன அடிவருடி” என்று பட்டம் கொடுக்க துடிக்கின்றனர்.

விந்துடன், கழக ரத்ததைதையும் பீச்சி.. அடிமைகளாக வெளிவந்த ..இவர்களைப்பார்த்து புன்சிரிப்புடன் என் வழியில் செல்கிறேன்.

--இன்னும் வருண்ம்...




(  பட்டாபட்டிக்காக சின்ராசூ..).
.
.

Thursday, April 14, 2011

வாக்களியுங்கள் ராஜபக்சேவுக்கு எதிராக ...

தமிழீழத்தில் 3 லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்துவிட்டு,  தமிழக மீனவர்களையும் கொன்று கொண்டிருக்கும், போர் குற்றவாளி ராஜபக்சே, சர்வதேசத்தின் அங்கீகாரம் பெற மீண்டும் ஒரு முயற்சி எடுக்கிறான்.

2011 –ஆம் ஆண்டுக்கான, Time இதழின் சிறந்த பட்டியலில் இனவெறியன் ராஜபக்சேவுக்கு எதிராக (Not influential) வாக்களியுங்கள்… 




அய்யா தமிழர்களே..
நம்ம அய்யா.. ’தமிழை படிங்க..தமிழ படிங்க’னு சொல்லி...தலைதலையா அடிச்சதாலோ.. இல்லை..அதை மட்டும் படிச்சதாலே.. 

வந்த வினைதான் இது..

இதுவரைக்கும் தெரிஞ்சு குத்துனானுகளோ.. இல்லை.. குத்தச்சொன்னாங்கனு குத்துனானுகளோ..

எகப்பட்ட பேர் “Yes" க்கு குத்தி.. அவனை பெரியமனுசனாக்கிட்டு இருக்கீங்க...


மறக்காம “NO" - ல குத்துங்க சாமியோவ்..




( சே.. நடிகர் கார்த்திக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா.. இந்த அறியாமைய பயன்படுத்தி... என்னக்கோ “முதல்வர்” ஆகியிருக்கும்..


அதனால...

மறக்காம “NO" - வில் குத்துங்க....






சுய விளக்கம்..

செய்தீ :கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, மயிலாப்பூர் எம்எல்ஏ எஸ்.வி.சேகர் உள்பட 19 பேரை கட்சியில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு நீக்கியுள்ளார்.
 ===============================



நேற்றைய பதிவுக்கும், இப்போது தங்கபாலு டிஸ்மிஸ் செய்து கொண்டிருக்கும் நிகழ்வுக்கும், யாதொரு சம்பந்தமும் இல்லை..
இது அவரின் தன்னிச்சையான முடிவு. சத்தியமா.....தலைவரின் மண்டை மேல உறுதியாச்சொல்லமுடியும்
.

நேற்று ஆணி அதிகம் என்பதால், மதியத்திற்கு மேல்தான் பதிவு பக்கம் வரமுடிஞ்சது. பார்த்தா.. அண்ணன் தங்கப்பாலு.. சூறாவளிப்பிரச்சாரம் செய்ய வேன் ஏறிக்கிட்டு இருக்கார்.. அதான் பொறுப்பா. “அண்ணே.. தேர்தல் இன்னைக்கு.. ஓடிப்போய் ஓட்டுப்போடுனு” அட்வைஸ் பண்ணினேன்,.

அது தப்பா?..

கடைசியா வந்த ஏஜன்சி செய்தி.  சத்தியமூர்த்தி பவன் பக்கம் உள்ள டீக்கடையில், டீ குடிக்க வர பயலுகளோட, வாக்காளர அட்டையை வாங்கி , அவர்களையும் டிஸ்மிஸ் செய்துகொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். ஆகவே தயவுசெய்து.. இன்னக்கு மட்டும் யாரும் அங்கே  டீ குடிக்க போகவேண்டாம்..


இப்போ மெயின் மேட்டர்.

அன்பு அண்ணன் அருள்,  அவரது ப்ளாக்ல , ராமதாசு கெலிச்சா.. தூக்கு போட்டுகவேணும்னு சொல்லியிருக்காரு.. நானும் அதைத்தான் சொல்றேன்.. அந்த பீஸு கெலித்தா.. தூக்குபோட்டுக்கொள்வதுதான் சிறந்த தண்டனை.


விசயகாந்து.
யோவ்.. நீங்க தண்ணி அடிச்சா.. வாந்தி எடுத்துட்டு தூங்கப்போவீங்க. ஆனா எங்க அண்ணன் எப்படி ஸ்டெடியா.. வேன் மேல ஏறி நின்னு வாக்கு கேட்டாரு.. அதுக்காகவே அவருக்கு பிரதமர் போஸ்ட் கொடுக்கனும்யா..
எப்ப பாரு சும்மா... சும்மா.. தண்ணி அடிச்சிருக்கான்,,ஒளரான்.. வாந்தி எடுக்கானு பேசிக்கிட்டு..
நீ கண்டி தில் இருந்தா.. பக்கத்தில போய் பாரு..
எங்க தல.. வாந்தி எடுத்தாவே.. 2 மீட்ட்ர் தூரத்துக்கு லை போட்டமாறி.... வரும்.. சொல்லிப்புட்டேன்

செயலலிதா..
10 அடி நடந்தாவே.. 10 நாள் கொட நாடு போய் ஓய்வெடுக்க வேண்டிய பீஸு.. பாவம்.. மக்களுக்கு கஞ்சி கொடுக்கிறேனு வெயிலு,,.மழைனு ( பெய்யுதா சாமி!!)   பம்பரமா சுற்றி..சூறாவளி பிரச்சாரம் பண்ணியிருக்கு....

இப்ப சொல்றேன். அது கெலிச்சாலும் சரி.. தோத்தாலும் சரி... தக்காளி 2 வருசம் ஓய்வெடுக்கப்போயிடும்.. நீதான் ஓட்டு போட்டாச்சே.. இனிமேல, உனக்கு எதுக்குயா நான் விளக்கனும்?.

ஆகவே.. உடம்பிறப்புக்களும், ரத்தத்தின் ரத்தங்களும்.. தேர்தல் சுனாமில இருந்து விலகி.. பொழப்ப பார்க்க போகலாம்..

கடைசீயா

சும்மா இருக்கும் நேரத்தில.. குஷ்பூவை போய் பார்த்தா.. ’புசுபுசு’னு குழந்தை பிறக்குனு யாருயா எங்க அண்ணன் தங்கபாலுகிட்ட போட்டுக்கொடுத்தது?

சொன்னவன் மரியாதையா ஒத்துக்கிட்டா தப்பிச்சே.. இல்ல கல்லடிபடப்போறே  !!!

போய் ஒழுக்கம%$யிரா.. அது புசுபுசு இல்லை.. ”புஜுக்புஜுகு”னு சொல்லு..!!!


.
என்னையும் ..... தங்கப்பாலு அண்ணன் டிஸ்மிஸ் செய்யப்போவதா நியூஸ் அடிபடுது.. அதுமட்டும் நடந்தா.. ”காலையில கனிமொழிக்கு ஒரு வணக்கதையும்.. மாலையில மார்ட்டினுக்கு ஒரு வணக்கத்தையும்” போட்டு....
 ராமதாஸு அண்ணன் மாறி ..குடும்பத்தோட கட்சி மாறிடுவேன்.. மைண்டல் வெச்சுக்க .. !!
.
.
.

Wednesday, April 13, 2011

உங்கள் வாக்கு காங்கிரஸுக்கே.. -தங்கபாலு



வணக்கம் என் தமிழக வாக்களப்பெருக்குடி மக்களே.
’பதிவர்களுக்குள் சண்டை இருக்கலாம். சச்சரவு இருக்ககூடாது’ என்ற உயரிய நோக்கம் கொண்ட மக்கள் தொண்டன் நான். இந்த ப்ளாக்கின் சொந்தக்காரரும், பதிவுலகில் செல்லமாக.. ’பட்டா’ என்று அழைக்கப்படும் பட்டாபட்டியும்...............,
என்னையும், ’எங்கள் கூட்டணியுடன் இணைந்து தொண்டாற்றும் கழகத்தையும்’, கண்டபடி பேசி, திட்டித்தொலைத்ததும், வம்புக்கிழுத்தும், கழுவி ஊற்றீய செயல் என் நெஞ்சை புண்ணாக்கியவேளையிலே...  களம் இறங்கி, விவாதம் செய்து, இந்த ப்ளாக்கை விவாதமேடையாக்கிய, திருவாரூர்காரன் என்று அழைக்கப்படும் வெளியூர்காரனை நினைவில் நிறுத்த, பாரம்பரிய கட்சித்தலைவனாகிய நான் கடமைப்பட்டுள்ளேன்.

ஏன் இந்த பீடிகை?

’எல்லாக்கட்சிக்காரார்களும் ஒரே மேடையில் நின்று பிரச்சாரம் செய்யும் காலம் வருமோ?’, என்று பதிவர்கள் பலர் பதைபதைத்து நிற்க, அதை செயலாக்கிய வடிவம் தந்த பட்டாபட்டிக்கும் வெளியூர்காரனுக்கும், என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்தல் நாள் வரை, இந்த ப்ளாக்கை விவாதமேடையாக்கிக்கொள்ளலாம் என்ற பெரியமனம் , காங்கிரஸ்காரர்களைவிட்டால் ப்ளாக்கர்களுக்கு வருவது, ’அன்னையின் ஆட்சியால்தான்’ என்பதையும் பதிவுசெய்யும் கடமை, தமிழக காங்கிரஸ் தலைவனாகிய எனக்குள்ளது.

  • அன்று.. இந்த மேடையில், அனைவரையும் காறீய பட்டாபட்டி

  • நேற்று.. இதேமேடையில் கலைஞருக்காக வெளியூர்காரன்.

  • இன்று.. தமிழகத்தின் நிரந்திர காங்கிரஸ்தலைவனாக, ”நான் ”

இந்த நாள் என்னுடைய நாள். அதாவது எங்கள் அன்னை சோனியாகாந்தியின் நாள்.  அவரின் ஆணைப்படி ’உங்கள் வாக்கை எங்களுக்குப்பெற’,உரிமையுடன் நின்று, என் பிரச்சாரத்தை தொடங்குகிறேன்.

பழையதைப் பேசிப்பேசி தமிழன் தற்குறியாவான் என்று, அன்றே எங்கள் ’நிரந்திரத் தலைவன் ராஜீவ்காந்தி’ என் இடது காதில் எடுத்துரைத்தார். அதை என்னைக் காக்கும் கடவுள் ‘அன்னை’யும் வழிமொழிந்துள்ளார். 

பத்திரிக்கைகள் எங்களை புறந்தள்ளி கழகத்தை விமர்சித்துகொண்டுள்ளதைப்பார்த்து, ”அய்யகோ .. எங்கள் ’அன்னை’-கே சோதனையா?” என்று பதைபதைப்பில், வேட்புமனு தாக்கல் செய்தபொது  நிகழ்ந்த சிறுதவறு...  அதைப் பரிகாசம் செய்வதுதான் தமிழனின் செயலா?

உங்களைப்பார்த்துக்கேட்கிறேன்.
மனிதனாகப்பிறந்தவன் தவறே செய்வதில்லையா?.
எங்கள் கட்சீ, வேட்பாளர்கள் நேர்காணல் முடிந்து.......... களம்காண தயாராகவுள்ளது. புறப்படும்முன் “எங்கள் வாக்குறுதிகளை” உங்கள் பார்வைக்காக...

நாங்கள் ஆட்சீக்கு வந்தால், அன்னையில் பொற்கரங்களால், ஒவ்வொருவருக்கும்
  • இரண்டு மிக்ஸி,
  • இரண்டு கிரைண்டர்,
  • இரண்டு வாசிங் மிசின்,
  • இரண்டு இரட்டைஆடுகள்,
  • கல்யாணம் செய்தால் காதுக்கு கம்மல்,
  • கருமாதி செய்தால், மலர்வளைத்துக்குப் பணம்.

அதுமட்டுமா?
  • மக்களுக்கு இலவசமா இரண்டு செல்போன்கள்
  • இரண்டு டீவீக்கள்
  • இரண்டு BroadBand கனெக்‌ஷன்கள்

எல்லாமே இரண்டு.. ஒன்று எங்கள் அன்னை தருவது.. அடுத்து அவர்தம் புதல்வர் தருவது.

எங்களைப்பார்த்து உரிமையுடன் கேட்கலாம்.
வேறு என்ன வேண்டும்?.
( பட்டாபட்டி அணிந்த பன்னாடை மேடை அருகே செல்ல.. தலைவர்.. மை-கையும் வேட்டியையும் இறுக்க பிடித்தபடி )

யோவ்.. யாருய்யா நீ? இப்ப என்னா சொல்லீட்டேன்?..

யோவ்.. நைனா.. சீக்கிரம் பேசி முடி..   மைக் செட்டை கழட்டீட்டு. ஊட்டுக்குப்போய் நாஸ்தா துன்னவேனாம்?-மைக் செட்காரன்


ம்.ம். ( எப்படியெல்லாம் பயமுறுத்துரான்க!!)   நாங்கள் தவறாக ஏதாவது செய்திருந்தால் அதை மறந்து, உங்கள் துயர் துடைக்க, “கை” சின்னத்துக்கு வாக்களியுங்கள். எங்களை பெருபான்மையாக தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு உழைக்க நாங்கள் இருக்கிறோம்.


ஏம்பா.. மைக் செட்டு.. ஏதாவது கேள்வி கேட்கனுமா?.

ஓய்.. என்னியா?.. சரி.. ஏய்யா மீனவனை இப்படி கொல்றானுக இலங்கைக்காரனுக?-மைக்

சரியான நேரத்தில கேட்கப்பட்ட கேள்வி. இதுவரை இறந்த மீனவர்கள் 500 கொச்சம்.  ஆனால் அதற்கு சிங்கள ராணுவம் செலவளித்த  குண்டுகள் சுமார் 5000.   அதாவது அவர்களால், சுமார் 10% விழுக்காடுவரைதான் சரியாக குறிபார்த்து சுட்டுள்ளனர். மீதி குண்டுகள் எல்லாம் விரயம்..

அதற்காக கவலைப்படவேண்டாம் என் தமிழகமே. அன்னை சோனியா ,இத்தாலியுடன் பேசி பேர்பாக்ஸ் பீரங்க்கிக்கு குண்டுகள் வாங்க உள்ளார்.,

நீங்கள் கேட்கலாம். ராஜீவ் வாங்கிய குண்டுகள் எங்கே? என்று. அதை பழைய BJP ஆட்சியின்போது..பொக்ரேனில்  கூடவே மறந்தபடி வைத்து... வெடித்துவிட்டனர். அன்னையின் ஆட்சீயில் இப்போது பீரங்கி மட்டும்தான் உள்ளது. விரைவில குண்டுகள் வாங்கி.. சிங்களவனின் 10% விழுக்காடு திறமையை, 20% விழுக்காடுவரை அடைய இந்திய ராணுவத்தை அனுப்ப தயாராகவும் உள்ளார்.

மேலும் தேர்தல் நெருங்குவதால் உங்களிடம் ஒரு உண்மையை சொல்லித்தொலைக்கிறேன்  ’அன்னை ’,........  இந்தியா வந்து வருடங்கள் பல ஆகிவிட்டது.  இந்தியில் சரளமாக பேச முடிந்த அளவுக்கு..இப்போது  இத்தாலியில்  பேச முடியவில்லை.

இடைத்தரகர்கள் வழக்கு..வம்பு என்று இந்தியா வரப்பயப்படுவதாலும்,  மீண்டும் குட்டராச்சியை வைத்து ’குண்டு வாங்கலாமா?’ என்று ஆலோசனை நடந்துகொண்டுள்ளது.


ஆகவே,  இந்த சிறிய பிரச்சனையை தேர்தல்களத்தில் நினைக்காமல். மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சீ காங்கிரஸ்க்கு...ஆங்..இன்னும் ஒரு முக்கியமான விசயம் மறந்துட்டேன்....

 வெயில் அடித்தால் தலை வாடாமல் இருக்கு, இலவச தொப்பி கொடுக்கும் திட்டமும் எங்களிடம் உள்ளது. அதுவும் எத்தனை?..

ரெண்டு.....


ஆகவே ......உங்கள் ஓட்டு ’கை’ சின்னதுக்கே.
அன்னை வாழ்க..ராகுல் வாழ்க...

உலகளவில், இந்தியா  உன்னதமான இடத்தை அடைய , கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்.


( குறிப்பு : நண்பர் ராவணண், அவரது திறமையெல்லாம் உபயோகித்து, கட்டங்கள் வரைந்து ராகு, கேது, சனி, போன்ற கிரகங்களை தவிர்த்து..நல்லநேரத்தை குறித்துக்கொடுத்துள்ளார்.
அவரது கூற்றின்படி, மாலை 5 மணிக்குமேல் வாக்கு சேகரிக்ககிளம்பினால.. ”இந்தியாவின் எதிர்காலம் காங்கிரஸ் கை-யில்” என்பதாலும்.............!!!!!!!!)



மைக்..பிடுங்கப்பட்டு பட்டாபட்டியிடம்

@பட்டாபட்டி..


இதுக்கும்மேலே....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்தூதூ......
ஓகே..ஓகே... நான் கிளம்புறேன்.. ங்கோ....எனக்கு ரிலாக்ஸ்டா.. ப்ளீஸ்யா..ஒரு அல்லக்கைய நோண்டி விடனும்..எப்பபாரு... தயாநிதி MORON.. கலாநிதி MORON.னு குலைச்சுக்கிட்டு,..குண்%$#டிகூட கழுவத்தெரியாம சுத்திக்கிட்டு இருக்கு... இப்படியே இருந்தா.. வரூண்டா  எப்போ மெரூண்டா ஆவது?.


ம்..ம்..சரி.. பொதுப்பிரச்சனைய..பொதுவுல தீர்த்துக்குவோம்..


அண்ணன் தங்கபாலு ஓட்டுக்கேட்டு...... வந்தாலும் வராவிட்டாலும்........    காங்கிரஸ் பெரும்பான்மை பெற என் வாழ்த்துக்கள்...

மறக்காம ஓட்டுப்போடுங்க.. குளித்து.. புத்தாடை உடுத்தி.. ”மாலை 5 மணிக்குமேல்”, உங்கள் வலது காலை எடுத்துவைத்து... பூத்துக்குப்போய்...

கை-சின்னத்துக்கு  வாக்களிப்பது உங்கள் கடமை..



தங்கபாலு அண்ணே நீங்களே பேசுங்க..
.
.
(மைக் கைமாறுகிறது)
.
.
.நான் சொல்லவேண்டியதை மக்களுக்கு விளக்கமாக விளக்கிவிட்டதாலும். மாலை வெயில் ஒருவித மயக்கமாக இருப்பதாலும்....
தேர்தல் களம் காணும் முன் எங்கள் பாசமிகு கூட்டணி கட்சியாம் திமுகவை சேர்ந்த அன்பு தொண்டர் திரு.வெளியூர்காரன் அவர்களை வாழ்த்தி பேசி இறுதிஉரை ஆற்ற வருமாறு அன்புடன் அழைக்கிறேன்..! 

ஓவர் டூ வெளியூர்க்காரன்..

டேய் சொட்டை..வாக்குபதிவு இன்னும் ரெண்டு மணி நேரத்தில முடியப்போகுதுடா வழுக்க மண்டை..! போ போய் தண்ணிய தொட்டு தலைய தொடைச்சுக்க...! அப்பத்தான் எங்களுக்கு ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி சொட்டமண்டைலையே எச்சி   தொட்டு அடிக்க வசதியா இருக்கும்..! அலையைவாடா விடறீங்க என் தலைவன ..! இனிமே பாருங்கடா.. ஆட்டத்த..!”
 

++++++++++++++++++++++ 

.


.

Tuesday, April 12, 2011

வாக்களிப்பீர் உதயசூரியனுக்கே - வெளியூர்க்காரன்



’வைகோ இல்லாத...பட்டாபட்டியும் இல்லாத தேர்தல் பிரசாரம்’, சைட் டிஷ் இல்லாத சரக்கு பார்ட்டி மாதிரி சப்புன்னு முடிஞ்சிருச்சு.. ஆயிரம் சொல்லு வாத்யாரே...வைகோ இருந்தா ஒரு கெத்துதான்யா..மனுசன இந்த சண்டாள சிறுக்கி என்ன நிலைமைக்கு ஆக்கிபுட்டா. சரி அத விடுங்க..நாம மேட்டருக்கு வருவோம்...! அந்த பொம்பளைய பத்திதான் எல்லாருக்கும் தெரியுமே...!


நாளைக்கு எலெக்சன்..யாருக்கு வோட்டு போட போறீங்கன்னு மொக்கதனமா கருத்து கணிப்பெல்லாம் கேக்கமாட்டேன்..நீ எந்த நாய்க்கு வேணா போடு..ஆனா, நான் உதயசூரியனுக்குதான் போடபோறேன்....!


நீயும் ஒரு நிமிஷம் யோசிச்சு பாரு..குஷ்பு புது ஜாக்கெட் போட்டுக்கிட்டு வந்து சொன்னுச்சு...வண்டுமுருகன் வடிவேலு விஜயகாந்தா நல்லா தமாசா கலாசுனாப்லையா..இதுகெல்லாம் வோட்டு போடாத...யாரு ஆட்சிக்கு வந்தா தமிழ்நாட்ல வளர்ச்சி நல்லாருக்கும்..உடனே கலைஞர் குடும்பத்தோட வளர்ச்சியான்னு பேக்காளிதனமா கேக்காத...எவன்யா குடும்ப அரசியல் பண்ணல..பார்லிமெண்ட்ல கலாவதி கலாவதிங்கற வார்த்தைய தவிர அடுத்த வார்த்தைய குளறாம பேச தெரியாத ராகுல் காந்திய ஏன் தேசிய தலைவரா காங்கிரஸ் கட்சி ஏத்துகிச்சு..சோனியா காந்தி என்ன உப்பு சத்யாகிரகத்துல   உள்ள போனவங்களா...?  ராஜீவ் காந்தி மவனும் பொண்டாட்டியும்கரத தவிர வேற என்ன தகுதி இருக்கு இவங்ககிட்ட...?


ஏன் சென்டருக்கு போற...ஸ்டேட்டுக்கு வா..ஜி கே வாசன் யாரு...? மூப்பனார் மவன்தான..? ராமதாஸ் தான் மவன மாடு மேய்க்கவா அனுப்புனாரு...? மினிஸ்டராதான ஆக்குனாரு..? அவ்ளோ தூரம் ஏன் போற..? ஜெயலலிதா யாரு...? எம்ஜிஆரோட ..சரி அத விடு..,விஜயகாந்த் மட்டும்தான் தனி ஆளா இருக்காருன்னு நெனைக்காத மச்சி..இருக்கற டேஞ்சர்லையே பெரிய டேஞ்சர் இவன்தான்..பிரேமலாதா அக்காவும் சுதீஷ் அத்தானும் தமிழ்நாட்ல ஆட்டம் போடறப்ப புரிஞ்சுபீங்க..வெளியூர்காரன் சொன்னது எவ்ளோ உண்மைன்னு..!


இங்க எல்லா பயலும் நாதாரிங்கதான்..எவனும் நல்லவன் கெடயாது...உனக்கு நல்லவனுக்கு வோட்டு போட சாயிசும் கெடயாது..இருக்குற மொள்ளமாரில ஒரு முடிச்சவிக்குக்கு நீ வோட்ட போடணும்..ஏய் இரு.. ஷாக் ஆவாத மச்சி..மேல படி..!


நான் என்ன சொல்றேன்..இன்னொரு தடவ ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு குடுத்தா அந்த அம்மா கலைஞர் க்ரூப்ப ஒளிச்சு கட்றதுக்கு ஒரு வருசத்த வேஸ்ட் பண்ணும்..அடுத்த வருஷம் அரசு கடுமையான நிதி நெருக்கடில இருக்கு.. முந்தைய திமுக ஆட்சிதான் இதுக்கு காரணம்னு சொல்லி இருக்கற நலத்திட்டங்கள் எல்லாத்தையும் புடுங்கிரும்..மூணாவது வருசத்துலேர்ந்து இவ்ளோ நாள் காய்ஞ்சதுக்கும் சேர்த்து சம்பாரிக்க ஆரம்பிச்சிரும்..அதுக்குள்ள அடுத்த வருஷம் வந்துரும் மறுபடியும் பழைய குருடி கதவ தொரடிதான்...!

விஜயகாந்த் அண்ணனுக்கு வாய்ப்பு குடுத்தா..அண்ணேன் இப்பதான் அரசியலுக்கு வந்துருக்காப்ள..நெறைய செலவு பண்ணிருக்காப்ள..அதெல்லாம் சேர்த்து சம்பாரிக்கனும்...அவரு கட்சிகாரங்கல்லாம் இனிமேதான் சம்பாரிக்கனும்..அவரு மச்சான் பொண்டாட்டி எல்லாரும் சம்பாரிக்கனும்..தவிர நாப்பது சீட்ட வெச்சுக்கிட்டு இவங்களால பெருசா ஒன்னும் நாக்க வழிச்சிற  முடியாது..ஏப்ரல் பதினாலாம் தேதி இவனுகள அம்மா செருப்பால அடிச்சு வெளில வெரட்டிரும்..அப்பறம் எங்கேந்து ஆட்சில பங்கு வகிக்கறது...இவனுக ஜெய்ச்சாலும் வேஸ்டுதான் ..அதனால இவனுகளுக்கு வோட்ட போட்டு உன் வோட்ட வேஸ்ட் பண்ணாத..!


தி மு க வ பொறுத்த வரைக்கும் வார்டு கவுன்சில்லர்லேர்ந்து மத்திய மந்திரி வரைக்கும் எல்லாரும் சம்பாரிசிட்டாணுக...சம்பாரிச்சதோட மட்டும் இல்ல..எதோ டைம் கெடைக்கறப்ப மக்களுக்கு ஒன்னு ரெண்டு நல்லதும் பண்ணிருக்காணுக... இந்த ஆட்சிலதான் தங்கம் மாதிரி ரோடு போட்ருகாணுக..ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டு தமிழ்நாட்லேர்ந்து பசிய ஒழிச்சிட்டாணுக.போன தேர்தல் அறிக்கைல சொல்லிருகர பெரும்பான்மையான வாக்குறுதிகள நிறைவேத்திருக்காங்க....!

அது மட்டும் இல்லாம  அடுத்த முதலமைச்சரா ஆகறதுக்கு திரு.ஸ்டாலின் அவர்களுக்கு எல்லா தகுதியும் இருக்கு...திரு.ஸ்டாலின் என்கிற ஒரு அரசியல் தலைவர் மேல ஜெயலலிதாவுக்கு கூட நல்ல மரியாதை இருக்குங்கறது எல்லாருக்குமே தெரியும்...துக்ளக் சோ வுக்கு புடிச்ச அரசியல்வாதி எனக்கு தெரிஞ்சு திரு.ஸ்டாலின் மட்டும்தான்..!


அதனால குஷ்பு வடிவேலு இவங்கலஎல்லாம் லெப்ட்ல விடு..கூத்தாடிங்க சொல்லி நாம் வோட்டு போடற அளவுக்கு நாம இன்னும் முட்டாள் ஆகல..உனக்கு எது கரெக்டுன்னு தோணுதோ அவங்களுக்கு வோட்டு போடு..!

என்னை கேட்டேன்னா  யோசிக்காம திமுகவுக்கு வோட்டு போட்ருனுதான் சொல்லுவேன்..!


ஏன்னா, யோசிச்சீனா உன்னால எவனுக்குமே வோட்டு போட முடியாது..!


ஆகையினால்        "வாக்களிப்பீர் உதயசூரியனுக்கே.."



(காங்கிரஸ் நிக்கற தொகுதில ..அவனுகளுக்கு ஓட்டுபோடாதீங்க.. அதைத்தான் பட்டாபட்டியும் எதிர்பார்க்கிறான்.
அவனோட வாயால.. யாருக்குவேணா போடு..ஆனா காங்கிரஸ்க்கு மட்டும் போடாதேனு சொன்னதால்.. அவருக்கு “ஓ” போட்டு விடை பெறுகிறேன்..
நன்றி - வெளியூர்க்காரன் )



( பட்டாபட்டி அவசரவேலையாக மலேசியா சென்றதற்கு..

கழகத்தின் சார்பிலும்.. 
அவரது கம்பெனியின் சார்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.. 

கடவுளே.. அவன் திரும்பிவருவதற்குள் தேர்தல் முடிந்துவிடவேண்டும்  )





Monday, April 11, 2011

நிதர்சனமே நில்லடா..

இன்றோடு உங்களை துரத்தும் நிகழ்வு தற்காலியமாக(?) நிறைவுபெறுகிறது.
No more தூற்றலும் போற்றலும்..
:-)


பட்டாடை எடுத்து... 
அதிலிரண்டு குஞ்சம் வைத்து....
வியர்வை வீச்சை பொறுத்தருளி...
வேசித்தனமாக கைகூப்பி...

வாக்கு சேகரித்து. வளமுடன் வாழவே..
தெருத்தெருவாய் சுற்றி..
குடும்பத்தினரை மறந்து..
கூடுவிட்டு கூடு பாய்ந்து..

குமரேசா.. என்ன இது?..

(கவித கவித..)
==============================

உங்கள்  வாக்கு உன்னதமானது. ( ஏப்ரல் 13 வரை மட்டுமே.. கால நீடிப்பு இல்லை)
மறக்காமல் வாக்கு அளியுங்கள்.
யாருக்கு வாக்கு அளிப்பது?.


ஒருத்தன் மொ&^%மாறி. அடுத்தவன் மு^%$#சவுக்கி.

ஏதோ ஒரு நாதாறி ஆண்டுவிட்டுப்போகட்டும்.

”ங்கோ%#$#.. ஓட்டு மட்டும் உனக்கில்லேனா.. 
அன்னையின் அடிமைகளாய்..பல்காட்டி..கைகட்டி
ஈழத்தை நாங்கள்...
இங்கேயே... காட்டியிருப்போம் பன்னாடை வென்றுகளே.....

ஜனநாயகம் என்று,  நாய் தலையில் வெண்ணைபோல..
போ...போ பொழச்சுப்போ.. ங்கொய்யா.. 
ஓட்டுக்காக..பொழச்சுப்போ..”






==============================

மறக்காமல் உங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள். இது  ஜனநாயக கடமையாகும்..

உன் கடமை ஏப்ரல் 13 வரை.. அதற்குப்பின் வரும்மடா.. “ பாலும் தேனும்.பக்குவமாய்..இலவசமாய்.”

ஓட்டை போட்டுவிட்டு. . கிழிந்த வேட்டியை இறுக்ககட்டி..உன் உழைப்பில்
முன்னேற வழியைப்பாரடா... செல்லக்கூனா மானாக்களே..


அய்யா வருவாரு.. அன்னை வருவாரு.. அம்மா வருவாரு..  என்று வாய் திறந்து நின்றுவிட்டால்....

”இலவச அரிசிக்கு பதில்..இலவச கஞ்சி வரும்”

கால்களைப்பரப்பி. கைகளை ஊணி.. வாய் திறந்து நீயிருந்தால்.....
’வைக்கும்(?)’ காலம் வெகு அருகில்.
வரவேறக்க காத்திருடா.. என்னருமைத் தமிழினமே...
.
.
.
( மறக்காமல் ..உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்...)

நன்றி- ”ரெமியும் மார்ட்டினும்.”  ( அக்கா கனிமொழிக்கு ..இதுவேற ”மார்ட்டீன்”..)
நன்றி  கொல்லாமை
.
.
.

Saturday, April 9, 2011

தலைவனும் தறுதலைகளும்.!!

.
.
.
என் தலைவனுக்கு பெரிசு.. இல்லை..இல்லை.. என் தலைவிக்குத்தான் பெரிசு.
மக்கள் என் தலைவன் பின்னால், அலைகடலென திரண்டு வருகிறார்கள்.
உன்பின்னால்.  கழிச்சடைகளும்..நாதாரிகளும்....

ம்.. எந்த பதிவில பார்த்தாலும்.. இதுதான் ஹாட் டாபிக்.

10..15 வருடங்களுக்கு முன்னால்.. ஈழத்தமிழரின் நிலைக்காக, வீதிக்கு வந்து போராடிய இருப்புக்கோட்டை  கிழச்சிங்கத்தை ( எதிர்கட்சியாக..) பார்த்து, கண் விரித்து , பரவசம் அடைந்த பன்னாடைகளில் நானும்  ஒருவன்.

அதற்காக.. நான் மாமியை சப்போர்ட் செய்யும் பதிவர் என்று..சில படித்த(?) பன்னாடைகளும் பாடுவதை  பார்த்தால்.. பின்புறத்தில சிரிப்பாக வருகிறது. என்ன செய்ய?.. ”உச்சிமுடியில் இருந்து,  அக்குள் வழியாக குஞ்சாமணிவரை” .  கழக ரத்தம் கண்டபடி பாஞ்சிட்டு இருக்கு..

இப்ப பிரச்சனை என்னான, ’களிஞர் நல்லவர்.. வல்லவர்.. பெண்ட் எடுப்பதில வல்லவர்’..  நீங்க பேசுங்க ’ராசா’... மக்கள் ஏற்கனவே மூளைய கழட்டி, முட்டி சந்துல வெச்சு வருஷம் ஆச்சு.

ஒரு பீஸு கூவிச்சு..
”ஸ்பெக்ரம் என்பது எதிர்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுனு
அப்பால.. ’அது ஊழலே இல்லை’னு ஒரு அறிக்கை.
சரி.. அப்புறம்.. குற்றம்தான் சாட்டப்பட்டுள்ளது. நிருபிக்கபடவில்லை..
ஹி..ஹி.. விசாரணை என்ற பேரில் உள்ளே போனதும்.. அன்னைதான் எங்க மேரிமாதா”-னு ..

ம்ம்ம்.. வெட்கம் இல்லாமல் துடைத்துவிட்டு.. மக்கள்முன் நிற்பது.. கழகக்கண்மணிகளுக்கு கைவந்த கலை.   ”மக்கள் தொண்டே மகேசன் தொண்டு...”

மின்சாரம்..
இவர்கள் ஆட்சியில் மின்சாரப்பற்றாக்குறைக்கு காரணம் எதிர்கட்சியின் அளவுமீறிய உபயோகம். என்னே அறிவு?.   மின்சாரத்தை சேர்த்து வைக்க, அது ’விந்து பேங்க்’ என்று நினைத்துவிட்டார்கள் போல..

அடுத்து ஆள் பெருக்கமும், அளவற்ற தொழில்கூடமும் மின்சாரத்தை உறுஞ்சுகின்றன. அதனால் பற்றாக்குறை.     யோவ்.. முடியலே சாமி..   ஆள் பெருக்கம் என்பது சராசரி நிகழ்வு. ஆனா. உங்க தலீவர் பெருக்கியது  அசாதாரண நிகழ்வு..

இன்னும் பெர்ர்ர்ர்ர்ர்ருக்க,  மருந்து கண்டுபிடிக்காதது.. பழைய ’ஆச்சி’யின்கீழ உள்ள மருத்துவதுறையின் ’சரிவு’..

அடுத்து.. இது இலவசம்.. அது இலவசம்-னு..
’வாயை திறந்து வையுங்கள். வலியில்லாமல் வைத்துவிடுவோம்னு’   என கூவல்.
ஏன்?..
ஆட்சிய பிடிக்கனும்.. குடும்பத்தை காப்பாற்றனும்..    எல்லா குடும்ப பெரிசுகளுக்கு இருக்கும் கவலைதான்..
போவதற்குமுன்..’மனைவி, துணைவி,மகன்கள் ,மகள்கள்’   வாழ்க்கையை செட்டில பண்ணவேண்டும் என்ற யதார்த்தம் .   இல்லாட்டி அப்பனே கிடையாதே!!..


அதனால....
இங்குள்ள மக்களை நான் பார்த்துக்குறேன்..மாட்ர்டினை மட்டும் நீ பார்த்துக்கனு..  
அப்பால.. நானும் வாரிசுகளும் தமிழக மக்களை நல்லா பார்த்துக்கிறோம்.. நீ டெல்லி போய்
அவங்களைப்பாருனு.. போவதற்க்கு முன்னால்..குடும்ப சொத்து  “எம்பி”யை எடுத்துக்கிட்டு போ-னு அனுப்பிச்சு  வைத்தது......

படிச்சபுள்ள பார்த்துச்சு.. ஆகா.. காந்தி தண்டி யாத்திரை போகும்போது களப்பணியில இறங்கியது.. படிப்போம்னு போய் பலவருசத்தை வீணக்கிப்விட்டோமேனு பதைபதைத்து.. மக்கள் பணி ஆற்ற..மார்க்கெட்டுக்கு வந்தா... ”விலைவாசி கன்னாபின்னானு ஏறியிருக்கு!!!!”.
நீங்களே சொல்லுங்க.. அதோட மனம் எப்படி சஞ்சலப்பட்டிருக்கும்..?.

தலைவர் பாவம்.. வயசான காலத்தில எம்பூட்டு நேரம் வண்டி இழுப்பாருனு யோசனை பண்ணி.. என்ன இருந்தாலும் படிச்ச புள்ளையில்லையா?.. மூளை அதன் வேலைய ஆரம்பிச்சு..  சுருட்டுச்சு பாருங்க.. அண்ணன் அஞ்சாநெஞ்சனே அரண்டுபோய் கிடக்காரு..

மக்களும் எப்பவும்போல, கோமணத்தை அவிழ்த்து..இறுக்கட்டியபடி..’இந்த பொண்ணுக்குள்ள இப்பூட்டு அறிவானு?’,  மூக்குல விரலை வெச்சுட்டானுக

ப்ளாஸ்பேக்

போனமுறை.. நகைக்கடையா போஸ் கொடுத்து, உடன்பிறாவாவை குளிப்பாட்ட, கும்பகோணத்தில குனியவைத்து , மக்கள் சிலரை நரபலியாக்கி.

என்னா நடந்துச்சு?
மாமிய கழட்டி விட்டு, ’மாமா.. மாமா’.. நீதான் எங்களை காப்பாற்றனுமுனு சொல்லி ஆட்சீய கொடுத்து, பெரிச ”சேர்”ல உட்காரவைத்தார்கள்..
உட்காரவைத்ததோடு அல்லாமல்.. தலீவரு... மக்கள் வாயில, ’பாலும் தேனும் வைப்பாருனு’.. சந்தோசப்பட்டானுக. தூத்தேறிக..


பெரிசு...வந்தாரு.. உட்கார்ந்தாரு.. மோந்துபார்த்துட்டு... கழககண்மணிகளை விட்டு சூறையாடினார் பாருங்க.. தக்காளி.. கோமணத்தை மட்டும் விட்டுப்புட்டு.( அப்பூட்டு நாத்தமாவ இருக்கு தமிழன் கோமணம்?)

ஆனா ஒன்னுய்யா.. அவரு மக்கள் நினைத்தமாறி, ’பாலும் தேனும் வைத்துவிட்டு’ கூடவே வாயை வேற துடைச்சு விட்டிருகாரு..

போதுண்டா வெண்ணைகளா.. சம்பாரிச்சாசில்லை.. இடத்த காலி பண்ணு.. அடுத்து வேற நாயி வந்து மீதியிருப்பதை நக்கிட்டு போகட்டும்..


மக்களுக்கா?..
விடு..விடு.. பன்னாடை பரதேசிக.. டீவீ கொடுத்தாச்சு.. அரிசு கொடுத்தாச்சு..
அவனுகவேலை, அடுத்த தலைமுறை  அல்லக்கைகளை உருவாக்குவதுதான்.. அரிசி பற்றவில்லையா..ங்கொய்யா.. பிச்சை எடுக்கட்டும்..

ஹி..ஹி 5 வருசத்துக்கு ஒரு தடவை சினிமாகாரிய கூட்டிக்கிட்டு போய் , லைட் போட்டு காட்டிட்டு    ஓட்டு வாங்கிட்டு.. மறுபடியும் பிச்சை எடுக்கவிடுவதுதான் தலைவனின் கடமை.

அதனால... உங்க தலீவனை..சுருட்டினவரைக்கும் போதும்.. அதை வைத்து அடுத்த 5 வருஷம் வாழ்க்கைய என்ஜாய் பண்ணச்சொல்லு..
ஏலகிரி மலையில காற்று நன்றாக வீசுகிறதாம்.. துண்டைப்போட்டுட்டு போகச்சொல்லுங்க.. உட்ட்ட்டன்பிறப்புகளே.....

அடுத்த பார்ட்டி வந்து கொஞ்சம் நக்கிட்டு போகட்டும்..
எப்படியும் மிச்சம் மீதி வைக்கத்தான் போறானுக.. அப்பால நீங்களே திரும்பவும்  வந்து மீதிய நக்குங்க..

ஹி..ஹி  இதுக்குப் போய் சண்டை போட்டுக்கிட்டு...




”தமிழன் வாழ்க.. தமிழினம் வாழ்க..”
( கத்தும்போதும்..கோமணத்தை.. இறுக்க பற்றியபடி கத்தவும்...)
.
.
.

Friday, April 8, 2011

கோவையில் - ஊழலை ஒழிக்க.. இன்று




பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான லோக்பால் மசோதாவை உடனடியாக நிறைவேற்றக் கோரி, காந்திய தொண்டர் அன்னா ஹசாரே டில்லியில் துவக்கியுள்ள அகிம்சைப் போராட்டத்துக்கு, தேசம் முழுவதும் ஆதரவு அலை பெருகி வருகிறது. தமிழகத்திலிருந்தும் ஹசாரேக்கு ஆதரவாக பல கோடி கரங்கள் நீள்கின்றன. பூகம்ப பாதிப்பு, சுனாமி என பல்வேறு பேரிடர்களிலும், முகம் தெரியாத முகவரி அறியாத சகோதர, சகோதரிகளுக்கு உதவுவதில் முன் வந்து நிற்கும் கோவை மக்கள், இப்போதும் தமிழகத்துக்கே முன்னோடியாக களம் இறங்கியுள்ளனர்.

ஒட்டு மொத்த கோவை மக்களின் ஆதரவும் ஹசாரேக்கு உண்டு என்பதை மெய்ப்பிக்கும் விதமாக, கோவை வ.உ.சி., மைதானத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு அற்புதமான ஒரு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. சிறுதுளி, ராக், கொடீசியா, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை, சைமா, சீமா, ஜிட்டா, ஐந்தாவது தூண், ஊழல் எதிர்ப்பு இயக்கம், தேசிய லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கம் என பல்வேறு அமைப்புகளும் இந்நிகழ்வில் கைகோர்க்கின்றன.

உங்கள் ஆதரவை எதிர்நோக்கி...

=====================================



முண்டக்கலப்பையின் அல்லக்கைகளும்.. மாமியின் மடிதாங்கிகளுக்கு.. வைக்கப்படும் ஆப்பு இந்த நிகழ்வு...

பங்கேற்க அணி திரள்வீர்..




( அல்லக்கை முண்டங்களும்.. சயாமியா பிண்டங்களும்.. இங்கு கமெண்ட் போட்டு வாந்தியெடுக்க அனுமதியில்லை..)


ங்கொய்யாலே... 100 சிங்களவனுகளை கொன்னுட்டு..களப்பணி ஆற்ற ஒருத்தன் வந்திருக்கானாம்.. -இது அல்லக்கை எடுத்த வாந்தி..




ஆமாண்டா. ங்க்கொய்யா..

நீங்க லட்சக்கணக்குல கொன்னுட்டு.. வெட்கமேயில்லாம இருக்கும்போது.. நான் ஏண்டா நாதாறி வெட்கப்படனும்..





Thursday, April 7, 2011

ப்ளீஸ். இந்தமுறை மட்டும்...

.
.
.
சின்ராசு பார்வையில்
சோனியா.. அதாவது தங்கபாலுவின் அன்னை ,தீவுத்திடலில் எழுந்தருளி தமிழக மக்களுக்கு அருள் பாவித்தார்.    மொத்த தமிழகமே சென்னையில் திரண்டதுபோல அப்படி ஒரு கூட்டம்.    அருகில் இருந்த தமிழ் காக்கும் கடவுளும், அன்னையின் துதிபாடி, அவரது வேட்டியை காப்பாற்றிக்கொண்டார்.

மக்களுக்கு அன்னையை கண்ட மகிழ்ச்சி. மன்னர்களுக்கு பிச்சை கிடைத்த மகிழ்ச்சி.     அடுத்த இரண்டு   தலைமுறையும் அல்லல் இல்லாத  வாழ்க்கையை வாழ, அங்கே அட்வான்ஸ் கொடுக்கப்பட்ட நிகழ்வு,  கழகக்கண்மணிகளின் கண்முன்னால்.... அவர்கள் அறியாமல் நடந்துமுடிந்தது. வாழ்த்துக்கள்.

மேற்கண்ட கூ..கூ.....கூ.....கூத்தில, ’கச்சத்தீவை மீட்க அருள் பாவிக்கவேண்டும்’ என்று தமிழக கடவுள் வேண்ட, அதை  பரிசிலிக்கிறோம் அன்று அன்னை சொல்ல.. ஆகா.. கண்கோடி வேண்டும். விரைவில கச்சத்தீவு  மீட்கப்பட்டுவிடும்.

நாங்கள் செய்த சாதனைகளை சொல்லித்தான் ஓட்டு கேட்கிறோம் என்று ’தாய்’ கூற அதை ’நாய்கள்’, கரகோஷம்  எழுப்பி வரவேற்பதை பார்த்து.. எப்பவும்போல தலை குனிந்து கடந்து சென்றேன். கரவொலி விண்ணை எட்டட்டும்.


ஓவர் டூ பட்டாபட்டி.

ங்கொய்யாலே. அன்னை சாதனை சாதனை என்று சொல்லுச்சே?. அது என்னானு உங்க மரமண்டைக்கு  தோணிச்சா?. ஒண்ணுமில்ல பாஸ்.. ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டு இருந்த உங்க அன்னை, சேலை கட்டி வந்திருக்கு.

ஈழத்தமிழரை பூண்டோடு அழிக்க, ஆயுதம் கொடுத்து, ராஜபட்ஷேக்கு பொன்னாடை போர்த்தி, தமிழனுகளுக்கு  வேட்டியை அவிழ்த்துவிட்டு, கோமணத்தை கட்டி.. இன்னும் வெட்கமேயில்லாமல், தமிழக மண்ணில கால்  வைத்து.. ஓட்டுப்போடுங்கள் என்று கூறும் தினவு....

விடுங்க பாஸ்.. ’மலம் தின்று.. மலம் கழிக்க..காத்திருக்கும்  ஒரே இனம்’ , நம் இனம் .....மேலும் அது,  ஆணி கொண்டு கிறுக்கப்பட்டுவிட்டது.  ஆகவே தயவுகூர்ந்து , இந்தமுறையும் ஓட்டளித்து அவர்களை தேர்வு செய்யுங்கள்.   ’அதைத் தின்ன, இலவச ஊறுகாய் தரலா....ம்’ ...நீங்கள் மண்டியிட்டு ’வேண்டி......னால்...

இனிமேல், தமிழக் மீனவர்கள் கொல்லப்படமாட்டார்கள் என்று அன்னை திருவாய் அருளியுள்ளார்.    ஜெயிக்காவிட்டால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவர். ஆகவே கலைஞர் காப்பீட்டு திட்டத்தில்   இணைந்துகொள்வது நலம் பாவிக்கும்.  தலீவர் அவருக்கு இருக்கும் பணிச்சுமையினால், பல விசயங்களை பப்ளிக்கா சொல்லமுடியாது. ஆகவே அவருக்காக.. நான்

டேய்.. வெண்ணைகளா..
மீனவர்கள் சுடப்பட்டால், தந்தி மட்டும்தான் அடிக்கமுடியும்.
நீ தங்கம் தா.. உனக்கு பேக்ஸ் அனுப்பறேன். அதை விட்டுப்புட்டு....

பாவம்.  ஏதோ மகள் மற்றும் மகன்களுக்காக டெல்லிவரை வரை போய் லைட்டா மண்டியபோட்டா.. கூசாம கேள்வி கேட்க வந்துடுவியா?..

பார்வதியம்மா பிரச்சனையில, நாங்க ஏன் மூடிக்கிட்டு இருந்தோம்?னு கேள்வி வரும்.. கேப்பீங்க?..  .. கேளு..கேளு..கேட்டுப்பாரு...
ங்கோத்தா( நன்றி ஜாக்கி அண்ணே.) கேட்டவனை படுக்கவெச்சு பதப்படுத்த்த்த்த்த்த்த்த்தலே.... நாங்க உடன்பிறப்பு கிடையாது.

அந்தம்மா வந்து, என் தலைவனின் துணைவிக்கு தங்கமா  எடுத்துக்கொடுத்தது?.  நன்றியில்லா ஜென்மங்கள்..  சாய்பாபா, தலீவர் வீட்டுக்கு வந்ததும், ஒரு துணை கால் கழுவ, அடுத்தது துணை வேறேங்கோ .அதை விடு... அப்ப வந்துச்சு பாரு ஓங்கார நாதம்.. அதுமாறி உனக்கு பணண வருமாயா?.    அந்த நாதத்தின் இடையில எடுத்தாரு பாரு வாந்தி... அங்க இருந்துச்சு தங்கம்.  அது எங்களின் அங்கம். அதனாலே அவரு குணமடைந்தா, புச்சா..ஒரு நெக்லஸ் வந்திருக்காமே.. அதை வாந்திக்கு நடுவுல, எடுத்து தருவாருனு  நல்லெண்ணத்தில், பேக்ஸ் அனுப்பினோம்.

ஆனா.. பார்வதியம்மா எங்களுக்கு என்ன மயிறு பன்ணினாங்க?. அவருக்கு உடம்பு சரியில்லாதபோது எங்க தலீவன் ஏன் அறிக்கைவிடவில்லை என்று கேட்கும் கேடுகெட்ட கேனா.கூனா.. அந்தம்மா வந்து தங்கம் கொடுத்துச்சா?. எங்க தலீவன் அறிக்கையோ இல்லை பேக்ஸோ அனுப்ப?.

ங்கோத்தா...( மீண்டும் நன்றி ஜாக்கி அவர்களே..) இனிமேல எவனாவது கழக ஆட்சி சரியில்லேனா.. இலவச அரிசியில.. கழககண்மணிகளை விட்டு.. காலை மாலை..இருவேளையும் சிறுநீர் கழிக்ககூட தயங்கமாட்டோம்.
எங்கள் பாசப்பட்டறை, மருத்துவர்கிட்ட சொன்னா.. குடும்பத்தோட போய்..குந்தி.. ’இருந்துட்டு’ வருவாரு. அப்பால அதையே, ’இலவசம்’னு, (எங்க தலீவன் போட்டோவை சிரிச்சமாறியே போட்டு).......உங்களுக்கே .....வாயில கொடுப்போம்..

ஆகவே  ’அந்த மாமி வெள்ளையா இருக்கு!!.. வி.காந்து கருப்பா இருக்கு!’னு சொல்லிக்கிட்டு திரிஞ்சீங்க.. நான் மேல சொன்னது வீடு தேடி வரும்..

’ஏன்னா.. நாங்க சொன்னதைதான் செய்வோம்..செய்வதைதான் சொல்வோம். ஆங்....’

ஆகவே... எல்லோரும் மூடிக்கிட்டு.. இந்த ஒருமுறை மட்டும் எங்களுக்கு ஓட்டு போடுங்க.. அடுத்த தடவை..ங்கொய்யா.. ”எலெக்‌ஷனே இல்லாம பன்ணிடறோம்.”



உடன்பிறப்பே...
மொழுக்குனு, தலீவர் போட்டோ இருக்கும் இலவச அரிசி பை-நம்ம உடன்பிறப்புகளுக்கு மட்டும்.. (உறுப்பினர் கார்ட் கொண்டுவரவும்) என்னா.. அதில்தான், நம் தலீவரின் வாரிசுக்கள் பொழிந்த..நீர் தெளிக்கப்பட்டுள்ளது. அதைப்பெற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
.
.
.
//
பின்குறிப்பு... அதற்க்காக..அம்மா  ஆட்சீயில.. உங்களுக்கு.. பாலும் தேனும் வழியும்னு ஜல்லியடிக்க தயாராக இல்லை.. இன்னா.. தலீவர் பையில போட்டு கொடுத்தா..நீங்க வாயில போட்டுக்குவீங்க.. அந்தம்மா.. அந்த சிரமமே இருக்ககூடாதுனு . உங்க பின்னாடி(???????????) .
//
.
.
.
வாழ்க சனஞாயகம்...
.
.
.

//
இது முக்கிய குறிப்பு..

குஷ்பூ மாறியே குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள், அன்னையை வேண்டி.. ரூபாய் 1-யை , உங்கள் கோமணத்தில் முடிந்துவைக்கவும்.

அதற்குப்பின் வரும் 30 நாட்களுக்கு..அந்த கோமணத்தில், தண்ணீரோ.. சிறுநீரோ படாமல்..போற்றிப்பாதுகாத்து..31ஆம் நாள் சென்னை சென்று மேடத்தை சந்தியுங்கள்.. உஙகளுக்கு ’புஸுக்..புஸுக்’ என்று குழந்தை பிறக்கும்..
//
.
.
.

Saturday, April 2, 2011

டெக்னாலஜி முண்டங்கள்.

.
.
.
விசயகாந்த்..

இந்த பதிவை எழுதியதால், நான் ’அம்மா’ ..அதாம்ம்ம்ம்மா.. கொடநாட்டு மாமியின் விசுவாசியோ!.. ,தற்போதய முதல்வரின், ஒன்றுவிட்ட துணைவியின், தூரத்து சித்திமகனின் அல்லக்கையோ! ,தமிழகக்காவலன் மருத்துவரின் அடிவருடியோ!... இல்லை என்பதை சுயநினைவுடன்  சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

கண்ணால் காண்பதும் பொய்.
காதால் கேட்பதும் பொய்.
கனிமொழியின் பொய்யே.. மெய்
-னு கதை சொல்லவும் தயாராக இல்லை.

இந்த பதிவு.... ”படித்த..பண்பான...பகுத்தறிவுமிக்க... பன்னாடைகளுக்கு” மட்டும்.    ங்கொய்யாலே.. படிக்கும் காலத்தில் ஒழுக்க ம&^%$யிரா படிச்சிருந்தா, மூளைய கால் சந்துல வெச்சுக்கிட்டு திரியும் நிலமை வந்திருக்குமா?        
கேட்கிறேன் கேள்வி.


மக்கள் டீவி.. இது யாருடையது?.. ’அய்யா ராமதாஸு அண்ணன் சார்’ மற்றும்,  அவரது சீமந்திரபுத்திரன் ..ஆங். என்னமோ ’மணி’-னு வரும்.. அந்த பீஸு.
அவர்களுடையது.
பேண்ட் போட்டுக்கொண்டு செய்திகள் வாசிக்கும் கலியுகத்தில், வேட்டி கட்டிக்கொண்டு தமிழை வளர்க்கும் மகத்தான சேவையை புரியும் அவரது சானலில், இவ்வளவு கேவலமான கிளிப்பிங்க் போட்டால், நாடு ரணகளமாகாமல், என்ன ஆகும்?

ஏய்யா. மார்பிங் மூலமாக, விஜயகாந்துக்கு ’மூலம்’ வரும் அளவுக்கு, பிரச்சனையை கிளப்பூறீங்க. ஒத்துக்குறேன். ஆனா அதை ஒழுக்கம%^$#யிரா பண்ணத்தெரியாதா?

மக்களுக்கு தொண்டு புரிய, சமூதாயத்தை முன்னேற்ற, களம் இறங்கி பாடுபடும் எங்கள் தலீவனின், ’மக்கள் சானல்’-லில், இப்படிப்பட்டி கேடுகெட்ட வீடியோ.
காலக்கொடுமையடா சாமி.. வீடியோவை திரும்பவும் பார்த்து அறிவை வளர்த்திக்கொள்ளுங்கள்.










வீடியோவை மார்பிங் பண்ணிய, மகாஜென்மங்களே...அடுத்ததடவை இந்த மிஸ்டேக் இல்லாம, மக்களை குனிய வெச்சு குமறுங்கள்.. சின்ன வட்டத்துக்குள் இருக்கும், ஏதோ ஒரு அல்லக்கை, விசயகாந்து அடிக்கும்போது, முன்னாடி பின்னாடி ஆடிக்கிட்டே இருக்கான். நாதாறி.

இப்படியாய்யா வீடியோ கிளிப்பிங்கை சேர்ப்பது.?
நல்லவேளை. மக்கள் அதைப்பற்றி யோசனை பண்ணாமல், இலவச கிரைண்டருக்கு அல்லாடிக்கிட்டு இருப்பதால் தப்பிச்சீங்க.. இல்லை..உலகத்தின் பார்வையில்  தமிழனின் நிலமை என்ன ஆகியிருக்கும்..


ஆகவே அடுத்த தடவை, வாங்கும் சம்பளத்து, ஒழுக்கமா விடியோவை பப்ளீஸ் பண்ணுங்க தொரைகளா...!!





கனிமொழி

எங்களில் யாருக்காவது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு -கனிமொழி : செய்தி

தேர்தல் சூறாவளியில்  பரபர என பயணித்துக் கொண்டிருக்கும், கழக கனிமணிகளுக்கு,   மனதை புண்படச்செய்த அறிக்கை இது.  அஞ்சாநெஞ்சன் சார்-ம் இதோமாறி அறிக்கை விட்டிருக்கார்..  மனசு ரொம்ப கஷ்டமாயிருக்கு தாயி.!!.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்க தறிகெட்டுவிட்டதா?...

ம்.. ..அக்கா........ ஊர் ஊராப் போகும்போது.. (தேர்தல் பணிக்காக- என்று படிக்கவும்),  தாகம் எடுத்தால்,  ’கண்ட தண்ணீரை குடிக்கவேண்டாம்’. வேறுவழியே இல்லையென்றால், ’சிறு மடக்கு’ மட்டும் குடிக்கவும்..
உடம்பு முக்கியம்.. ’சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும்’..


(மேடம்.. அவரு கிரிக்கெட் பார்க்க , இங்க வராரு.  பிரச்சனைகளை,
ஓரம் வைத்துவிட்டு, மரியாதை(?) நிமித்தம், போய் பாருங்க...)



கிரிக்கெட்..

தற்போதைய பதிவர்கள், பெண்களை மதிப்பதில்லை. பொதுவெளிக்கு வரும் பெண்களை சீண்டிக்கொண்டும், சீரழித்துக்கொண்டும் , ஆங்.. எள்ளி நகையாடிக்கொண்டு இருக்கும் பதிவர்களே... நீங்கள் மனிதர்கள்தானா?..


இதில், வெளிநாட்டில் இருக்கும் சில பதிவர்கள்...’அங்கு பெண்கள் எப்படி மதிக்கப்படுகிறார்கள் என்பதை பார்த்துவிட்டும்’, கிண்டல் செய்வதைப்பார்த்தால், மனம் வலிக்கிறது.. ஆகவே..உங்களுக்கான எச்சரிக்கை..


”திருந்துங்கள்.. இல்லை திருத்தப்படுவீர்கள்..”


இன்று கிரிக்கெட் பைனல்.
இந்தியா ஜெயித்தால்,  ’ பூனம்  பாண்டே’, அம்மணக் கு^%$#ண்டியா மைதானத்தில் ஓடுவதாக  , அறிக்கை விட்டிருக்கிறார். அவரது பெற்றொரும் ஆமோதித்திருக்கின்றனர்.   பொதுவெளிக்கு வரும் பெண்களை , ஆபாசமாக பார்ப்பதோ, இல்லை சீண்டுவதோ சைபர் கிரைமின் சட்டப்படி, மிகப்பெரிய குற்றமாகும்.

அந்தப் பெண்ணும் மனிதர்கள் ரகத்தை சேர்ந்தவர்தான். அவர்களுக்கு குடும்பம் உள்ளது.. அதை மனதில் நிறுத்தி... தயவுசெய்து.........  அந்த காட்சி ஒளிப்பரப்பாகும்போது, கண்களை மூடிக்கொண்டு, நடுநிலையாக இருக்குமாறு, ஆணாதிக்கவாதி பதிவர்களை........ இருகரம்  குப்பி.......சே..கூப்பி, கேட்டுக்கொள்கிறேன்.
.
சமுதாயத்தை சீர்திருத்த, உங்கள் வலதுகையை மட்டுமே...எதிர்பார்க்கும் பட்டாபட்டி..

.
.




Tuesday, March 29, 2011

சாண(ணி)க்கிய நாயகன்...

.
.
.
அருமை அண்ணன், அஞ்சா குஞ்சன் , சரித்திர சாணக்கியன் பார்க்கத கட்சிகளா?.. கோஷ்டிகளா?.        எத்தனை அவமானங்கள், அவமதிப்புக்கள், செருப்படிகள். வேட்டி அவிழ்ப்புக்கள்..    சி(ரை)றை ஒன்றுதான் செல்லவில்லையே தவிர சீறிய ஆட்டங்கள் பல.

கூட்டணி என்ற பெயரில், நால்வரை துணைக்கு அனுப்பினாலும், விடியாமூஞ்சியை கொண்டு, விட்டில்பூச்சிகளை துரத்திய லாவகம். 

கோடிகளில் சுருட்டி, கல்லூரிகளை கலவி மைதானமாக்கி, அருட்தந்தை ஆகியவர் பலரிருக்க, ’கொண்டதே கோயில், அன்னையைவிட சிறந்த கோயில் இல்லை’ என, மனைவியைக்கூட தூக்கி எறிந்த வள்ளல் எங்கள் தங்கபாலுவை,  ’டிவீட்டர், பேஸ்புக் மற்றும் பதிவு’களில், நாற அடிக்கும் மக்களுக்காக, தலைவனுக்கு தோள் கொடுக்க களம் இறங்குகின்றான் இந்த பட்டாபட்டி..


நல்ல எண்ணங்களை உடையவர்கள், நல்லவருடன் சேருவர்.
தீய எண்ணங்களை உடையவர் தீயவர்களுடன் சேருவர்.

ஒரு நல்லமனிதனை, அவனைச் சுற்றியுள்ள தீயஎண்ணங்கள் அபகரிக்க முயலும். அதை விடுத்து, அதிலிருந்து மீண்டு, சமுதாயத்திற்க்காக பாடுபடுபவர்களே நல்லோர்கள். மற்றவரெல்லாம், குடி, கும்மி , குத்து என்று கற்பிழந்து காறி உமிழ்வோருக்குச்சமம்..

மேலே நான் குறிப்பிட்டவை புரியவில்லை என்று சொல்பவருகளுக்காக,
அதாவது நல்ல எண்ணம், நல்ல எண்ணத்துடன் சேரும்.. சிம்பிளா சொன்னா, ”பயர்மாதிரி..

அடச்சே.. தங்கபாலுவை பற்றிச்சொல்ல ஆரம்பித்து, வண்டி தறிக்கெட்டு ஓடுகிறது. மன்னிக்க.....  உங்கள் ஆத்மா ’சாந்தி’ அடையட்டும்.....

அப்படி பெருமைகளை பெற்ற அண்ணன் தங்கபாலுவை, பத்திரிக்கை உலகம் , காணவில்லை என்று கூறி எள்ளி நகையாடுகிறது.   மக்கள் மதிகெட்டவர்கள் என்பதற்க்கு இதைவிட சான்று வேறு என்ன வேண்டும்?

மனைவியின் பேரில் மனு அளித்தார். நிராகரிக்கப்படுகிறது. அவரது மனு ஏற்கப்படுகிறது. இதில் என்ன குற்றம் கண்டீர்? பார்க்க சாதுவாக இருப்பதால் அவரை ’பன்னி’ என்று நினைக்கவேண்டாம். அவர் ஒரு பாயும் புலி.

பதுங்கியிருந்தார். சான்ஸ் கிடைத்ததும்... பாய்ந்துவிட்டார்.( அவரு டீவீ வெச்சு நடத்துவது இப்போதுதான் பட்டாபட்டிக்குத் தெரியும். அதன் இயக்குனராக மாற, பட்டாபட்டி சதி செய்கிறான் எனக்குகூறும் நயவஞ்சகர்களே.
உங்களை நான் ஒன்று கேட்கிறேன். என தலைவன் முகத்தைப்பார்த்துமா, உங்களுக்கு பரிதாபம் வரவில்லை?)

கலவரபூமில, சாணக்கியத்தனத்தை காட்டிய அண்ணனைப் பார்த்து, பெரும் தலைவரே எழமுடியாத சூழ்நிலையில் உள்ளார்.  அப்படிப்பட்ட அண்ணனை நேரில் பார்த்து வாழ்த்துத் தெரிவிக்கலாம் என நேற்று நான் சென்றிருந்தேன்.
அவரின் முகத்தில மகிழ்சி, முன்னைவிட ’பளபள’வென் மின்னிகிறது.

பூங்கொத்தை கொடுத்தேன்.. வாழ்த்தை பகிர்ந்தேன். அகண்ட முக்கத்தில, நிரந்தரப்புன்னகை. எதிர்கட்சிக்கு இறுதிப்புன்னகை. அவனல்லவோ எம்தலைவன்.

வாழ்த்தை பெற்றுக்கொண்டதும், ஆறுதலாக ஆறு வார்த்தைகளாவது பகிருங்கள் என்றேன்.   அவர் சொன்னதை கேட்டதும், மானமிழந்துவிட்டான் இந்த பட்டாபட்டி..

இதோ அந்த கண்றாவி வாசகம்...

”என்னை மயிலாப்பூரின் எம்.எல்.ஏ வாக, தேர்வு செய்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி”


ங்கொய்யாலே.. ’ஓட்டு கேட்கவில்லை, வாக்குறுதி  வழங்கவில்லை. ”வாய்க்கரிசி போட்டவுடன் , வந்தது பதவி”யென கூவித்திரியும் இந்த கூட்டதுக்கா உங்கள் ஓட்டு.?..

தமிழகத்தில், காங்கிரஸ் ஜெயிக்கும் ஒவ்வொரு தொகுதியும்,  “தமிழனுக்கு தமிழன் , தானே தோண்டிக்கொள்ளும் குழி....”

சிந்தியுங்கள்...செயல்படுங்கள்.


டிஸ்கி.. தங்கபாலுக்கு கோபம்வந்து, நீங்க பார்த்ததில்லையே.........
இதோ உங்களுக்காக..

.
.
.