Pages

Tuesday, March 30, 2010

ஆகா..சொர்க்கமடா எங்கூரு..




மார்ச் 27 - 2010......சனி...காலை 5 மணி..

6 வருடங்களுக்கு பின் பிறந்த ஊரை நோக்கிப்பயணம்..என்னதாயிருந்தாலும், பிறந்த மண்ணுல காலடி வெச்சா, உடம்புல ஒரு சிலீர்  ஓடுமே..அந்த சிலீருக்காகத்தான், உயிர பணயம் வெச்சு, திரும்பவும் ஊருக்கு வாரேன்..

என்ன சார்..உயிரு.மயிருனு...முழங்காலுக்கும், மொட்டத்தலைக்கும் முடிச்சு போட்டு பேசரானேனு நினைக்கிறீங்களா?..   அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்.. மூணு நாள் தூக்கமில்லாம, பயணம் செஞ்சு பாருங்க..எதாவது பேசனுமுனா, குழப்பமா, எண்ணங்கள்   உங்க மனசுல ஓடும்.
கொஞ்சம் இருங்க..  எங்க ஊர் வந்திடுச்சு..இறங்கிட்டு அப்புறம் சொல்றேன்..
.
.
அப்பாடா..என்ன இருந்தாலும் ஊர்..ஊர்தாங்க.. என்னா காற்று..என்னா  குளிர்ச்சி..இதையெல்லாம் விட்டுட்டு, அசாமுக்கு  ஓடிப்போனேனே..சே..
.
எம்பேரு முக்கியமில்லைங்க..நான் பொறந்து வளர்ந்தது இங்கதான் சார்..பெரிய குடும்பம் எங்களுடையது.   அப்பா, விவசாயம்.. சட்டை போடமாட்டாரு.. நல்ல முறுக்கிவிட்ட மீசை..   வருசத்திற்க்கு ஒரு தடவை கறிச்சோறு..மீதி நாளெல்லாம் கஞ்சியும்,   கம்பங்கூழும்தான்...
ஏழையாயிருந்தாலும்,  மானம்தான் பெருசுனு சொல்ற பரம்பரைங்க.

அதோ தெரியுது பாருங்க கருவேலமரம்..அதுக்கு பக்கத்தில,இருட்டுல இருக்கிற முட்டி சந்துலதான், ராஜசேகரன போட்டு  கும்மியெடுத்தேன்.......அடிச்சுட்டு  அன்னைக்கு ஓடினவந்தான் சார்.. 6 வருசத்துக்கு பின் இப்பத்தான் வரேன்...நீங்களே  சொல்லுங்க..ஒருத்தன் நான்தான் கடவுளுனு சொல்லிகிட்டு, காலையில பல்ல காட்டிட்டு, வெள்ள வேட்டி கட்டிகிட்டு, போறவரவங்களை  தொந்தரவு பண்ணினா, கோவம் வருமா, வராதா?..

கரெண்ட் இல்லாத நாள்ல, வகைக்கு சிக்கினான் சார் அந்த நாதாரி..ஆசை தீர நொங்கெடுத்தேன்.   தக்காளி.. வெள்ளை வேட்டியெல்லாம், செம்மண் ஆயிடுச்சு..அடிச்ச அடியில பேச்சு மூச்சில்லாம மரத்துக்கடியில விழுந்துட்டான்..   அப்ப, ’எங்கப்பனோட மீசையும், நுங்கு செதுக்குற அருவாளும்’ மனசுக்குள்ள நிழலாடிச்சு சார்..உகூம்.. ஒரு நிமிசம் இந்த ஊருல
இருக்ககூடாதுனு..ஒரே ஓட்டம் சார்..ஊர விட்டு ஓடிப் போயிட்டேன்.அப்புறம் அசாம் காடு..டெல்லி, ஏன்.. காசி..எல்லமே சுத்திட்டேன்.......திடீர்னு மனசுக்குள்ள , சொந்த ஊருக்கு போடானு ஒரு குரல்.அதுதான் கிளம்பிவந்துட்டேன்.
.
.
என்னாச்சு சார்..போலீசுக்காரனுகளா நிக்கிறானுக..இருங்க..என்னானு பார்த்துட்டுவறேன்..
.
.
ஒண்ணுமில்லை சார்..சும்மா செக் பண்றாங்களாம்..வாங்க சார்.. டீ சாப்பிடலாம்..
.
.
மக்கள் திருந்திட்டானுகளா..எவனும் வேலைக்கு போகாமா சுத்திக்கிட்டு இருக்கானுக..     கிராமம் உண்மையா முன்னேறிடுச்சா...டீக்கு வேற,  காசு வேனாமுனு சொல்றாங்க..
.
.
நிசமாவே என்னமோ நடந்திருக்கு.. இங்கிருந்த இருட்டு சந்து எங்க போச்சு?.முக்கியமா ஒரு விசயத்தை நோட் பண்ணுனிங்களா?
பிச்சக்காரன் எவனையும்மே காணல.....எங்க பார்த்தாலும் பளீருங்குது..
ஆகா.. நாம முன்னேறிட்டோம் சார்..இந்த சொர்கத்தை விட்டுட்டு , ஆறு வருசமா அல்லாடியிருக்கேனே..   நான் உண்மையிலேயே மடையன் சார்..
.
.
சரி சார்..ரொம்ப அசதியா இருக்கு.. ஒரு கட்டிங் போட்டுட்டு போயி படுக்கனும்..
.
.
என்னமோ ஆயிடுச்சு..
ஒருவேளை எவனாவது , எங்கஊரை, தத்தெடுத்துட்டானுகளா?..
இல்ல..கவருமெண்டு, பெட்ரோல் கிணத்தை ஏதாவது  கண்டுபிடிச்சுட்டானுகளா?.....   என்ன மாயமடா இது?  கட்டிங் கேட்டா, சும்மாவே ஒரு புல் பாட்டில் கொடுக்கிறானுக..
.
.
.
எங்கப்பன் சொக்க தங்கம் சார்..,ஓடிப்போனவனை ஏத்துக்க ஒரு மனப்பக்குவம் வேணும் சார்.        கரெண்டே இல்லாம இருந்த எங்க பழைய வீடா சார் இது?..இப்ப பாருங்க..டீவி.. பேன்.. மெத்தை...    வீதியில, காரு,பைக்கு சர்..சர்..னு போயிட்டிருக்கு...     சட்டை போட்ட எங்கப்பன இப்பத்தான் பார்க்கிறேன்..பாக்கெட்ல பாருங்க 1000 ரூபாய் நோட்டு..
.
தெய்வம் சார் எங்கப்பன்..
கோழி, ஆடுனு ஒரே கறி சோறு போட்டு திக்குமுக்காட வெச்சுட்டாரு சார்..
.
.
நல்ல சாப்பாடு...ம்..பேனை போட்டுட்டு, மெத்தையில படுக்கற சுகமே தனிதான்..இருக்கற அசதிக்கு, நாளைக்குத்தான்  எந்திரிப்பேன்...இனி இந்த ஊர விட்டு போனா, என்ன செருப்புல அடிங்க சார்..
.
.
.
மார்ச் 28 - 2010.......ஞாயிறு...காலை 6 மணி..

கொசு..புரண்டு படுக்கிறேன்..ஒரே புழக்கம்..
.
சே..அப்பா.. இந்த பேனை போடேன் -நான்
.
பதிலில்லை.
.
இது கனவா?.. இல்ல....
.
மெதுவாக வெளியே வந்தேன்..
.
காதில், கொசுக்களின் ரீங்காரம்..
வெறிச்சோடிய வீதி..
கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருட்டு..
.
அடுத்த தெருவில், “அம்மா..தாயே..”- ஒருவனின் குரல்..
தூரத்தில, ’கீரிச்..கீரிச்..’- பால்காரனின் சைக்கிள் சத்தம்..
.
.
.
ஆங்.. சொல்லமறந்துட்டேனே......
.
எங்க ஊரு பேரு....


”பென்னாகரம்”  சார்....
.
.
.

Sunday, March 28, 2010

ஒரு நாள் மன்னர் நாம்மென்போம்.



தர்மபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப் பதிவு பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது. சராசரியாக 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

திமுக, பாமக, அதிமுக, தேமுதிக ஆகிய நான்கு கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 31 பேர் பென்னாகரம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டனர்.திமுக சார்பில் இன்பசேகரன், அதிமுக சார்பில் அன்பழகன், பாமக சார்பில் தமிழ்க்குமரன், தேமுதிக சார்பில் காவேரி வர்மன் ஆகியோர் போட்டியிட்டனர்.தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் கருணாநிதி, அ இஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரும் பிரச்சாரங்களில் கலந்துகொண்டனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் அ இஅதிமுக கூட்டணியில் இருந்து, போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலுமே தோல்வியுற்று இப்போது எக்கூட்டணியிலுமில்லாது தனித்துப் போட்டியிட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு இது மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகக் கருதப்படுகிறது. இதனால் அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசும் அவரது மகன் முன்னாள் மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணியும் தொகுதியிலேயே முகாமிட்டு தங்கள் கட்சிப் பிரச்சாரத்தை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தனர்.

வன்முறை சம்பவங்கள் நிகழக்கூடும் என்றஞ்சி ஏறத்தாழ 3000 மத்திய, மாநில போலீஸார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் காமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவை இணையத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. அதன் மூலம் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தர்மபுரியில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி வாக்குப் பதிவை நேரடியாக கண்காணித்தார்.

--------------------------------------------------------

நன்றி.. வாக்காளப்பெருமக்களே..

ஏழை.ஏளியவர்களின் முகத்தில புன்முறுவல்,
மக்கள் துயர் துடைக்க, கட்சியினர் ஆற்றிய தொண்டு,
பத்திரிக்கைகளுக்கு தினத்தீனி,
பாக்கெட்டுகளில் பணம்,
டாஸ்மார்க்கில் அதீத விற்பனை,
கஞ்சி குடிக்கும் மக்களுக்கு, அரிசி சோறு,
மண்ரோடு, தார்ரோடு ஆனவிதம்,
பஸ் பார்க்காத இடங்களுக்கு,போக்குவரத்து வசதி,

ஸ்.. அப்பாடா .. ஒருவழியாக எது நடக்கவேண்டும் என நினைத்தமோ அது நடந்துவிட்டது..

ஏழைகளை ஒரு வழியாக இந்நாட்டு மன்னராக்கிவிட்டோம்..நெஞ்சு நிறைய சந்தோசம்..


மக்களே..உங்களை மன்னராக்கி..சாணி பூசிய செருப்பில, அடித்தாகிவிட்டது..    உழைத்து களைத்த கரங்களுக்கு , கரண்ஸியில் ஒத்தடம் கொடுத்தாகிவிட்டது..

ஓய்வெடுத்தது போதும் நண்பர்களே..

உங்கள் கலப்பையை தோளில் ஏந்தி உழைக்க தயாராகுங்கள்..
கிழிந்த வேட்டியை தைத்துக்கொண்டு , தொழிலுக்குப் புறப்படுங்கள்.


மீண்டும் உங்களை மன்னராக்கி பார்க்கும் காலம் வரும்..
அன்று மீண்டும்  சந்திக்கலாம்..

நன்றி.. வணக்கம்..

அவன் - இன்றைய வட்டம்.. நாளைய மந்திரி..
.
.
.

Friday, March 26, 2010

ங்கொய்யா..கேக்கறாங்கய்யா.. டீடெய்லு.

சார்.. நானும் என் மனைவியும், ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கிறோம்..எங்களுக்கு 6 வயதில் ஒரு பிள்ளை உள்ளது..  எனது பெற்றொருக்கும்,எனது மனைவிக்கும் ,ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனிக்குடித்தனம் வந்துவிட்டோம்.. இருவரும் வேலைக்கு செல்வதால்..பள்ளி விடுமுறை நாட்களில், குழந்தையை பார்த்துகொள்ள முடியவில்லை..

அருகில உள்ள கிரஸ்-ல் பணம் பறிக்கிறார்கள்..( மேலும் கவனிப்பு அதிகம் இல்லை..)..  வேலைக்காரர்களை வைத்துகொள்ளலாம் என்றால், அவர்கள் ஏமாற்றிவிடுவார்கள் என என் மனைவி சொல்கிறார்.  ஆகவே.. பால், பழம் , பிஸ்கட் என் காரில் எடுத்துகொண்டு, குழந்தையையும் ஆபிஸ் கூட்டிச்செல்கிறோம்..வேலை நேரத்திலெ , அவனை காரில் விட்டுவிட்டு மாலை திரும்பும்போது..அழைத்துவந்துவிடுகிறோம்..


சமீபத்தில் எங்களைப்பற்றிய பேட்டி ஒரு பிரபல வாரப்பத்திரிக்கையிலும் வந்திருந்தது..
ஆனாலும் நமது அரசாங்கம்..மெத்த படித்தவர்களின் குழந்தைகளை, பராமரிக்க.. ஏதுவும் செய்யவில்லை?.
நாங்கள், எங்கள் குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருக்க விரும்புகிறோம்.
உங்களால் இதற்கு தீர்வு சொல்லமுடியுமா?
இப்படிக்கு - "  பேர் சொல்ல விரும்பவில்லை..
"

---------------------------------------------------------------------------

வாய்யா தக்காளி..பேர் சொல்ல விருப்பமில்லையா?.. ஏன்..  சமுதாயத்தை பார்த்து வெட்கமா?..இல்லை வேறு பிரச்சனையா?

வேலைக்காரர்களையும் நம்பமாட்டே..சொந்த பெற்றோரரும் உங்களுக்கு பிரச்சனை..   ஆனா, நீ நல்ல தகப்பனாய் இருக்கனும்..  அதுக்கு கவர்மெண்டு உனக்கு ஏதாவது பண்னனும்..  யோவ்...ரொம்ப நல்லவனையா நீ...

சரி... உங்கள் சந்தோசத்திற்க்கு இடஞ்சலாயிருக்கிறார்கள் உங்கள் பெற்றோர்கள்.. ரைட்..    ஆனா..உங்க பையன, கைதி போல, காரில் விட்டுவிட்டு வேலைக்கு போவீர்கள்..

ஒரு நிமிசம் உன்னோட மகனோட நிலையில, உன்ன வெச்சு பாரு..
நீ பண்றது சரியா இல்ல தப்பானு புரியும்.   என்னைய கேட்டா..அதுதான் 5 ரூபாய்க்கு மூணூ கொடுக்கிறாங்களே..அதை யூஸ் பண்ணியிருந்தா
இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதே..?


ஏன்னாது... Accidant-வா?

வேணாம்..உனக்கு  நான் பதில் சொன்னா, என்னொட வாயில வேற ஏதாவது வந்திடும்..  அதனால.. உனக்கு வேண்டிய பதில, மக்களே சொல்லட்டும்..
உன்னுடைய மனைவி அனுமதி பெற்று ப்ரீயா ஒரு நாள் வந்து கமென்ஸ்ச படிச்சுக்க..

ஆனாலும் நீ ஒரு நல்ல %$^#^-யா..... அப்படியே இரு..

இது மக்களுக்கு..
நீங்க கும்மலாம்..தீர்வு சொல்லலாம்..ஏன் கிழிச்சு வீசலாம்..
( தயவு செய்து கெட்ட வார்த்தை மட்டும் யூஸ் பண்ணாதீங்க.. அப்புறம் பட்டாபட்டி நல்லவனா நடிக்கிறானு  ஊரே சொல்ற மாறி  செஞ்சுடுவேன்..)

ஓ.கே...ஸ்டார்ட் மீசிக்...
.
.
.

Wednesday, March 24, 2010

மக்கா.. ஒரு நிமிஷம் பிளீஸ்..

அண்மையில் ஈ மெயிலில் வந்த கட்டுரை..( உண்மையா , பொய்யா எனத் தெரியவில்லை..) ஆனா அப்பாவியா  ( அப்பாவி    அண்ணே..கோவிச்சுகாதீங்க...நாமெல்லாம் யாரு..?) இருப்பதைவிட, இதை மனதின் ஒரு ஓரத்தில் போட்டுக்கொள்வது நல்லது..

மக்களை எவ்வளவு நூதனமா ஏமாற்றுகிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள்..

சமீபதில் ஒருவருக்கு தொலைபேசி அழைப்புவந்துள்ளது..இப்படி நாங்கள் டெலிகாம்ல இருந்து பேசுகிறோம்..   போன் லைனை, 2G இருந்து 3G-க்கு மாற்றிக்கொண்டுள்ளோம்.. அதனால உங்கள் தொலைபேசியை 2 மணி நேரத்திற்கு சுவிட்ஸ் ஆப் செய்யுங்கள் என்று ஆங்கிலத்தில் கூறியுள்ளனர்..

அவரும் மீட்டிங் செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்ததால்..போனை ம^$#ரே போச்சுயென, ஆப் செய்துவிட்டு சென்றுவிட்டார்..1 மணி நேரம் கழித்து திடீர்னு கொஞ்சம் டவுட் வந்திருச்சு  ( கல்யாணம் பண்ணினாலே .. மூளை கொஞ்சம் ஸ்லோவாயிடுமுனு சுவாமி நித்தியானந்தா, ஒரு புத்தகத்தில் எழுதியுருக்காரு) ..எந்த டெலிகாம் மற்றும் யார் பேசுவது எனச்சொல்லவில்லையே என நினைத்து போனை ஆன் செய்துள்ளார்..

பார்த்தால் 10 மிஸ்ட் கால் வீட்டிலிருந்து.. பயபுள்ள பயந்துபோயி என்னவோ, ஏதோ என பதறிப்போய் மனைவியின் தொலைபேசிக்கு அழைத்துள்ளார்.. இந்தம்மா..’அய்யோ.. உங்களுக்கு ஒண்ணும் ஆகலையேனு ஒரே ஒப்பாரி..’( ஆகலைனு அழுதுச்சா, இல்ல நிசமாவே அழுதுச்சானு தெரியலை..)

அசுவாசப்படுத்தி என்னா எதுனு கேட்டா.. யாரோ ஒரு பய புள்ள.. அந்த அம்மணிக்கு போனப்போட்டு, ’உம் புருஷ்னை கடத்திவெச்சிருக்கோம்..
இன்னும் 1 மணி நேரத்தில பணம் மற்றும் நகைகள் கொடுக்கலைனா.. உம்புருஷனோட சங்க அறுத்துடுவோமுனு
’, மிரட்டியிருக்கானுக..
அதுவும் பயந்துபோயி..பாங்க் லாக்கரிலிருக்கும் நகைகளை எடுக்க போயிருக்கு..அய்யா கரெக்டா கிளைமேக்ஸ்ல போன் செஞ்சதால.. புருஷன் உயிர் த்ப்பிச்சதோ இல்லையோ.. நகையும் பணமும் தப்பிச்சுடுச்சு..

நான் என்னா சொல்லவரேனா..குடும்பதினருக்கு, உங்களோட எமர்ஜென்ஸி நம்பரை கொடுத்து வையுங்க..( முடிந்தா உங்கள் ஆபிஸ் நம்பர் மற்றும் உடன் வேலை செய்பவருடைய நம்பர் )

உங்க கூட்டாளிக எவனாவது நல்லாயிருக்கனுமுனு நினைச்சீங்கனா, இதை அவனுக காதுல போட்டு வையுங்க..

சில பேரு சொல்லுவானுகா.. ’நாஙக அந்த காலாத்திலே அப்படி.. இப்படினு..எங்களை எவனும் ஏமாத்தமுடியாதுனு..’
(அவங்களை  கரெக்ட் பண்ண, ’ பேரு..வயசு..அட்ரஸ்...’ இந்த மூணு டீடெய்ஸ்ச, அருகில் உள்ள ப.மு.க ஆளுககிட்ட
சொல்லிட்டா..ஸ்கெட்ஸ் போட்டு,முடிச்சு..உங்களுக்கு SMS மட்டும் அனுப்புவானுக..தொழில்ல அவ்வளவு கரெக்டாயிருப்பானுக)

இந்த நிலைமை,  எனக்கு வந்திருந்தாவா?..

1. எவனாவது இங்கிலீசுல பேசுனா, பக்கதிலிருப்பவங்கிட்ட ‘ மச்சி.. இந்த போனை அட்டெண்ட் பண்ணேன்..காலையிலிருந்து பட்டாபட்டு
சுருக்கு அவுந்துகிட்டேயிருக்கு’
னு சொல்லி..எஸ் ஆயிடுவேன்..


2. எங்க அம்மாகிட்ட சொன்னதுக்கு.. ’போடா புண்ணாக்கு.. அவன் பேசுன போன் கால், காசுக்குகூட நீ தேறமாட்ட..போ..போயி வேலையப்பாரு’னு சொல்லிடுச்சு சார்..
.
.

Tuesday, March 23, 2010

தமிழ்நாடு ஒளிர்கிறது..(நன்றி ஆற்காடு நவாப்க்கு)

கடைசியா வந்த நூசு..
சென்னை: தமிழகத்தில் வருகிற மே மாதம் வரை மின் வெட்டு நீடிக்கும் என்று கூறி விட்டார் தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி . தமிழகத்தில் அதிகளவில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருவதால் மின்சார தேவை அதிகரித்து வருகிறது. இதனை சரி செய்ய அண்டை

மாநிலங்களில் இருந்து 10,000 மெகாவாட் வரை மின்சாரம் பெறப்பட்டு, மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் மின் உற்பத்தி குறைவாக இருப்பதால் கிராமப்புறங்களில் நாள் ஒன்றிற்கு 2 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது; அதிகளவில் மின்வெட்டு  இருப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல்.

கிராமப்புறங்களில் தேர்விற்கு படிக்கும் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், பகலில் மட்டுமே மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது  என்றார் வீராசாமி.



போனவாரம் வந்த நூசு
தமிழ் நாடு மிந்துறையில் தன்னிறைவு பெற்றது.. அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் அளவுக்கு நாம்  முன்னேறிகொண்டுள்ளோம்..

--------------------------------------------------------------------------------------------------

நன்றி ஆற்காடு வீராசாமி அவர்களே.. போன வாரம் செய்திதாள்களில், தமிழ் நாடு மின்துறையில் தன்னிறைவு பெற்றுவிட்டதாகவும்,  பிற மாநிலங்களுக்கு, மின்சாரம் சப்ளை செய்யும் அளவுக்கு, நாம் முன்னேறிவிட்டோம் எனக் கூறிய உங்கள் பேட்டியை படித்தேன்.. ஆனால் .. சமீபத்தில் மின்வெட்டு நீடிக்கும் என் நீங்கள் சொன்ன பேட்டியையும் படித்தோம்..


இன்னுமுதல்,   தனிமனித தாக்குதலை தவிர்க்க முடிவு செய்துள்ளதால்..நானே கேள்விகள் கேட்டு ,பதில்களையும் சொல்லிவிடுகிறேன்.. இதில் தவறுகள் இருந்தால், என்னை நீங்கள் கும்மியெடுக்கலாம் என்பதையும் இத்தருணத்தில் சொல்லிக்கொள்ள  விருப்பபடுகிறேன்.. நன்றி அய்யா..

( தயவுசெய்து கும்மும் போது குப்புறபடுக்கவைத்து கும்மவும்..தலைச்சன் பிள்ளையை மல்லாக்க படுக்கவைத்து  கும்மக்கூடாது என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது இதை என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன்..)

1. ஏன் ஒரே வாரத்தில் இந்த மாற்றம்..?
ஷேர் மார்க்கட்டில ஏற்றம் , தாழ்வு நிகழ்வது சகஜம்தானே..அது , நான் அன்று சொன்னது..  இதை நான் இன்று சொல்வது..

2. ஒரு அமைச்சராக இருந்து கொண்டு, உங்கள் கடமையை சரிவர ஆற்றவில்லை என்பதைப்பற்றி?..
யார் சொன்னது.. எனக்கு அரசியலில் பழத்த அனுபவம்.. உங்கள் வயது எனது அனுபவத்தைவிட குறைவாகவேயிருக்கும்..  மக்களுக்கு.. எதை எப்போது பண்ண வேண்டும் என எங்களுக்குத் தெரியாதா?

3. கிராமம் தான் நாட்டின் முதுகெழும்பு என ஒரு பெரியவர்  சொல்லியிருந்தாரே?..அப்புறம் ஏன் கிராமம் மக்கள்மீது மட்டும்
இந்த கொலைவெறி தாக்குதல்?.

தம்பி..முதல்ல ஒன்றை புரிந்துகொள்..
வரப்பு உயர நீர் உயரும்..

நீர் உயர நெல் உயரும்..

நெல் உயர குடி உயரும்..

குடி உயர கோல் உயரும்..

கோல் உயர கொற்றவன் உயர்வான்..


நாங்கள் அன்றே சொல்லிவிட்டோம்.. ”கிராமத்தினர்தான் இந்நாட்டு மன்னர்கள் என்று!!”..  அவர்களுக்காக கடைசிசொட்டு ரத்தம் உள்ளவரை பாடுபடுவோம்.. முதலில் வரப்பை உயர்த்த ( அதாவது நாம்.. நகரத்தினர் ) பாடுபடுவோம்..  கடைசியாக.. மன்னர்கள் உயர்ந்துவிடுவார்கள்..

4.தமிழகத்தில் அதிகளவில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருவதுதான், மின்சார தேவை அதிகரிக்க காரணம் எனக்கூறுகிறீர்களே?
உண்மை..அதற்கு கழகம் உயிரைகொடுத்து போராடிவருகிறது..
முடிந்த அளவு புது தொழிற்சாலைகளுக்கான லைசென்ஸ்யை கொடுப்பதில்லை.. மேலும் மின்சாரத்தை அதிகம் உபயோகிக்கும்
தொழிற்சாலை உரிமைகளை ரத்து செய்யலாமா எனவும் பொதுக்குழு ஆலோசித்து வருகிறது..

அய்யா.. இதற்கு மேல் பேட்டியை தொடர்ந்தால்..நல்ல உள்ளங்கள் பாதிக்கபடும் என்பதால்  இத்துடன் முடித்துக்கொள்கிறேன்..

கீழகண்டவை எனது சொந்தக்கருத்து இது..யார் மனத்தையும் புண்படுத்த விரும்பவில்லை..
மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், பகலில் மட்டுமே மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது எனக்கூறியதால்.  நானும் எனது வருங்கால சந்ததியனரும்.. கழகத்துக்கு மட்டுமே வாக்களிக்க முடிவுசெய்துள்ளோம்..    அதை மீறும் குடும்பத்தாருக்கு.. எனது சொத்தில் ஒரு நயா பைசா கிடையாது..
.
.
.

Saturday, March 20, 2010

எங்களுக்கும் வெக்கமில்லை.. - 1..


மக்கள் பிரச்னை தீர வாய்ப்பு கொடுங்கள்: பிரேமலதா பேச்சு
மேடம்.. அந்த கருப்பு கண்ணாடிய போட்டுட்டு கைய தூக்கிக்கோங்க.
பட்டாபட்டி சார் ‘ஸ்டார்ட்’ சொன்னதும்தான் பேசனும்..
நீரு அந்த பக்கம் கைய தூக்கினமாறி நில்லு.. இன்னும் கொஞ்ச்ம் மேலே..
ரைட்...

ஸ்டார்ட்..

தர்மபுரி: ''மக்கள் பிரச்னை தீர அண்ணனுக்கு வாய்ப்பு கொடுங்கள்,'' என, பிரேமலதா பேசினார்.பென்னாகரம் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் காவேரிவர்மனை ஆதரித்து நேற்று நல்லம்பள்ளி யூனியன் ஈச்சம்பாடியில் பிரேமலதா பிரச்சாரத்தை துவக்கினார். கமலநத்ததில் அவர் பேசியதாவது:பென்னாகரம் தொகுதி மக்கள் நடுநிலையோடு உங்கள் ஓட்டுக்களை பதிவு செய்யுங்கள். இந்த தொகுதியில் இது வரை எல்லா கட்சிகளும் வெற்றி பெற்றாலும் மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீர வில்லை. குடிநீர் பிரச்னை, வேலை வாய்ப்பு இன்மை, குழந்தைகள் படிக்க சரியான பள்ளிகள் இல்லை. அரசு மருத்துவமனைகள் இல்லை.
 

ஜக்கம்மா குறி சொல்றா..ரைட்.. அப்புறம்? ( இங்க நம்ம காலேசு பிராஞ்ச் ஆரம்பிக்கனும்.. நல்ல இடமா, கிடைக்க அருள்புரி ஜக்கம்மா)

 

இலவச திட்டங்களில் உங்களுக்கு என்ன கிடைத்தது. இலவச 'டிவி' மட்டும் கிடைத்திருக்கும். இரண்டு ஏக்கர் நிலம் கிடைத்ததா? சொன்னதை செய்ய வேண்டும். செய்யவில்லை என்றால், அதைப்பற்றி பேசும் உரிமை நமக்கு உள்ளது.

நல்லா பேசுங்க தாயி..ஆனா, எங்க தலைவர், ரெண்டு ஏக்கர் நிலத்தை , தமிழ் நாட்டில் தருவதாக கூறவில்லை.. ஆப்கானிஷ்தானுடன் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதை உங்களுக்கு விளக்க, எங்களுக்கு விருப்பமில்லை..

இலவச திட்டங்களை கொடுப்பதற்கு பதில் இங்கே தொழிற்சாலைகள் துவங்கியிருந்தால், உங்கள் வீட்டில் உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக வெளியூர் செல்லும் நிலைமை ஏற்பட்டிருக்குமா?

செத்தானய்யா இந்த வெளியூரு..


 தேர்தல் நேரத்தில் மட்டும் 500, 1,000 ரூபாய் கொடுத்து ஓட்டு கேட்க வருகிறார்கள். கிராம மக்களை ஏமாற்றி விடலாம் என நினைக்கின்றார்கள்.மக்களை அடிமையாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நகர மக்களே. ஸ்டார்ட் மீசிக்..



எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தேர்தல் முடிவு அறிவித்த 20வது நாளில் தொகுதி முழுவதும் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்து தண்ணீர் பிரச்னையை தீர்ப்போம். வேலை வாய்ப்பு உருவாக்க தொழிற்சாலை கொண்டு வருவோம்.

முதல்ல ஓட்டுப்போடுங்கலே,.ங்கொய்யாலெ.. தண்ணி லாரி, மணல் லாரி.. ஏன்  மார்ச்சுவரி வேனையே  அனுப்பி உங்க பிரச்சனைய முடிக்கிறோம்..
(எந்த நாதாரியாவது , ஏன் இப்ப தண்ணிபிரச்சனைய தீர்க்க மாட்டீங்களானு கேப்பானுக?.ஊகும்...)




உங்கள் குழந்தைகள் கல்வி பயில வசதியாக இலவச கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளியை துவங்குவோம். நாங்கள் சொன்னதை தான் செய்வோம்.
விருத்தாச்சலம் தொகுதியில் எங்களை நம்பி ஓட்டு போட்டதை போல், நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்; அது உங்கள் வரிப்பணம். இந்த ஒரு முறை உங்கள் அண்ணனுக்கு வாய்ப்பு கொடுங்கள். சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

எங்க காலேஸ்-ல ப்ரீ கோட்டா முடிஞ்சுடுச்சு..அதனால, கம்பூட்டர் கிளாசுக்கு, கொஞ்சம் காசு கேப்போம்..ஏன்னா இது உங்க வரிப்பணம்..
இந்த முறை உங்கள் அண்ணனுக்கு குத்துங்க.. அடுத்த முறை, தம்பி சதீஸ்க்கு குத்துங்க..ஈ..ஈ

( விருத்தாசல்த்தில பாலும், தேனுமா ஓடுதுனு எவனாவது கேளுங்க..தக்காளி..கேப்டன உட்டு,  பெல்லி பட்டன்ல
பேண்%$#டு வைக்கச் சொல்றேன்..)

 






எம்பா..விஜயகாண்டு... நீயும் ஏதாவது பேசேன்..
மந்திரிச்சுட்ட மாறி கைய தூக்கிட்டே நிக்காதே..
.

கட்..
.
யோவ்.. அவரு ‘கட்’ சொல்லிட்டு , டீ குடிக்க போயி 10 நிமிசம் ஆச்சு...

.

 
.
 

Wednesday, March 17, 2010

யோவ்.. நீங்களேல்லாம்?...போய்யா..போ..

சனிக்கிழமை..சிராங்கூன் பெருமால் கோயில்..   
வழக்கம்போல , நானும் சின்ராசும் சாமி கும்பிடப்போனோம்.. ( யோவ்.. சத்தியமாயா.. உண்டகட்டிக்காக போகல..   ' மக்களை காப்பாத்து'னு ரெண்டு கையையும் ஏந்தியபடி கடவுளை
கும்பிட்டோம்.. தீடீர்னு கையில உண்டகட்டி.. நம்புங்க மக்கா..)

சாப்பிட்டதும் , வாகிங் போகனுமுனு சின்ராசு ஒரே அடம்..
நாதாரி பய சார்.. உண்டமயக்கம் தொண்டனுக்கும் உண்டு..
ஆனா, குண்டனுக்கு இல்லனு தெளிவா புரிஞ்சிகிட்ட நாள் சார் அது..

சரின்னு , ஆடி அசைஞ்சு போயிட்டேயிருக்கோம்..
வழியில , பாரதியார்கள், அவ்வையார்கள், நடன மங்கைகள்,மன்னர்கள், மன்னிகள் ( மகாராணிகள் சார்.),  என மாறுவேடமிட்டு , மழலைகள்
ரோட்டை கடக்கின்றனர்..   நாம வாகிங்க் போயி ,என்ன  ம&^%ர புடுங்கப்போறோமுனு, என்னோட மனசுல தோணுது..

சின்ராசு, என்னோட மனச் படிச்சிட்டான் சார்..
சரி வா.. போயி குழந்தைகள் என்ன பண்ணுதுனு பார்ப்போமுனு சொல்றான்.

போட்டி ஆரம்பிச்சது சார்..
ஒவ்வொரு குழந்தைகளின் திறமையும் அருவியா கொட்டுது..நான் 'ஆ'னு வாயப்பொழந்து பார்த்திட்டிருப்பதை பார்த்து, நச்சுனு காலால ஒரேமிதி
மிதிச்சான் பாருங்க சின்ராசு.. பக்கத்திலிருந்த மாமி குய்யோ..முய்யோ
னு, கத்த ஆரம்பிச்சுடுச்சு..
( நாங்க விவரமில்ல.. எந்த காலத்தில கால கீழ வெச்சு உக்காந்திருக்கோம்..)
அப்புறம் சாரி.. மன்னிப்பு..தெரியாமா..விஜயகாண்டுக்கு பிடிக்காத வார்த்தைகளை போட்டுட்டு,  பின்னாடி 'ரோ'க்கு போயிட்டோம்..

அன்னைக்குதான் சார் விதி மேல நம்பிக்கை வந்துச்சு..

ஒரு 'குழந்தை மன்னரோட',  அம்பு உடைந்து விட்டது.. அந்த பையனின் அம்மா, கணவரை பார்த்து கத்திகிட்டே, அதை ஒட்ட வெச்சுட்டு இருக்காங்க..


சின்ராசு மெதுவா போயி, 'எம்மா, ஊட்டுக்காரரு அம்பை கைதவறி ஒடச்சுட்டாரா'னு கேட்க,
அது, இல்லை..  மன்னரா நடிக்க............,3 மாசமா ,  

காலை 4 மணிக்கு அலாரம் வெச்சு , 
வசனத்த மனப்பாடம் பண்ண வெச்சு..
அதை திருப்ப சொல்ல வெச்சு..
நடிக்க வெச்சு.. 
கூட்டிகிட்டு வந்தா
அம்பை ஒடச்சுட்டு நிக்கிறான்...பையனுக்கு அப்படியே அப்பன் புத்தி சார்...  .எப்படி சார் உருப்படுவானு?'னு சொல்லிட்டு கணவரை பார்த்து கத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

இது வேலைக்கு ஆகாதுனு, கணவரை பரிதாபமா பார்த்துட்டு ( நாங்க வேற என்னா சார் பண்ணமுடியும்?) வெளிய வந்துட்டோம்..

என்னோட டவுட் என்னான..
 

*  குழந்தைகளை,நாம்  குழந்தைகளாக வளர்கிறோமா?

* குழந்தைகளின் நடிப்பில், அவர்களூடைய ,  'தாய், தந்தையின் திறமை'தான் தெரிகிறது..
 

* குழந்தைகளை படிக்கும் அளவிற்கு,  நாம் படித்தவர்களா?.

* இதை செய்யாதே.. சாமி கண்ண குத்தும்.. குறும்பு பண்ணினா, போலீசை கூப்பிட்டுவேன் என்ற வார்த்தைகள்.......   அவர்களுடைய , தன்னம்பிக்கையை வளர்க்குமா?..இல்லை கோழைத் தனத்தை வளர்க்குமா?..


* நம்மால் முடியாத காரியத்தை , குழந்தைகள் மீது திணிக்கிறோமே.
.( 100 மார்க் வாங்கலேனா.. அப்புறம்.... ?)


இதைப்பற்றி..நீங்க இங்க  குமறுலாம் சாமிகளா ( கெட்ட வார்த்தைய தவிர )..
அதுக்கு முன்னாடி அந்த கணவருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்..

 
( எதுக்கா.?. அடுத்த ஜென்மத்திலயாவது , விளையாட்டில,  படிப்புல , போட்டிகள்ல முதலிடம் பெற்று..
குழந்தைகளுக்கு 'நல்ல தகப்பன்' என்ற உதாரணமாக,  திகழ...)
.
.

.

Tuesday, March 16, 2010

போங்கய்யா... நாதாரி பதிவர்களா..


பட்டாபட்டியாருக்கு வணக்கம்..

நான் ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் , சீனியர் பொறுப்பில் வேலைசெய்கிறேன்.. எங்க பார்த்தாலும்...ப்ளாக்கர்...சூப்பர் பதிவு
பதிவுலக சந்திப்பு.
.என்று காதில் விழுந்ததால், நாமும் , பிரபலமாகலாம் என எண்ணி   பதிவு ஆரம்பித்தேன்..( வேலையை ரிசைன் பண்ணிவிட்டுத்தான்...)


அதுவரை கதை மற்றும் கவிதை என , இரண்டு பதிவுகள் போட்டுவிட்டேன்.. ஆனால், அதுவரை மூன்று மறுமொழிகள் மட்டுமே  வந்துள்ளன..( எனக்கு இரண்டு மனைவிகள்..அதில் ஒரு கமென்ட் நானாகவே போட்டுக்கொண்டது..)

வாழ்க்கை வெறுத்து , மீண்டும் வேலை தேட ஆரம்பித்துவிடலாம் என முடிவு செய்த போது.. எனது உயிர் நண்பன் உங்களை பற்றி சொன்னான்..
உங்களை அணுகினால்.. பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார் எனக் கூறியதால்,  தற்காலியமாக வேலை தேடுவதை நிறுத்திவிட்டு இந்த மின்னஞ்சலை அனுப்புகிறேன்..

எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள்..

வசந்தன்..




உங்கள் நண்பர் உங்களுக்கு நல்ல வழியைத்தான் காட்டியுள்ளார்..இதைத்தான் 'உயிர் காப்பான் தோழன்'  என முன்னோர்கள் கூறியுள்ளனர்..  வேலை தேடுவதா வேண்டாமா என்பதை பதிவின் முடிவில், முடிவு  செய்துகொள்ளுங்கள்..

பதிவர்களில் பல பிரிவினர் உள்ளனர்..அதில் சில

நல்ல பதிவர்கள்
மொக்கை பதிவர்கள்
நாத்தப்பதிவர்கள்..
நாறப்பதிவர்கள்
பிரபல பதிவர்கள்



இதில் நீங்க எந்த வகையை தேர்தெடுப்பது என முடிவு செய்துகொள்ளுங்கள்...


நல்ல பதிவர்கள்
நல்ல உதாரணம் கேபிள் சங்கர்..அவர் மனதிலே தோன்றுவதை.. எழுத்தாக மாற்றி பதிவில் வெளியிடுகிறார்..யாருடைய மனமும் புண்படாமல் , கதை , திரை விமர்சனம், கொத்து பரோடா என கலக்கிக்கொண்டுள்ளார்..

இவருக்கு எல்லா பிரிவிலிருந்தும் நண்பர்கள் உண்டு..


மொக்கை பதிவர்கள்

ஏதாவது எழுதுவார்கள்..''-ல தொடங்கி 'ஃ' வரை எதுவேண்டுமானும் பதிவுகளாக வரும். உதாரணம்.. வேண்டாம் சார்..
சொன்னா.. எங்க தாத்தா.. பாட்டியிலிருந்து இவர்கள் வாயில் விழுவார்கள்.


நாத்த/நக்கல் பதிவர்கள்.
பேரிலேயே உள்ளதால், நாமும் நாற வைக்க வேண்டியதில்லை..


நாறப்பதிவர்கள்
இது எங்க ஜாதி.. மக்களுக்கு நல்லது பண்ணப்போறேனு சொல்லிகிட்டு , நாற அடிப்பவர்களை (சினிமா. இனிமா, அரசியல், சீரியல்) நொங்கு எடுப்பவர்கள்..
என்ன சில நேரத்திலே ,உணர்ச்சிவசப்பட்டு.. எங்களுக்குள்ளெயே அடிச்சுக்குவோம்..


பிரபல பதிவர்கள்
இங்க தான் நீங்க ஜாக்கிரதையாயிருக்கனும்..
இந்த பிரிவுக்கு போகனுமுனா ,பதிவை, தவம் மாறி எழுதனும்..
முதல்ல உங்க பேரை..  
அன்புடன் (உங்க பெயர்), 
அரவணைப்புடன் (உங்க பெயர்) ,
காதலுடன்(உங்க பெயர்) , 
.
ஏன்......
.
கற்புடன் (உங்க பெயர்) கூடப்போட்டுக்குங்க..அப்புறம் , யார் புதியதாக ப்ளாக் ஆரம்பித்தாலும் , முதல் ஆளாக போயி Follower ஆயிடுங்க..
படிக்கவேண்டும் என்று அவசியம் இல்லை..

இல்ல மனச்சாட்சி உறுத்தினா, கீழகண்டவற்றில் ஏதாவது copy பண்ணி paste  பண்ணிடுங்க..


1. சூப்பர்
2. ஆகா
3. நல்லாயிருக்கு
4. :-)
5. :-))))))
6. அவ்..
7. வாழ்த்துக்கள்



அவ்வளவுதான்..அந்த பய புள்ளைக, உங்க ப்ளாக்கு வந்து என்ன எழுதியிருந்தாலும், படிப்பானுக..( ஹிட் ரேட் ஏறுவிடும். நமக்கு அதுதான் முக்கியம்)


முக்கியமா ஒண்ணு சொல்ல மறந்திட்டேன்..மேற்கண்ட Pre defined comments ஆண் ப்ளாக்கர்க்கு மட்டும் தான்..
.
.
.
பெண் ப்ளாக்கர்ஸ்கு..
1. சமையல் சூப்பர்.. இதுமாறி எங்கம்மாவே சமைச்சதில்ல.. எப்படிங்க.. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

2. மனசு கலங்கிடுச்சு.. இன்று வேலைக்கு போக மூடேயில்ல.. மூணு நாளா சித்தம் கலங்கிப்போயி உக்கார்ந்திருக்கேன்..


அடுத்த மேட்டர்... கவிதை
சரி.. என்ன எழுதுவதுனு தெரியாம,

'ஆடு முக்கினா புலுக்கை..
ஆண்டவன் முக்கினா வலுக்கை..'

இல்லாட்டி..
'காற்றடித்தது.. காதல் பறந்தது'னு எழுதி,  ஒரு படத்த போட்டுவிடுங்க.. ஹிட் நிச்சயம்.. ( ஏன்னா..இது  நன்றிமறாவா உலகம்..)

இப்ப கதை..
இதுல என்ன வேணாம் எழுதலாம்..நண்பர்களை பற்றி.. மிருகங்களைப்பற்றி..
(Name it and get it,  policy).. எவனாவது உங்க நண்பன் வந்து , எனக்கு குடும்பதில ஒரு பிரச்சனைனு புலம்பினா, உங்க பேனாவுல இங்க் ஊற்ற நேரம் வந்துவிட்டதென நினச்சுக்குங்க..

ஏன்னா.. இது உலக மக்களுக்கு போய் சேர வேண்டிய முக்கியமான விசயம்....
நண்பனோட விசயம் நாலு பேருக்குத் தெரிந்தா..மக்கள் உசாராயிடுவானுக .. அதுக்குத்தான்..

ஆனா.. முக்கியமா , நடந்தை தை மாறி மாற்றி, மெசேஸ் சொல்லக்கூடாது..  அப்படியே ...நடந்தது நடந்தபடி சொல்லனும்.. அப்பத்தானே சொன்ன நண்பன் தலை நிமிர்ந்து நடக்கமுடியும்..
அப்பப்ப, 'நானும் சுஜாதா' மாறி தான்,  ஒரு தனி ட்ராக் ஓட்டுங்க..பயலுக, நீங்கதான்ணாஅடுத்த சுஜாதானு ஏத்திவிடுவானுக..
அப்ப மட்டும், உங்க காலு , நிலத்திலிருந்து , 3 இன்ச் மேல இருக்கறமாறி, நடந்து பழகிக்கிங்க..  தலை மண்ணப் பார்க்ககூடாது.. ஆனா திரும்பி பார்க்கலாம்..

சில பன்னாடைக, என்னையா எழுதரே?னு பின்னூட்டமிட்டா, அதுக்கு ஒரு டிரிக் இருக்கு..கமென்ஸ்ச உடனடியா பப்ளிஷ் பண்ணக்கூடாது..குடும்பத்தோட உட்கார்ந்து ,  யோசனை பண்ணி, எப்போதும்போல,  டெலிட் பண்ணிடுங்க..
( அவனுக கிடக்கறானுக பன்னாடைக..)

உங்க ப்ளாக் , நீங்க எழுதுவது.. இவனுக யாரு சார் நம்ம கருத்தை எதிர்த்து பேசுவது.. மீறி . சில நாதாரிக , ஏன் பப்ளிஷ் பண்ணலேனு கேட்டா..

இது டீசண்டான ப்ளாக்.. உங்க வேலைகளை , பட்டாபட்டி ப்ளாக்கில போயி வெச்சுகிடுங்கனு  தொறத்திவிடுங்க..( பட்டாபட்டி என்ன பெரிய ம^%$ரா..வந்து பார்க்கவா போறான்?)


அப்புறம் எப்பொழுது போல, தூண்டில் எடுத்துகிட்டு, புதுசா யாராவது எழுதுகிறானுகளானு பார்க்க போயிடுங்க.. ஏன்னா.. நமக்கு கடமை முக்கியம்..



சரி .. இவ்வளவு நொன்ன பேச்சு பேசறீங்களே,, நீங்க மட்டும் பெண்கள் மற்றும்..அரசியல்வாதிகளை நக்கல் பண்றீங்கனு தோணுதா..


சரி .. உண்மையச்சொல்றேன்.. நான் ப்ளாக் எழுதி பெரியாளா வரனுமுனு எண்ணம் இல்ல..

அதாவது, சினிமா, அரசியல், சீரியல், ஆன்மீகம்..... இதுல வந்து.. மக்களுக்கு அட்வைஸ் பண்றானுக பாருங்க..( உருப்படுவதற்கு) அதைப்பற்றிதான் எழுதுவேன்..

கெட்ட வார்த்தைகளைத் தவிர. என்ன கமெண்ஸ் போட்டாலும்.. என்னால் பதில் எழுத முடியும்..( டெலிட் பண்ணாம..)

90% பதிவர்கள், வேலைக்கு போயிட்டு பார்ட் டைமா எழுதறவங்க..
அதனால.. பிரபல பதிவர் ஆகனுமுனா.. நான் மேலே சொன்னவற்றை பாலோ பண்ணுங்க..
( ஆனா உங்க குடும்பம், அதற்கு வருமானம்.. இதெல்லாம் முக்கியம் )
.
.
வரட்டா..
.
.

Saturday, March 13, 2010

போட்டோ காமெடி - 12...

செய்தி:
பென்னாகரம் அருகே தின்னப்பட்டியில் பிரச்சாரத்துக்கு சென்ற ராமதாஸின் கார் நத்தஹள்ளி பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது.

கார் கண்ணாடிகளை இறக்கிய ராமதாஸ், தன்னை யார் என்று அடையாளப்படுத்தினார். அப்போது சோதனைச் சாவடியில் இருந்த 2 துப்பாக்கி ஏந்திய போலீஸார், காரை சோதனை செய்ய வேண்டும் என கூறினர்.

இதற்கு ராமதாஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும் அவருடன் மற்ற கார்களில் வந்த தொண்டர்களும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசாரின் செயலை கண்டித்து ராமதாஸ் காரில் அமர்ந்தபடியே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருடன் இருந்த நூற்றுக்கணக்கான பாமகவினரும் தர்மபுரி-பென்னாகரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நின்றன.

இது குறி்த்து பென்னாகரம் தொகுதி பாமக பொறுப்பாளரான எம்எல்ஏ வேல்முருகன் கூறுகையில்,

பிரசாரத்துக்கு வந்த எங்கள் தலைவரின் கார் மட்டும் திட்டமிட்டு நிறுத்தப்பட்டது.  ராமதாசின் காரை சோதனை செய்து பாமகவுக்கு அவமானத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சி செய்தனர் என்றார்.

--------------------------------------------------------------------------------------------------

யாரை காரை,  யார் நிறுத்துவது..?
"மரம் வெட்டி,  மக்கள் சேவை செய்யறவங்க நாங்க..."
எங்களுக்கேவா?
ங்கொய்யாலே.....
...வாங்கலே...... பாத்துப்புடுவோம்...



( தலைவா.. நீங்க அப்படியே நேராப்போயி, பீச்சாங்கை பக்கம் திருப்பி,
போயிட்டேயிருங்க...... நான் அப்பால வந்து ..... ஜாயின் பண்ணிக்கிறேன்..)

.
.
.

Friday, March 12, 2010

Mr..ஆன்மீகம் & அரசியவாதிகளே..

இரண்டு நாளா , மனசு சரியில்ல சார்..( நம்ம ரஞ்சி மற்றும் நித்தி பேட்டிகளை படிச்சு..)
இதுல வேற வெளியூரான், 'ஏய்யா.. இன்னும அதையே எழுதிகிட்டு இருக்கே..போயி வேற வேலையப்பாரு'னு  சொல்லிபுட்டான்...
சரி.. பேசாம ஜூராங்க் ஈஸ்ட்  போயி, முருகனுக்கு ஒரு சல்யூட் வெச்சா, எல்லாப்பிரச்சனையும்  சால்வ் ஆயுடுமேனு முடிவு பண்ணி , நேரா போயிட்டேன் சார்..

கோயில்ல ஒரே கூட்டம்.. ஏதோ உண்டகட்டி கொடுப்பாங்க  போல..அதுக்குத்தான்,  கூட்டம் இந்த  அம்மு அம்முதுனு நினைச்சுகிட்டு , செருப்ப கழட்டறேன், தோள் மேல ஒரு கை விழுகுது சார்..

திரும்பிப் பார்த்தா, 'ஈ'னு இளிச்சுகிட்டு சின்ராசு..
சனீஸ்க்கு, சகலைய ரொம்ப புடிக்கும்போல..
என்ன பண்றது.. ரெண்டு பேருமே, உள்ள போயி சாமி கும்பிட்டோம் சார்..( சாமி சத்தியமா..)  ......உண்டகட்டி கொடுக்கிற இடத்தில, கூட்டமே இல்ல..
ஆளுக்கு ஒண்ணு வாங்கிட்டு , படிக்கட்டுல உக்கார்ந்து சாப்பிட்டோம்..

திடீர்னு , சின்ராசு காதுகிட்ட, 'ஏதாவது பேசுடா பங்காளி.. அவன் நம்மளையே முறைக்கிறான்'னு சொன்னான்.       எவண்டா அது , எங்கள முறைக்கிறதுனு திரும்பிப்பார்த்தா, சோறு போட்ட செம்மலு..
(சே....ரெண்டு பார்சல் பண்ணலாமுனு பார்த்தா, சின்ராசு காரியத்த கெடுத்துப்புட்டானே...         பன்னி திங்கிற மாறி , திங்காதேனு சொன்னா, கேக்கிறானா, இந்த பய)

ஏதாவது பேசித்தொலைக்கமுனு, 'ஏம்பா.. சின்ராசு..ஊர்ல, சாமிக அட்டகாசம் தாங்க முடியல..       மருந்து கொடுக்கிறேன்.. ம&^ரக்கொடுக்கிறேனு அலம்பல் பண்ணிட்டு இருக்கானுக..    மக்களுக்கு கரண்ட் இல்ல.. குடிக்க தண்ணி இல்ல.. வருசம் பூரா, ரோடு போடறமாறி போட்டுட்டே இருக்கானுக..
ஆனா, ரோட்டத்தான் காணோம்.. இதெல்லாம் எப்ப சரியாகும்?'னு கேட்டேன்..

அதுக்கு, 'பேசாம, அரசியலு மற்றும், ஆன்மீகங்களை, மூணே வருசம்.. மூடிக்கிட்டு இருக்க சொல்லு..         எல்லாம் சரியாயிடும்'னு சொல்றான்

எப்படி?-இது நானு..

'பட்டாபட்டி....மூணு வருசம் லஞ்சம் வாங்காம், இருந்தா.. அந்தப்பணத்த வெச்சுட்டு , எல்லாப்பிரச்சனைகளையும்  சரி பண்ணிடலாம்'

ஏம்பா.. அவ்வளவு பணம் புரளுதா அதில..

ஆமாய்யா.. ஊடால ,  இந்த சன் நியாசி பயலுக வேற,  வெளி நாட்டுப் பணத்த வாங்கி,     போற வரவனுக்கு,    மருந்து கொடுத்துட்டு, நாட்ட குட்டிச்சுவராக்கிட்டு  இருக்கானுக..    பேசாமா, இவனுகள, கொஞ்ச நாளைக்கு , அமெரிக்கா, ஆப்பிரிக்கானு அனுப்பிட்டு, நாட்ட  நாமளே சுத்தப்படுத்திடலாம்..

போவானுகளா..?

போகாம என்ன.. வெள்ளக்காரனுகனா, நாம பல்ளிலுப்போமுனு , உலகத்துக்கே தெரியும்..  கிளிண்டனு, புஸ்சு கிட்ட சொல்லி, இவனுகள , அவனுக ஊருக்கு கூப்பிடச்சொல்லலாம்..  எல்லோரும்,   துண்டக்கட்டிட்டு போயிடுவானுக..

சரி.. அப்புறம்..

ஆக்கிரமிப்பு பண்ணுன, கடை, கண்ணி, வீடு.. எல்லாத்தையும் தட்டி எடுக்கிறோம்..  ரோட்ட அகலமா போட்டு, சோலார் யூஸ் பண்ணி எரியற, தெருவிளக்கு மாட்டுறோம்..  இதைய மட்டும் பண்ணிட்டாலே, பாதி பிரச்சனை தீர்ந்தது....  அப்புறம்.. நிசமாவே , ' இந்தியா ஒளிருமையா...'

நீ சொல்றது சரியாத்தான் படுது....மூணு வருசம்  லஞ்சம் வாங்காம இருந்தா
சுடுகாடா மாறிட்டு இருக்கிற நாட்ட, சொர்க்க நாடா மாத்திடலாம்..
ஆனாலும்.. கொஞ்சம் மனச் நெருட்டுதே..

சொல்லு..சொல்லு..அதுக்குத்தானே.. நானும் வந்திருக்கேன்..

இல்ல.. இவனுக திரும்பி வந்து .. திரும்பவும் நாறடுச்சுட்டா...

அதுக்கும் வழி இருக்கே....
திரும்பி, உள்ள வரும்போது .. இந்த ஏர்போர்ட்ல தான் இறங்கனுமுனு சட்டம் போட்டுடலாம்..  முதல்ல, ஆன்மீகத்த , ஒரு கேட்ல உள்ள அனுப்பனும்..
கேட்ல இருந்து வெளிய வரும்போது.. எவனுக்கும் வால் ட்யூப் இருக்காது..
ஏன்னா.. நம்ம டாக்டர் குழு.. வெற்றிகரமா பிரிச்சு எடுத்து விடும்..
அப்பறம் , இவனுகனாலே,   பிரச்சனை வருமா?

ஆகா.. அசைவமா பேசறானே.......வா.. வா.. மீதிய வெளிய போயி பேசலாமுனு
கூட்டிக்கிட்டு வந்துட்டேன்..
.
.
இதுவரை படித்துக்கொண்டு வந்த பெண்களே..
அப்படியே.. Bye..Bye சொல்லிட்டு கிளம்புங்க.. அடுத்த பதிவுல பார்க்கலாம்..
.

.
ஆண்களுக்கு...

கழட்டுன வால் ட்யூப்ப என்ன பண்ண போறேனு கேட்டேன் சார்...

அதுக்கு சொன்னான் பாருங்க.. ஒரு பதில..
கர்மமாடா சாமி..

அடுத்த கேங்குக்கு( அரசியல்னு என்னோட வாயால சொல்ல மாட்டேன் சார்..),
அதை  வேஸ்ட் பண்ணாம,  பின்னாடி,   fevicol போட்டு சொருகிடனுமாம்..
.
.
அப்ப என்ன நடக்கும்?..
[  புடுங்கியுட்டதாலே.....நிற்க வேண்டியது.....நிற்காம ..வந்துகிட்டேயிருக்கும்..







இங்க... அடைச்சு விட்டதாலே.. வர வேண்டியது வராம...!!!!!!.. .
  ]
.
.
வரட்டா ?

Wednesday, March 10, 2010

நிசமாவே, ரஞ்சிதா பாவம்-யா....


குமுதத்தில , அந்தப்புள்ள பேட்டிய படிச்சதும், கண்ணு கலங்கிடுச்சு சார்..
வாங்க.. அவங்க என்னா சொல்றாங்கனு பார்ப்போம்..
( மெதுவா வாங்க சார்.. தரை வழுக்கும்...)



//நித்யானந்தாவுக்கு நான் சேவைதான் செய்தேன். காலைப் பிடித்துவிடுவதும், மாத்திரை கொடுப்பதும், சாப்பிட உணவு கொடுப்பதும் தவறா.. அதில் ஏதேதோ சேர்த்து நீலப்படமாக்கிவிட்டார்கள்!, என்று ஆவேசப்பட்டுள்ளார் நடிகை ரஞ்சிதா.//

இது தப்பா சார்.. பாவம் காலை பிடித்து , பணிவிடை செய்யும்போது.. கை கொஞ்சம் மேல போயிடுச்சு..
இதையப் போயி பத்திரிக்கை, டீவியில பெருசா, எழுதி கிழிக்கிறானுக..

அந்த வீடியோவில் இருப்பது நீங்கள்தானே?
ஆமாம். நான்தான். ஆனால் அதை மிகைப்படுத்தி ஏதேதோ சேர்த்துள்ளனர். எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அது ஊருக்கே தெரியும். அவரது கொள்கைகள், ஆன்மீக உரைகளால் கவரப்பட்டவள் நான். எனக்கு பல ஆண்டுகளாக இருந்த வீஸிங் தொல்லையை ஒரே நாளில் குணப்படுத்தியவர் அவர்... அன்று முதல் அவரது பக்தை ஆகிவிட்டேன்...

வெள்ளயா இருந்தா பொய் சொல்லமாட்டாங்கனு அன்னைகே சின்ராசு சொன்னான்..  பார்த்தீங்களா..' வீடியோவில் இருப்பது  நான்தான்' னு , உண்மைய உரக்கச் சொல்லியிருக்காங்க..  அதுவுமில்லாம, என்னமோ வீஸிங் தொல்லை இருந்ததாமா.. அதைய மறைச்சு , மக்களுக்காக சினிமாவில
எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாங்க.. ஏதாவது ஒரு பயபுள்ள பாராட்டுனானுகளா? .......அப்புறம், சுவாமி ஒரே நாள்ல குணப்படுத்தியுருக்காருனா , எவ்வளவு திறமைக்காரரா இருப்பாரு..
அவரையும் போயி கிழிச்சு , தோரணம் கட்டிட்டு..
சே.. நாமெல்லாம் ரொம்ப மோசம் சார்...

அந்த ஆபாச காட்சிகள்...
காலைப் பிடித்து விடுவதும் மாத்திரை கொடுப்பதும் உணவு தருவதும் ஒரு பணிவிடைதானே.. அத்துடன் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
சாமியாரை மிரட்டி பணம் பறிக்கத்தான் இப்படிச் செய்தீர்களாமே?
நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பணத்துக்காக நானே இப்படியெல்லாம் படமெடுத்தேன் என்று மீடியா சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை. பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. எந்த ஒரு பெண்ணாவது தன்னைத்தானே இப்படி எடுத்துக் கொள்வாளா?


சே.. நெஞ்ச திரும்பத் திரும்ப நக்குது சார் இந்த பொண்ணு...
அந்தம்மா , நல்ல குடும்பத்தில பிறந்தா.. அதோட நடவடிக்கையெல்லாம் நல்லாதான் சார் இருக்கும்..  பணத்துக்காக , யாராவது இப்படியெல்லாம் பண்ணுவாங்கலா சார்.. ப்ளாக்கர்களே.. ஒரே ஒரு நிமிசம்
யோசனை பண்ணிப் பாருங்க.. மகா மட்டமான ஆளுகய்யா நீங்க...

உங்கள் கணவர் ராகேஷை ஏன் விவாகரத்து செய்தீர்கள்?
பத்திரிகை- டிவிக்களில்தான் இப்படி சொல்கிறார்கள். ஏன் இப்படி? எனக்கும் என் கணவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.

பார்த்தீங்களா... அவுக, இவுகள விவாகரத்து பண்ணலையாம்..
நீங்களா , கற்பனை பண்ணி நல்ல குடும்பத்திலெ, நச்ச கலந்துட்டீங்களே... பாவிகளா...
உங்க பாவத்தை கழுவ, அவரோட கணவர் ராகேஷை காலை, தங்க தாம்பாளத்தில வெச்சு,   காலைக் கழுவி.. அந்த தண்ணிய தலையில தெளிச்சுக்கோங்களே..பன்னாடைகளா..


நடந்த உண்மையை வெளிச்சத்துக்கு வந்து நீங்களே சொல்லலாமே?
அதான் இப்போது சொல்லிட்டேனே... நித்யானந்தா மகாஞானி. அடுத்த இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்வார். தயவு செய்து மீடியாக்கள் என்னை மேலும் காயப்படுத்தாதீர்கள்..."

பார்த்தீங்களா.. சுவாமி மகா ஞானினு கத்திகிட்டேயிருக்கேன்..
எவனாவது நம்புனிங்களா.   இப்பவாவது நம்புங்க  மடப்பய மக்கா..


சரி.. வீசிங் வந்தா என்ன பண்ணனுமா?..

நீங்க போயி , உங்க கணவரோட, சுவாமிக்கு பணிவிடை பண்ணுங்க மேடம்..
இந்த பயலுகளுக்கு , நான் பதில் சொல்லிக்கிறேன்..


யோவ் நாதாரி.. இதயெல்லாம் போயி அவங்ககிட்ட கேட்டுகிட்டு..
சுவாமி, ஸ்பூனல் மருந்து குடிச்சுட்டு , மந்திரம் சொல்வாரு..
அந்த மருந்து .. அப்படியே மாயாமாகி கீழ வரும்..
நல்லா உறிஞ்சு  உறிஞ்சு குடிங்க.. ஒரே தடவை.. வாய் நிறைய பண்ணினா  போதும்.. அப்படியே சரியாயிடும்..

வரட்டா..
.
.
.

Tuesday, March 9, 2010

வாழ்த்துக்கள் கேப்டன்-ச்சீ


தமிழக மக்களுக்காக அரும்பாடுபட்டு வரும், தானைத்தலைவன், கருப்புத் தங்கம், கலைமாமணி விஜயகாந்த் அவர்கள்,   ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முதல் 24 மணிநேர ஒளிபரப்பு சேவையைத் தொடங்கவுள்ளார்..

அவரை பேட்டியெடுக்காவிட்டால், தமிழ்கூறும் நல்லுலகம், நம்மை காறித்துப்பிவிடும் என்பதால்,
இதோ, பட்டாபட்டியை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டோம்..

மன்னாரு,, வீடியோ கேமரா ரெடி பண்ணுக்க..கேப்டனைப் பார்க்கப்போறோம்.

என்னா தல.. 'அம்மா மாறி' எல்லாம் மறந்துபோயிடிறீங்க...,நம்ம வீடியோ கேமராதான், நித்தி எடுத்துட்டுப்போயிட்டானே, ' ஹரிதுவாருக்கு..'

அட .. மறந்துட்டேனப்பா.. வேற ஏதாவது பாடாவதி கேமராவ எடுத்துட்டு வா.. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்..

கேப்டன் வீடு...
கேப்டன் வரவேற்பறையில்  , ஓடத்தாயாராயிருக்கும் நிலையில் அமர்ந்திருக்கிறார் கேப்டன்..  முகம் வெளிறியிருக்கிறது..

பட்டா, "சார்.. வணக்கம்.. உங்கள் புதிய சேனல் பற்றி?"
ங்க்.. அது.. நான்... அப்புறம்

மன்னாரு சத்தமாக,  'சார். ..நாங்க புதிய சேனல் பற்றி கேட்கிறோம்"

யோவ்.. அந்த கேமராவை மூலையில வை..அப்பத்தான் கேப்டன் பேசுவாரு ..
( கேமரா வைக்கப்படுகிறது.. பேட்டரி புடுங்கிவிட்டதால் 'ஆன்' ஆகவில்லை.. மன்னித்துக்கொள்ளுங்கள் வாசகர்களே..)

"சார்.. வணக்கம்.. உங்களுக்கு புதிய சேனல் துவங்கும் எண்ணம் எப்போது வந்தது?"
கடந்த சில வருடங்களாக, தமிழக மக்களின் துயர் துடைக்க, சூறாவளி சுற்றுப்பயணம் செய்து  வந்தது உங்களுக்கத் தெரிந்திருக்கும்..அப்போது ரேசன் கடைக்களில் , நீண்ட வரிசையில் மக்களை  நிற்பதைப் பார்த்தேன்..அதைப்பார்த்ததும் என் மனம் பதைபதைத்து, கண்கள் சிவந்தது..
ஆங்க்......அந்த நிகழ்ச்சியை, "பழைய சரித்திரத்தில்", ஆறாம் பக்கத்தில்
பொன் எழுத்தால் பொறிக்கபட்டுள்ளதை
இந்த நேரத்தில் நினைவுப்படுத்த விரும்புகிறோம்..

சார்.  விசயத்துக்கு வாங்க சார்..டீவி ஆரம்பித்ததற்க்கும், ரேசன் கடைக்கும் என்ன சம்பந்தம்?
அதாவது , தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகள்  25,234..
அதில் புழுத்துப்போன அரிசி உள்ளது 22,498
மண்னெண்ணய் ஸ்டாக் இல்லாதது 18,341..

இது எங்களுக்கு தாங்காது சார்.. ப்ளீஸ்.. நேராச்சொல்லுங்க..
ஒரு நிமிசம்..( அருகில் இருந்த நபரைப் பார்த்து ) அந்த பேப்பரை எடுத்துட்டு வாங்க...
ம்...அதாவது , எங்க தேர்தல் வாக்குருதியிலே , "ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் "னு சொல்லியிருக்கோம்..  மக்கள் , வீட்டிலேயே இருந்தால், போர் அடிக்கும்.. அதனால, மக்கள் துயர் துடைக்க டீவி சேனல்
ஆரம்பிக்க உள்ளோம்..

ஏற்கனவே , மக்களுக்கு திகட்டதிகட்ட சேனல்கள் உள்ளதே..இதில் நீங்க
என்ன புதுசா பண்ணப்போறீங்க?..

எங்கள் தொலைக்காட்சி அவரிகளிடமிருந்து வேறுபட்டது..
திங்கள் முதல் வெள்ளிவரை நவரசம்  ததும்பும் தொடர் நாடகங்கள்..
மதியம் மக்களின் மனம் கவரும் திரைப்படங்கள்
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் டப்பிங்க் செய்யப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்கள்
மாலை நேரத்தில் புத்தம் புதிய தமிழ் திரைப்படங்கள்


அந்த மயிரத்தானே எல்லோரும் பண்ணிட்டு இருக்காங்க..   நீங்க ஏதாவது புதுசா, 'தன்னம்பிக்கை, குழந்தைகள், மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள்'
படைக்கப்போறீங்களா?.

நல்ல கேள்வி.. அதுக்குத்தான் மேலிடத்திலே பேசிட்டு   இருக்கோம்..முடிவானதும்   உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்..

சார்..மேலிடம்னு சொல்வது நம்ம அண்ணியத்தானே.. நம்ம சதிஸ் எப்படியிருக்காரு சார்..
அவருதான் ,நிர்வாக இயக்குனரா செட்டில் ஆயிட்டாரே..?

நான் கூட உங்களைபற்றி , கொஞ்சம் நாள் முன்னாடி நக்கலா எழுதிட்டேன்.
'ஒண்ணு வாங்கினா.. ஒண்ணு ப்ரி ' , 'கல்யாணம் பண்ணினா...  மச்சானை
இலவச இணைப்பா  அனுப்பிட்டாங்க
'னு..  என்னை மன்னிச்சுங்க சார்..

பரவாயில்லை..
ஆனா எனக்கு முன்னாடி 'மன்னிப்பு'ங்கற வார்த்தைய சொல்லாதீங்க..
எனக்கு புடிக்காது..நீங்க பெரும் தன்மையா 'மன்னிப்பு' கேட்டதாலே,
உங்களுக்கு மட்டும், நாங்க என்ன பண்ணப்போறோமுனு சொல்லிடரேன்..
அதாவது வாரத்திலே ஏழு நாட்கள்.. அதைய எட்டு  (8),  நாளாப் பண்ண,  ஒரு சட்டம் கொண்டு வரப்போறோம்..  அப்புறம், அந்த எட்டாவது நாளை, பயனுள்ள நிகழ்சிக்கு ஒதிக்கிடலாம். என்ன சொல்றீங்க?..

சார்...சார்... வெயிட்..இதுபோல ஐடியாவ உங்களுக்கு யாரோ கொடுத்திருக்காங்கனா.... !!!!
ஆமா, சதீஸு...எந்த  கம்பெனியில  'நிர்வாக இயக்குனரா' இருக்காரு சார்?

கேப்டன் டீவில.தான்.. ஆங்க்...

அதுதானே பார்த்தேன்.. சார்.. இதுபோல மக்களுக்கு, மென்மேலும் பாடுபட
என் வாழ்த்துக்கள்..கடைசியா ஒரே ஒரு உதவிசார்..
வேட்டிய கட்டிட்டு நியூஸ் படிக்கச்சொல்லிட்டாரு நம்ம மணியப்பா....
நீங்க, உங்க சேனல்ல , பட்டாபட்டிய மாட்டிட்டு ,  நியூஸ் படிக்கச்சொல்லுங்களேன்..
அந்த பட்டாபட்டியில , Advertisement  போட்டா,    இன்னும் கொஞ்சம் காசு பார்க்கலாம் சார்..

ஆமா.. அதும் நல்லாதான் இருக்கு.. ஆனா பாருங்க.. கட்சி விசயத்தில வேணா, எல்லோரும் என்னை ஏமாத்தலாம்.. ஆனா இந்த கேமரா விசயத்திலே.. ஒண்ணும் பண்ண முடியாது.. ஏன்னா, எனக்கு 60 வருச சர்வீசு..
பட்டாபட்டிதான் கீழ இருக்குமே.. நியூஸ் வாசிக்கும்போது எப்படி தெரியும்?..

உம்....கேமராவ கீழ வெச்சு எடுங்க..நல்லாத் தெரியும்..
( அப்போது அண்ணியார் , அறைக்குள் பிரவேசிக்கிறார்.. பெரியண்ணன் கை நடுங்க....நாங்க....)
.
யோவ்...மன்னாரு........ ஓடாதே நில்லு.. நானும் வாரேன்....

 மன்னாரு மூளைக்காரனய்யா..
பாடாவதி கேமாரா வச்சே,நேக்கா,  'வருங்கால முதல்வரை' போட்டோ எடுத்துட்டான்..  அந்த வருங்கால முதல்வரை , வாசகர்களுக்கு முதன்முதலாக,  அறிமுகப்படுத்துவதில், ப.மு.க  பெருமைகொள்கிறது..
( முக்கியமா, 'செக்ஸ் பத்திரிக்கை நக்கீரனுக்கு' முன்னால் எனச்சேர்த்துப்படிக்கவும்-ஆசிரியர்)



எங்க ,  வருங்கால முதல்வரை மறைச்சிகிட்டு..
பெரிய சச்சினு நினைப்பு..
பேட்ட, எடுத்துகிட்டு  தள்ளி நில்லுயா..




( சார் வாசகர்களே.. பாடாவதி கேமரா , குவாலிட்டி அவ்வளவுதான் வரும்..)

.
.
.

Saturday, March 6, 2010

கர்மமடா சாமி....

சனிக்கிழமை, 6, மார்ச் 2010 (7:42 IST)
பட்டாபட்டி அலுவலகம்..


இன்னைக்கு மதியமாவது. அங்கண்ணன் பிரியாணி கடையில....  பிரியாணிய,  ஒரு வெட்டு வெட்டிடனுமுனு நினைச்சுட்டு ,  படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறேன்..
கதவு 'பட பட'வென தட்டப்படுகிறது...

சே.. காலங்காத்தால எந்த பன்னாடைக?..இப்படி கதவை உடைக்கிறானுக?..சனிக்கிழமைன, சனிஸ்வரன் ஓவர் டைம் செய்வானு தெரியும்...ஆனா, எந்த ஏரியா டியூட்டினு எந்த நாதாரிக்கும்  தெரியாதே...( ராணுவ ரகசியமாம்...)

ஒருவேளை ,நேற்று, கோவாலை போட்டு குமறுன நியூஸ்  கேள்விப்பட்டு..சண்ட போட  அல்லக்கைகளை அனுப்பி வெச்சுடானானு நினைத்து கதவத் தொறக்கிறேன்...

நம்ம பயலுக மூணு பேரு.. கையில சாணிப் பத்திரிக்கை..(என்ன பத்திரிக்கையா?..நீங்க நினைக்கிறது சரிதான் சார்.. நம்ம . 'நக்கீரந்தான்'..)

தக்காளி..கன்பார்ம்..  சனிக்கு இன்னைக்கு டியூட்டி, நம்ம ஆபிஸ்லதான்...

'தலைவா..தலைவா.. நேத்து ஒரு பிரச்சனை ஆயிடுச்சு..என்ன பண்றதுனு தெரியல..நாங்க மனசறிஞ்சு இதை  பண்ணல தல.. ஆனா.. இவனுக, போலிஸு, ரானுவமுனு  சொல்றதப்பார்த்தா , பயமாயிருக்கு தல'-னு சொல்லிட்டு  ஓ-னு அழுகறானுக...

ஆகா.. நாம எழுதுனதப்பார்த்து,  வீரம் வந்து எவனையாவது போட்டு தள்ளிட்டானுகளா?னு    லைட்டா டவுட் வந்திருச்சு..

உக்காரவெச்சு..காபி தண்ணி கொடுத்துட்டு , என்னா பிரச்சனைனு விசயத்தை கறந்தா..

 "கர்மமடா சாமி.... இது ஒரு பிரச்சனைனு காலங்காத்தால.. பல்லு வெளக்காமா வந்துட்டானுக.."னு கோபம் வந்திருச்சு சார்..

தொறத்திவிட்டுட்டு , இதோ.. அங்கண்ணன் பிரியாணி கடைக்கு  கெளம்பிட்டேன்..

வரட்டுமா சார்...
.
.


ஏன் சார்.. நீங்க போகலையா? எதுக்கு இன்னும் நிக்கிறீங்க? என்னது....
விசயத்தை சொன்னாத்தான் போவிங்களா?.

அது ஒண்ணுமில்ல சார்.. நேத்து , அந்த மூணூ நாதாரிக...
சரக்கு வாங்க,  ஆட்டுக்காரன்பட்டி பிரிவு ரோடு , டாஸ்மார்க் போயிருக்கானுக..

தண்ணிய அங்கயே அடுச்சுட்டு , வீட்டுக்கு போயிருந்தா பிரச்சனையே இல்ல..(அப்படி நடக்குமுனு தெரிஞ்சுதான்,  தாத்தா..   'பார்'  வசதி செஞ்சுகொடுத்திருக்கார்..பன்னாடைகளுக்கு புரியுமா?)

அவனுக பெரிய ம&^%ரு மாறி ,

தண்ணி...
மீன்
கோழினு பார்சல் பண்ணிட்டு,  பைக்க எடுத்திருக்கானுக..

அப்பப்பார்த்து .. ரெண்டு மூணு சொறி நாய்க, கையில வெச்சிருந்த பார்சலைப் பார்த்து மொறைச்சிருக்கு..   நம்ம பையனுக சரக்கு வாங்குன சந்தோசத்தில.. அதைப்பார்த்து கல் வீசியிருக்கானுக...
அவ்வளவுதான் நடந்துச்சு.. இதைப்போயி ஒரு நியூஸ்னு..
.
.
இன்னும் புரியலையா..
சரிங்க.. அந்த சாணி பத்திரிக்கைய,  படிச்சு... நீங்களே தெரிஞ்சுக்கோங்க....
எனக்கு நேரமாச்சு சார்..

பை.. பை...

----------------------------------------------------------------------------------------------------------------
(நன்றி நக்கீரன் செய்திக்கு)
தோல்வி பயத்தில் தாக்குகிறார்கள்: தங்கபாலு
பென்னாகரத்தில் நேற்றிரவு நடந்த தேர்தில் பிரச்சார பொதுக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேசியபின்,   காங்கிரசார் தர்மபுரி நோக்கி வந்தனர்.
அப்போது ஆட்டுக்காரன்பட்டி பிரிவு ரோடு அருகில், பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர்.

ஓசூர் எம்.எல்.ஏ., கோபிநாத் வந்த கார், மற்றொரு கார் சேதமடைந்தன. இது குறித்து தர்மபுரியில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறுகையில்,’தோல்வி பயத்தில் எங்கள் மீது இது போன்ற தாக்குதல் நடத்தப்படுகிறது.
போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்’ என்றார்.
----------------------------------------------------------------------------------------------------------------



ராணுவமா? ...-

இவனுக மட்டும் நீயூஸ்னு என்னத்த வேணா சொல்லுவானுக..
நான் அதுல... ராணுவம்னு .. ஒரே வார்த்தைதான் சேர்த்திருக்கேன்...


:-)

Friday, March 5, 2010

நக்கீரனா?..இல்லை nakku*&^%?

இவ்வளவு பிரச்சனைக்கும் நடுவில்.. உண்மையை வெளிச்சமிட்டு காட்டி... தமிழக மக்களை , தலை  குனிய..நிமிர வைத்த,  நக்கீரன் ஆசிரியரை பேட்டி காணாவிட்டால்,   பதிவுலகத்துக்கே ஆப்பு வைக்கும் அபாயமிருப்பதால், உடனடியாக கடமையில்  இறங்கிவிட்டோம்...


அண்ணனை பிடிக்க அலைஞ்ச திரிஞ்ச நேரத்தில, ஓசாமா கக்கூஸுல கேமரா வெச்சுட்டு வந்திருக்கலாம் சார்.அவ்வளவு கஷ்டமாயிடுச்சு அவரப்பிடிக்க..


எப்படியோ சின்ராசு சொன்ன  ஆலோசனைப்படி நடந்ததில், கொஞ்சம் மூளையை உபயோகித்து,  அண்ணனை பிடித்துவிட்டோம்..

( என்ன ஆலோசனைனு கேக்காதீங்க..குப்பையில சில சமயம் மாணிக்கம் கிடைக்கும் சார்..   யோவ்.நக்கல் பண்ணாதே. ஒழுக்காமச்சொல்லுனு நினைச்சீங்கனா, ஒரு மெயில தட்டிவிடுங்க.... சொல்றேன் )


சார்.. வணக்கம்.. நாங்கள் ப.மு.க வில் இருந்து   Bla..Bla...Bla.. இந்த பேருக்கான காரணத்தை சொல்லமுடியுமா?
தம்பி.. இப்ப பார்த்தீங்கனா, நான் அந்த காலத்தில கோவில்பட்டில ஒரு லாட்ஸ்-ல

இடைமறித்து  சார்.. அந்த கோவில்பட்டி வீரலட்சுமி .. அதுவா சார்?..
இங்க பாருங்க.. இப்படி பெண்களை பற்றி கேவலமா பேசக்கூடாது..நாங்கெல்லாம், அந்த காலத்திலேயே ,அதிரடிப்படைக்கு டிமிக்கி கொடுத்துட்டு, வீரப்பன காட்ல போயி பேட்டி எடுத்தவங்க.. இதுவரை அந்த சாதனைய எந்தப் பத்திரிக்கையும் முறியடிக்க முடியவில்லை..

ஏது சார்..  டிமிக்கி கொடுத்ததையா?....
தம்பி.. உங்களுக்கு சின்ன வயசு.. துடுக்கு கொஞ்சம் ஜாஸ்தியாதான் இருக்கு..எனக்கு கோபம் வர்ற மாறி கேக்காதே.. புரியுதா?


ஓ.கே  சார். நெற்றிக்கண்ண திறந்துடாதீங்க.. மேல சொல்லுங்க..
 எனக்கு புகழ்ச்சி பிடிக்காது..அப்பறம்தான்,  நான்,  அரசு தூதுவனானது தமிழகத்திற்க்கே தெரியுமே..  எல்லா பேப்பரிலும் நான் வீரப்ப முதலாளியுடன் இருந்த போட்டோ போட்டு , காசு பார்த்திட்டானுக..

நான் மட்டும் இல்லேன,  யாருக்குமே வீரப்பன் எப்படியிருப்பானு தெரியாது..
அப்புறம் எனக்கு புகழ்ச்சி பிடிக்காது.. சொல்லிட்டேன்..

ஆமா சார்.. இதுவரை ரெண்டு தடவை சொல்லிட்டீங்க..
ம்.. என்ன சொல்றீங்க?..

ஒண்ணுமில்ல சார்..கொஞ்சம் சீக்கிரமா சொன்னீங்கனா, நான் கடைத்தெருவில தக்காளி வாங்கிட்டு  வீட்டுக்கு போகமுடியும்.. இல்லாட்டி இன்னைக்கு எங்க குடும்பம்,  பட்டினி கிடக்க வேண்டும் சார்..
உங்க பிரச்சனைய விடுங்க.. அப்ப காட்ல ஒரு பெரிய முள்ளு.. என்னோட 5000 ரூபாய் ஷூல குத்திடுச்சு.. ......    மேலும் நான் போட்டிருந்த சட்டை,  ஒரு 2500 ரூபாய் இருக்கும்..கொஞ்சம் இருங்க.. சரியான விலை என்னானு  எங்க வீட்டுக்கார அம்மாவை கேட்டுச்சொல்றேன்( திரும்பி குரல் கொடுக்கிறார் .. பதிலே காணோம்..)


அத விடுங்க சார்.  மேல சொல்லுங்க..
அப்படியா.. சரி.. எங்க விட்டேன்.. ஆங்க்...  சட்டைவிலை ரூ 3500-ல..
( 1 நிமிசத்தில ரூபாய் 1000 ஏறிடுச்சுனு நினைத்தால், நான் பொறுப்பில்ல..சொன்னத அப்படியே எழுதுறேன்)
கடமை கண்ணுக்கு முன்னாடி நின்னதால் , அதையும் பொருட்படுத்தாம , காட்டுக்குள்ள போயிட்டு வந்தது சரித்திரதில்  பொறிக்கப்பட்டு விட்டதே..

சார்.. அதுதான், சுட்டு.. குழி தோண்டிப் புதைச்சாச்சே..இப்ப ஓடிட்டு இருக்கும் விசயத்தை பற்றி பேசலாமே...
அதுவா.. இந்த பய என்ன பண்ணுனான?.. ஊருக்கே உபதேசம் பண்றேனு கோடிக்கணக்குல பணத்த சேர்த்துட்டான்..  முளையிலேயே கிள்ளாட்டி , முட்புதரா வளந்துருவான்.
.( மக்கா.. நான் பாபாவை பற்றி பேசவில்லை...
சண்டைக்கு  வராதீங்க..நீங்க எப்போதும் போல .. பகவானை தரிசியுங்கள்- நன்றி ஆசிரியர்)


அதனாலதான்,  ஆப்ரேசன் நிஞ்சானு ஒரு திட்டம் போட்டோம்..நம்ம பயலுக சக்சஸா முடிச்சுட்டாங்க..
ஆனா ப்ளான் என்னோடது.. எனக்கு புக......( சரிங்க.. சரிங்க..புகழ்ச்சி பிடிக்காது )

தெரியாம  வீடியோ எடுக்க ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீங்களே..
இல்ல.. இல்ல.. எமது நண்பர் ஒருவர் கூரியரில் அனுப்பிவைத்தார்..
நாங்க யூஸ் பண்ணிக்கிட்டோம்..எங்க வெப் பேஜ்ல கூட லிங்க் கொடுத்துள்ளோமே..

ஆமா சார்.. அந்த கண்ராவி பார்த்துட்டுத்தான் , பேட்டிக்கே வந்தேன்...
இது ஒரு கலாச்சார சீரழிவாயிருக்கே சார்..
ஆமாம்.. அதை சரி செய்யத்தான் , நாங்கள் பாடுபடுகிறோம்..

சார்.. நான் சொன்னது உங்களை..
.
.
.

ன்ன இப்படி சொல்றீங்க.. எனக்கு புகழ்......
.
.
.
ஸ்டாப்..ஸ்டாப்....................... வெப்ல நீலப்படத்தையே அப்லோட் பண்ணியிருக்கீங்க.. உங்களைப்போயி..சே...

இங்க பாருங்க.. நாங்கதான் இப்ப அதை மாற்றிவிட்டோமே..

நீங்க டெலிட் பண்ணியிருந்தா.. உங்களை மனிதனா பார்த்திருப்போம் சார்..
ஆனா. 3 நிமிசம் காட்டிட்டு , முழுப்படத்தை பார்க்க  பே பால்ல காசு கட்டச்சொல்றிங்க..

ஏன்..எங்களுக்கும் குழந்தை குட்டியிருக்குது.. நாங்க பொழைக்க வேண்டாமா?..

அடக்கண்ராவியே..
அதுக்கு எவ்வளவோ வழியிருக்கே.. நீலப்படத்த காண்பித்துதான்   சம்பாரிப்பிங்களா?
நீ  இங்கயே இரு.. இப்பவே தலைவருக்கு போன் பண்றேன்..



அட.. அதைவேற ஞாபகப்படுத்திட்டீங்களே..
பத்திரிக்கைனா நடு நிலமையா இருக்கனும்..ஆனா, தாத்தா கையில பரிசு வாங்க்கிட்டா.. அப்புறம் நடு நிலையாவது.. நடு மண்டையாவது..











இனிமேல் , நக்கீரன் வாங்கும்போது , பெண்பிள்ளகளை வைத்து கையத் தடவச்சொல்லுங்க.சூடானதும்... நக்கீரன் 1 புக் ரூபாய் 250னு சொல்லுங்க.. நல்லா பிஸ்னஸ் ஆகும்..
.
.
.

( பத்திரிக்கை தொடங்கிய காலத்திலிருந்த  , நக்கீரன் மேல் எனக்கு மரியாதையிருந்தது..  எப்போது ஆளும் கட்சியிடம் பரிசுகள் வாங்கி... Delete செய்யாமல்.....காசு கேட்பதும்...... 

சே...உங்கள் பத்திரிக்கைகளை படித்ததற்க்கு வெட்கப்படுகிறேன்......- இவன்  பட்டாபட்டி)
.
.
.

சன் டீவியா?...நம்ம டீவி மச்சி..


சன் தொலைகாட்சி நிறுவனத்தின்  தலைவர் பெரியவருக்கு ,
பட்டாபட்டியின் அன்பு வணக்கம்..

சமீபத்தில், குடும்ப டீவியில் வெளியிட்ட , "சிறு வீடியோ தொகுப்பை",
குடும்பத்துடன் கண்டு களித்தோம்..

நாங்கள் அடைந்த "பேரானந்தத்தை",   யாராலும்  தரமுடியாது  என்பதை, இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விருப்பபடுகிறேன்..

மேலும், இது போல நிகழ்சிகளை மென்மேலும் , ஒளிபரப்பி,  தங்கத் தமிழ் நாட்டின் புகழை, வானுயர உயர்த்துவீர்கள் என நம்புகிறோம்..
( பள்ளிகளில் செக்ஸ் கல்வி வேண்டாம் என்பது என்  கருத்து......விளக்கப்படங்களுடன்  வீட்டிலேயே பார்க்க வசதி செய்து கொடுத்துள்ளதால் , உங்களுக்கு  ஒரு விருது கொடுக்கலாமா என ,  கட்சியின் பொது குழு முடிவு செய்யவுள்ளது..)

சிலர்.... சன் வேறு.. கலைஞர் டீவி வேறு என சொல்லித் திரிகின்றனர்..
அவர்களுக்கு, கருத்து கணிப்பு நடத்த ப.மு.க   ( எங்க கட்சிங்க..அதாவது பட்டாபட்டி முன்னேற்றக் கழகம்)    முடிவு செய்துள்ளது.

எனவே , அந்த நல்லவர்களை ,உடனடியாக... கலைஞர்  காப்புறுதி திட்டத்திலிருந்து  நீக்க முடியுமா? ...

எதற்கும்,    இன்றிரவு , உங்கள் சுற்றம் சூழலுடன் , கலந்தாலோசித்து விட்டு .. எங்களுக்கு Flash News-ல்  தெரியப்படுத்தினால் ...இருப்புப்பட்டறைக்கு செல்ல வசதியாயிருக்கும்...

நேற்று கடைவீதியில் , கடும் வெயிலில் நடந்து கொண்டிருந்த போது
"மாணவர்கள் கொலை...கண்டனம் " என்ற சில வார்த்தைகள் என் கண்ணில் பட்டன..( கண் கூசியதால் சரியாகப் படிக்க முடிக்கவில்லை)

தங்கள் ஆட்சியில் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது  தமிழ் நாடறியும்..
அப்படியென்றால் , பிற மாநிலத்திலெ நடந்தை உங்கள் முன் வைக்கிறார்கள் என்றால்... தலைவா.. நீங்கள் எவ்வளவு.. புகழ் பெற்றவர் என்பது தெரிகிறது

மேலும் ,  அந்த கிளிப்ஸ் பார்த்து பார்த்து சலித்துவிட்டது...
வேறு புகழ்பெற்ற  மனிதர்களை( வாரிசுகள் ஆக இருந்தாலும் பரவாயில்லை..)  வைத்து எடுக்க முடிந்தால்.. நாங்கள்  டீவியின் முன்,   நிறைய நேரம் அமர வசதியாயிருக்கும்..

மேலும் கஜானா வேகமாக காலியாவதாக அறிந்தேன்..( சென்ஸார் டிபார்ட்மெண்ட் + காவல் துறையில்,  வெட்டியாக சம்பளம்
வாங்கி கொண்டிருப்பதாக, காதில் விழுந்தது..

மத்தியமாவது மாநிலமாவது...
எதற்கும்............   அதையும்,  என்னவென்று பார்க்கவும் )
.

வேலையில்லா மக்களுக்கு ,  பணம்..
அனுபவிக்க, டாஸ்மார்க்
தங்குவதற்கு , சமத்துவபுரம்
சமைக்க, 1 ரூபாய் அரிசி..
பார்க்க, இலவச டீ.வீ
இதில் களிக்க , கிளிப்பிங்ஸ்


ஒண்ணே ஒண்ணு மிஸ்ஸிங்க்..
முரசொலியில கடைசிப் பக்கத்தில, "காண்டம்" ஒட்டி அனுப்பினா போதும் தலைவா..

நாங்க பொழச்சுக்குவோம்..



நம்ம கலா நிதிக்கு , உடன்பிறப்பின் சல்யூட்ட... சொல்லிடுங்க..

பாவம்.. நடுத்தர மக்களை, மேல் தட்டு மக்களாக்க,    அரும் பாடுபடும் மாறன்களுக்கு.. பட்டாபட்டியின் சல்யூட்...

அப்புறம் சொல்ல மறந்துட்டேன்.. ஆற்காட்டாரு பாவம் நொந்து போயிட்டாரு...
அவருக்கு ஏதாவது ஊசி பண்ணும் கம்பெனி லைசன்ஸ் கிடைக்க ஏற்பாடு பண்ணுங்க.. அந்த முரசொலியிலெ........ சாரிங்க.. அந்த காண்டத்தில ஓட்டை போடும் காண்ட் ராக்ட்,     அவருக்கே கிடைக்கற மாறி செய்யுங்க..( உதவிக்கு நம்ம ராசா பயலை கூப்பிட்டுக்கோங்க.. அவருக்கு தெரியும் என்ன பண்ணுவதென்று..)


ஏதுக்குனு கேக்காதீங்க தலைவா.. நீங்கதான் என் மூச்சு.. அவரு ஓட்டையப்போட்டா , அடுத்த ஜெனரேசன் உறுப்பினர்கள் உருவாகுவார்கள்..
அதுக்குத்தான்..

அப்புறம் நம்ம நக்கீரன் அய்யா அவர்களுக்கு..
நன்றி அய்யா..
இந்த நாதாரிகள்.............. , பல சீன் களை கட் செய்த்து விட்டார்கள்..

ஏதோ உங்க புண்ணியத்தில , முழுபடமும் பார்க்க முடிஞ்சது...
ஆமா.. உங்க குழந்தைகளுக்கு படத்தை,   விளக்கி சொன்னீங்களா..?

நீங்க யாரு சார்.. மீசைக்காரரு.. உங்களுக்கு நான் சொல்லித்தான் .. தெரியுமா?



நன்றி...
உடன்பிறப்பு
.
இந்தப் பதிவு, சென்ஸார் அதிகாரிகளால்  சரி பார்க்கப்பட்டு , கலாச்சார சீரழிவு இல்லை என்ற ப.மு.க   முத்திரையுடன் வெளியிடப்படுகிறது...
( நன்றி- ஆசிரியர்...)



வாசகர்களின் கமென்ஸ்

"    நீல படத்தை குடும்பத்தோடு பார்க்கும், உன் பழக்கத்தை, எங்களிடம் ஏற்படுதுகிறாயா? நல்லவன் என்று நம்பி வீட்டினுள் விட்டால், உன் நாதாரி புத்தியை காட்டிவிட்டாய்.
பெண் இல்லாமல், பெண் படம் இல்லாமல், ஒரு நிமிடமோ, ஓர் பத்தியோ உன்னால் வெளியிட முடியுமா?ஆபாசதையே மட்டுமே விற்கும் உனக்கும், கன்னட பிரசாத்துக்கும் என்ன வித்தியாசம்?
சலிக்க சலிக்க நீல படத்தை பார்பதுக்கு, உன் குடும்பம் போல் தரங்கெட்டது அல்ல எங்கள் குடும்பம்.
பேசாமல் ஒன்று செய்து இருக்காலாம், உன் வீட்டிலிருந்தோ அல்லது உன் நிறுவனத்தில் இருந்தோ, ஒரு ஆள் அனுப்பி, எல்லா குடும்ப தலைவருக்கும், சு% இ*&^ம் செய்து வைத்து இருக்கலாம். பெரிய பாராட்டும் நிறைய பணமும் ....
ஏன்.. விருதுமே கிடைத்து இருக்கும்  "


.
.

Wednesday, March 3, 2010

ஈருடல்.... ஓருயிர் Exclusive ( எச்சக்கலை ) பேட்டி..

தயவுசெய்து பெண்பிள்ளைகள், 
மற்றும் 18 வயதுக்கும் குறைவானவர்கள் 
இப்பதிவை படிக்கவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...




செய்திகள்
நித்யானந்த பீடம் சார்பில் கல்வி நிலையம்


பெங்களூர் ஊரக மாவட்டம் பிடதியில் பரம ஹம்ஸ நித்தியானந்த சாமிகள் ஆஸ்ரமம் உள்ளது.  31-ம் தேதி விழாவில் ஆதிசுஞ்சுனகிரி மடாதிபதி பாலகங்காதர நாத சுவாமிகள் கலந்து கொண்டு நித்யானந்த சபாவுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
 

 மண்டியாவில் கட்டப்படவுள்ள நித்தியானந்தா வித்யாலயா என்ற கல்வி நிறுவனத்துக்கு சுத்தூர் மடாதிபதி சிவராத்ரி தேசிகேந்திர மகா சுவாமிகள் அடிக்கல் நாட்டுகிறார். "ஆனந்தோத்சவா 2010' என்ற ஆங்கில நூலை சிவமூர்த்தி சிவாச்சார்யா சுவாமிகள் வெளியிடுகிறார்.
 

 "ஞானதான்' என்ற பெயரில் இலவச கல்வி திட்டத்தை சாந்த வீர மகா சுவாமிகள்  துவக்கிவைக்கிறார். நித்யானந்த சுவாமிகளின் பதஞ்சலி யோக சூத்திரங்கள் அடங்கிய
டிவிடியை சிவமூர்த்தி முருக சரணரு வெளியிடுகிறார். மகளிருக்கான "லைப்பிளிஸ் டெக்னாலஜி' என்ற நிகழ்ச்சியை சிவருத்ர சுவாமிகள் தொடங்கி வைக்கிறார்.
 அன்று மாலையில் நித்யானந்த சுவாமிகள் எழுதிய "முக்தி வாழ்வு' என்ற புத்தகத்தை கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா வெளியிடுகிறார். 


 ஜனவரி 1-ம் தேதி காலை 8 மணிக்கு நித்யானந்தா பீடத்தில் சுவாமி நித்யானந்தரின் 33-வது பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. இதில் நித்யானந்த சுவாமிகள் கல்பதரு  தரிசனம் அளிக்கிறார்.



------------------------------------------------------------

நித்யானந்த பீடம் சுவாமிகள்  ,பட்டாபட்டிக்கு அளித்த Exclusive ( எச்சக்கலை )  பேட்டி..
அய்யா வணக்கம்.. இன்றைய பரபரப்பான சூழ் நிலையிலும் , எங்களுக்கு நேரம் ஒதுக்கிய உங்களுக்கு,  ப.மு.க வின் சார்பாக இந்த சிறிய அன்பளிப்பு..ப்ளீஸ்... தயவு செய்து இப்ப திறக்காதீர்கள்...
இன்று, தமிழக செய்திகளில், முதன்மை இடத்தில் இருப்பது  உம்மைப்பற்றித்தான்..  அதைப்பற்றி  வாசகர்களுக்கு....

தென்கோடியிலிருந்து  ,  வடக்கே உள்ள காஷ்மீர் மாநிலத்தின் சைவர்கள் வரை குண்டலினி யோகத்தை போற்றி வளர்த்திருக்கிறார்கள். தன்னை தானே அறிவது தான் யோகத்தின் நோக்கம். இதற்கு முதலில் வேண்டியது உடல். அதைதான் திருமூலர் "உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே" என்றார். திருமூலர், போகர் போன்றவர்கள் குண்டலினி ஞானம் பெற்றவர்களே. அவர்களில் ஒருவர்தான் நான்.. கடவுளின் மறுபிறப்பு..


சார்.. கடவுளை பற்றி, பிறகு பேசலாம்..இப்போது கலவி பற்றி..மீடியாக்கள்,  பலி வாங்கும் நோக்கத்தோடு , செயல்படுகிறார்கள் என்பதற்கு  இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்...

இடைமறித்து.. எது சார்.. இந்த 20 நிமிட வீடியோ ஆதாரமா?
இல்லை.. இல்லை...அதாவது  யோகத்தின் மூலம் , உடலையும் உயிரையும்
தனியாகப் பிரிக்கலாம்..செய்திகளில்  இருப்பது என் உடல் மட்டுமே..
உயிர் திருவண்ணாமலையில் உலவிக்கொண்டுள்ளது..

சே.. அதைதான் ஈர்யுடல் ஓருயிர் என்கிறார்களா?
அதாவது எல்லா யோக பயிற்சிகளும் முதுகெலும்பு வலிமையாக்குவதை
பற்றியும்   சுவாசப் பயிற்சியைப் பற்றியும், குண்டலினியை எழுப்பும் பயிற்சியைப் பற்றியும் சார்ந்ததாக இருக்கும்..மேலும்
அதை எழுப்பும்போது , யாராவது அருகில் இருக்கவேண்டும்..இந்த குண்டலினி-தூங்கி கொண்ட்டிருக்கும் சர்ப்பம் என சமஸ்கிருதத்தில் அறியப் படுகிறது
.


அதாவது படுத்துக்கொண்டு , ஒரு காலை மேலே தூக்கிப்போட்டால் முதுகெலும்பு வலுவடையும்..
அந்த தருணத்திலெ மேல்மூச்சு , கீழ்மூச்சு வாங்கும்..அது நல்ல மூச்சு பயிற்சி..
அப்போது , குண்டலினி மேலேரும்..சரி சார்.. புரிஞ்சுடுச்சு சார்....
அதுக்குத்தான் அந்த நடிகை உதவிசெய்திருக்கிறாரா..  இது தெரியாம , நானே உங்களைப் பற்றி தவறாக நினைத்துக்கொண்டேன்...




தவறு...அதாவது உடம்பில் 7 சக்கரங்கள் உள்ளது..





சரி கடவுளே.. எனக்கு நேரமாகிவிட்டது..
நடிகை Root chacra க்கு உதவியிருக்கிறார் என எழுதிவிடுகிறேன்..


இப்படி பத்திரிக்கையில் கிழிக்கிறார்களே.. வெட்கமா இல்லை..
முற்றும் துறந்தவன் முனிவன்.. நான் ஒரு சித்தர்..
எனது உடலை வைத்து உலகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்..
எனக்கு முக்கியம் உயிர்..அதாவது சக்கரம்...

உடுங்க சாமி... உங்க உடல் உலகத்திற்கு எதுக்கு ?.. அதையும், அந்தம்மாவுக்கே கொடுத்து விடுங்கள்..  பாவம்.. பச்சக்குழந்தை.. 


இனிமேல் என்ன பண்ணப் போகிறீர்கள்.?.நான் அமெரிக்கா போய், அங்கு குண்டலினி பற்றி வகுப்பு எடுக்கப்போகிறேன்..


பார்த்து சுவாமி..,
எந்த ரூம்க்குப் போனாலும் , தண்ணி வருகிறதா?. கரண்ட் இருக்கிறதா என்று  பார்ப்பதை விட , கதவு சரியாக மூடுமா?  ஏதாவது கேமரா உள்ளதா என்பதை,  உங்கள் மயிரை..உயிரை விட்டு பார்த்துவிட்டு உள்ளே செல்லவும்..

.
.
.
பதிவு வெளியிட உதவி   : நித்யானந்த பீடம்

சந்தாதாரர்களுக்கு

பதஞ்சலி யோக சூத்திரங்கள் அடங்கிய  டிவிடி  ரூ 1000
"ஆனந்தோத்சவா 2010' என்ற ஆங்கில நூல்  ரூ 700
நித்யானந்த சுவாமிகள் எழுதிய "முக்தி வாழ்வு'   கலர் படங்களுடன்   ரூ 7500
நித்யானந்த சுவாமிகள் கல்பதரு  தரிசனம்  - பெண்களுக்கு மட்டும் ரூ 50,000 ( இரவு மட்டும்)
வேறு எங்கும் கிடைக்காது..முக்கியமாக   சர்பஸ்யோகா-வும்
சுவாமிகளின் நேரடி கண்காணிப்பில் சொல்லித்தரப்படும்
...

5 ஆண்டு சந்தா ஒரே DD-யில் அனுப்பினால் , நடிகை , தன் தங்க கைகளால் ,
கால் மற்றும் , இடுப்பு வரை மசாஸ் செய்து  உங்களை மகிழிவிப்பார் என் பீடத்தின்  சார்பாக சொல்லிக்கொள்கிறோம்...



பாவங்களை போக்க ... அணுகுங்கள் சுவாமி நித்தியை...  ( சினிமா நடிகைகளுக்கு சிறப்புக்கட்டணம் உண்டு  )



அந்த கிப்ட் செட்ல என்ன இருந்தது என் அறிய ஆவலாயிருப்பவர்களுக்கு மட்டும்..
( வேற பெருசா ஒண்ணுமில்லை சார்.. காண்டம் பாக்கெட்.தான்
அதுல ப.மு.க அப்படீனு லோகோ பிரிண்ட் பண்ணியிருக்கோம்..
எல்லாம் விளம்பர யுகமாச்சே.
.)
.
.
.
கடைசியா பட்டாபட்டி உங்களுக்கு சொல்லக்கொள்ள விரும்புவது என்னான,


ஒவ்வொன்றின் பின்னாலும் ஓர் அரசியல் ஆதாயம் உண்டு...

கோடிகளில் பணம்புரளும் ஒரு திருட்டு சாமியாரின் உண்மை முகம்,  பாமரர்களுக்கு ஒரு பாடம்!

சன் டீவிக்கு அரசியல் வியாபாரம்!


எவனெவனையோ சாமியா கும்பிடுவதற்க்கு பதில், உங்கள பெத்த தாய், தந்தைய  கும்பிடுங்க...

அப்புறம்.. தலைவனுகளுக்கோ.. இல்ல நடிகைகளுக்கோ கோயில்
கட்டறத விட்டுபுட்டு , உங்க குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாய்
இருக்கப் பாருங்க சார்...

.
.
.

கோவா...இல்லை Gay-வா..விமர்சனம்



நடிகர்கள்: பிரேம்ஜி, ஜெய், வைபவ், சம்பத், ஸ்னேகா, பியா
இசை: யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: வெங்கட் பிரபு
தயாரிப்பு: சௌந்தர்யா ரஜினி


இந்த டீமை , அடிச்சுக்க இனி யாராவதுதான் பிறந்துதான் வரனும்..
பெரியவங்க அப்பவே  சொன்னாங்க....."மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி.." ஆங்க்....
.'புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?'

வெங்கட் பிரபு..  எப்படீங்க.. இப்படி?
நீங்க பிறவியலேயே அறிவுஜீவியா ?... இல்லை  நடுவுல  ஆனீங்களா.. அதை எப்படியாவது  அடுத்த படத்திலயாவது சொல்லுங்க...

முதல் 20 நிமிசம் , கிராமிய சூழ் நிலையில எடுத்திருக்காங்க பாருங்க.. அப்படியே கண்ல நிற்குது..  அதுல , குழந்தை வரம் வேண்டி , சாமிக்கு முன்னாடி அழுதுட்டு இருப்பாங்க....
சே.. கல்மனசுக்காரனும் கலங்கிடுவான்..

நான்,  ஒரு ஆளைப்.... போட்டுத் தள்ளனுமுனு பார்க்கிறேன் சார்..  கிடைக்க மாட்டிங்கிறாரு..     யாராவது பார்த்தா, எனக்கு உடனடியா , தந்தி அடிங்க..

சே.. சொன்னேன் பார்த்தீங்களா.. கிராமிய சூழ் நிலையிலே நான் அப்படியே ஐக்கியமாகிட்டேன்..
தந்தி அடிக்கனுமுனே  சில பேரு , திரியராங்க.. நீங்க, எதுக்கும்,  எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்க...

சொல்ல வந்ததை விட்டுவிடு , எங்கேயோ போயிட்டேன்..
ஆங்க்..... எங்க விட்டேன்.. போட்டுத் தள்றதில....

எனக்கு அறிவியல் சொல்லிக்கொடுத்த  வாத்தியாரத்தான் தேடிகிட்டு இருக்கேன் சார்.....

தக்காளி.. இவ்வளவு நாளா, ஆணும் , பெண்ணும் சேர்ந்தா குழந்தை பிறக்குமுனு பொய் சொல்லியிருக்காரு  சார்..
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்குங்களா?.

எங்க அண்ணன் வெங்கட் பிரபு , பாமரனனுக்கும் புரியமாறி , எவ்வளவு அழகா, காவியம சொல்லியிருக்காருனு படத்தப்  பார்த்தாதான் சார்.. தெரியும்.. 
( எப்படி சார் இந்த சீனை, சென்ஸார்ல விட்டாங்க......படத்தை,  ஒரு தவம் மாறி இயக்கியிருக்கிறார்....நன்றி வசந்த்..)

அப்புறம் மொத்த கேங்கும் மதுரைக்குப் போகுது சார்.. ( ஆமா.. ரெட்டையோட ஊர்தான்...)  அங்கிருந்து , ஜம்ப் பண்ணினா , நேரா கோவா சார்..

இங்க தான் சார் நிஜக்கதையே ஆரம்பிக்குது..
அதுல , தமிழ் உலகுக்கு புதுசா "Gay" பத்தி விளக்கம்.... சே.. கொன்னுட்டீங்க தலைவரே....
( உங்களை மட்டும் சொன்னா , எங்க தலைவி ..அதுதாங்க புது கல்யாணப் பொண்ணு  சௌந்தர்யா ரஜினி கோவிச்சுக்கும்..
அதனால , உங்களுக்கும் தான் மேடம்..கலக்குங்க...அப்பா இமய மலையிலிருந்து வருவாருங்களா   ?????..)

சீன் பை சீன்.. வாயப் பொளந்துட்டு பார்த்தேன் சார்..
 எங்க வீட்ல , தண்ணி குடிக்கிற சொம்ப காணேலேனு  , அப்பத்தா புலம்பிட்டு இருக்கு சார்..   வயசானவே.. அப்படித்தான் ..... யூத்தோட மனசப் புரிஞ்சுக்காம , சொம்ப காணேம்.. செருப்ப காணோமுனு...

பார்த்தீங்களா.  பெரிசு என்னமோ சொல்லுதுனு , நான் சொல்ல வந்ததை மறந்துட்டேன்...
சரி.சார். நான் பேசுனா, பேசிக்கிட்டேயிருப்பேன்..அதனாலே

இது குடும்பத்தோட பார்க்க வேண்டிய அருமையான படம்..
.
யோவ்.. எல்லாமே அவசரம்.. குறை மாசத்தில பொறந்திட்டீங்களா?..
பேசிட்டி இருக்கும்போது எதுக்கையா ஓடறீங்க..
.
நான் குடும்பமுனு சொன்னதை , ரஜினி மற்றும் கங்கை அமரன் குடும்பத்தை...

.
.
ஆனாலும் , கோயில் கட்டி  கும்பிடனுமய்யா..
என்ன அறிவு..என்ன பொறுப்பு..
சே.. இனி பேசினா அழுதுடுவேன்.....

$20 டாலர எதுக்கு சார் அ நாவிசயமா செலவு பண்றீங்க.. இந்தாங்க $2 டாலர் டீ.வி.டீ- னு , சொல்லிக்கொடுத்தான் பாருங்க அந்த வீடியோ கடைக்காரன்..
அவனைக் கும்பிடுங்க சார்.. எந்த தீய சக்தியும் உங்களை அணுகாது..

யோவ்.. வெண்ணை.. படத்தில நல்லதே இல்லையானு நீங்க முணுமுணுக்கிறது எனக்கு கேக்குது சார்..
யார் சார் சொன்னா, நல்ல விசயம் இல்லையினு..

அதைய எல்லாம் சேர்த்தா,   20 நிமிசம்தான் வரும்..
என்ன?  2 அல்லது   3  நிமிசம்,   தேவ நாதாரி, எடுத்த  படத்தை விட அதிகமாயிருக்கும்..

கடைசியாக,  அமரன் குடும்ப டிரேட் மார்க்கை...தக்காளி... எவனாலும் அழிக்கமுடியாது..


நன்றி.. வணக்கம்..
.
.
.

Tuesday, March 2, 2010

ப.மு.க தேர்தல் ரிசல்ட்...



வெற்றி..வெற்றி..

அண்ணன் ரெட்டையின் வேண்டுகோளுக்கு இணங்க, தேர்தல் நாளை , ஏப்ரல் 10-லிருந்து,   மார்ச் 2 தேதிக்கு மாற்றி , அதை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்..

சில சந்தேகபிராணிகள் கேட்கலாம், '  என்ன அவசரம் என்று? '..
உங்களுக்காக....ஒரு சில வார்த்தைகள்...

இது வேகமான உலகம்.. இந்த யுகத்தில் ஓரிடத்தில் நின்று கொண்டு
கண்ணீர் விட்டு , கதறியழுதால், பின்னே வரும் சமூகம், தன் தங்கக் கால்களால்  உங்களை மிதித்துவிட்டு செல்ல வாய்ப்புண்டு...

உதாரணத்துக்கு ,
அவசரமாக , உங்களுக்கு ரூ 10,000 தேவைப்படுகிறது....உங்கள் நண்பர் ,
100 ரூ நோட்டுக்கள் அடங்கிய , 1 கட்டை தருகிறார்..

நன்றி சொல்லிய பின் , அதை முழுவதும் எண்ணினால் ,
உங்கள் நண்பர் , உங்களைப்பற்றி என்ன நினைப்பார்...?

அந்தப் பணத்தில, 1 முதல் 20 வரை எண்ணுங்கள்..
சரியாக இருந்தால்........எதற்காக நேரத்தை  வீணடித்து 100 வரை எண்ண வேண்டும்?
புரிந்திருக்கும் என நினைக்கிறேன்...

சரி.. நமது ஆராய்சியை தொடர்வோம்..

இதுவரை வாக்களித்தவர்கள் 119 பேர்....இவற்றைப்பற்றி ஆராய்ந்ததில் ,

"நீ கிழிச்சது போதும் போய்யா..."  ( 9 பேர் )
இது என்மீது கொண்டது  காண்டா.. இல்லை அன்பா எனப் புரியாததால்,
இவர்களை  நேர்காணல் காண , வெளியூரின் ராணுவம் அனுப்பபடுகிறது...

"பொழப்ப போயி பாருமையா.."  ( 8 பேர் )

எனது பாச மலர்கள் சிலர், என்மீது கொண்ட அக்கறையினால் "பொழப்ப போயி பாருமையா.." எனக்  ஓட்டளித்துள்ளனர்..  எனவே , அவர்களின் பாசத்தை மெச்சி , மங்குனி மற்றும் ஜெய்லானி அவர்களால்,  இந்த 8 பேருக்கும்,  உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என்பதை இந்த தேரத்தில் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்..

"என்னமோ பண்ணித் தொலை..." ( 11 பேர் )
இவர்கள் படித்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை..  இவர்களை நினைக்கும் போது, "படித்தவன் நாட்டை கெடுத்தான்.. படிக்காதவன் வீட்டை கெடுத்தான் "
என்று பிரான்ஸ் நாட்டு முத்து சொன்ன , முத்தான  ( பிரெஞ்ச் முத்தமில்லை.... ) வரிகள்தான்  மனதில் தோன்றுகிறது..

"எழுதித்தொலை..எங்களுக்கு வேற வழி..." ( 99 பேர் )
தன்மானச்சிங்கங்கள் , வருங்காலத்தூண்கள்..
இவர்களை பற்றி சொல்லும் போது ,

கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது..
கைகள் நடுங்குகிறது..
நாக்கு புரள மறுக்கிறது..
இதயம் வேகமாகத் துடிக்கிறது..

இவர்களுக்காக நான் சொல்லிக்கொள்வது  ஒன்று மட்டுமே..




நன்றி...


மேலும், பிரகாஸ் (எ) சாமக்கோடாங்கி , தேர்தலில் ஊழல் நடந்திருக்குமோ
என ஐயம் கொண்டு என்னை தொடர்பு கொண்டார்........
சந்தேகத்தை நிவர்த்தி செய்யும்பொருட்டு , கட்சியின்  சார்பாக ரூ 1,00,000 அனுப்பபட்டுவிட்டது...

பெருவாரியான வாசகர்களின் வேண்டுகோள்படி,
கிழிப்பது தொடரும்.... என்பதை  இந்த நேரத்தில்  சொல்லிக்கொண்டு,    வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றியை  கூறிக்கொள்ள   கடமைப்பட்டுள்ளேன்...
.
.
.